Jan 17, 2015

பேதையென ஒரு பெண்மேகம்  




ஓ மேகமே 


நீயொரு 


பேதைப்பெண்தான் 

புகுந்த வானவீட்டில் 

மின்னல் சாட்டைகளால் 

நிதம்தோறும் வதைபட்டு 

மழையெனக்கண்ணீர் வடித்து 

கோபம் கொண்டு 

பிறந்த பூமி வீட்டிற்கு வந்தாலும்  
சூரியக் கணவன்

சுட்டெரித்து அழைத்த கணத்தில் 

பழையன மறந்து

காற்றில் பறந்து

வான வீட்டிற்கு 

சென்று விடுகிறாயே

ஓ மேகமே 

நீயும் ஒரு பேதைப் பெண்தான்!






*******************************

1 comment:

காயத்ரி said...

அருமை!!