பேதையென ஒரு பெண்மேகம்
ஓ மேகமே
நீயொரு
பேதைப்பெண்தான்
புகுந்த வானவீட்டில்
மின்னல் சாட்டைகளால்
நிதம்தோறும் வதைபட்டு
மழையெனக்கண்ணீர் வடித்து
கோபம் கொண்டு
பிறந்த பூமி வீட்டிற்கு வந்தாலும்
சூரியக் கணவன்
சுட்டெரித்து அழைத்த கணத்தில்
பழையன மறந்து
காற்றில் பறந்து
வான வீட்டிற்கு
சென்று விடுகிறாயே
ஓ மேகமே
நீயும் ஒரு பேதைப் பெண்தான்!
*******************************
*******************************
1 comment:
அருமை!!
Post a Comment