இங்கு நான எழுதிய கவிதைகளை, என்னுடைய க(ருத்து)விதைகளை மற்றும் அறிவியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளேன். அன்பர்கள் அனைவரும் இவ்வுலகத்தினுள் இன்ப சுற்றுலா சென்று வருக!.
Sep 18, 2006
உள்ளூரத்தேடிய உணர்வுகள்
இப்போதெல்லாம்
உள்ளிருக்கும் உயிர்வரை
உற்று -
இயல்பு சிறிதும் பிறழாமலே
உற்று உற்று
நோக்கிடினும்
உண்மைகள்
புரிவதில்லை
என் மனவெளியின்
ஒற்றையடிப்பாதையில்
ஓராயிரம்
ஆண்டுகளாய் பயணித்தும் - மன
வெளிச்சம் காண இயலவில்லை
அருந்துகிற நீர்
நிச்சலனத்தினூடேயும
நித்தமும்
நித்திரைத் தருணங்களிலூடேயினும்
என்னுடம்பில் - ஒட்டுவதில்லை
என் சுவாசக்காற்று
என்னுள் - சுதந்திரமாக
சுற்றுத்திரிந்திடினும்
உயிரை உண்மையோடு
உரசுவதில்லை
கண்ணிமை கூட
அதன் உள்ளூரத் -
தூங்காதென் கண்களை
தொட்டுத்தழுவுவதில்லை
ஆன்மாவின் ஆதிக்கமற்ற
அந்தரங்கங்களை
என் சிந்தையெங்கிலும்
சேதாரத்தோடு சிந்திய -
மிச்சங்களாகக்கூட
சேமிக்க முடியவில்லை
எனக்குள்ளே - எங்கெங்கு
நோக்கினும்
எட்டுத்திசை எழுகடலென்று
உள்ளூரத்தொலைந்து
உன்மத்தம் பிறழ்ந்து
திரிந்திடினும்
நான் யாரென்ற
நமத்துப்போன நிந்தனைகள்
எனக்கே புரிவதில்லை
தொலைந்த இயல்புகள்
ஓ வண்ணத்துப்பூச்சிகளே
உங்கள் உற்சாகத்தை
என்றென்றும்
இழந்து விடாதீர்கள்
ஓ மலர்களே
உங்கள் நிறங்க்ளை
தொலைத்து விட
எப்பொழுதும்
சம்மதித்து விடாதீர்கள்
ஓ தென்றலே
உங்களிக்குள்ளிருக்கும்
உன்னதத்தினை
எவ விடத்துமிழக்க
சம்மதித்து விடாதீர்
ஓ சிட்டுக்குருவிகளே
உங்கள் சிறகு
சுதந்திரங்களை
எந்நிலையிலும்
பலவீனமாக்கி விடாதீர்கள்
ஓ இனிய பறவைகளே..
உங்களின்பத்தினை
எங்கும்
இழந்து விடத் துணியாதீர்
ஓ அணில் குஞ்சுகளே
உங்கள் தூதுகலத்தினை
என்றென்றும்
துச்சமாக எண்ணி
விட வேண்டாம்
ஓ இயற்கையன்னையே
உன் ஏழிலழகை
ஊமையாக்கி விடாதே
ஏனெனில்
மனிதன்
................
................
................
................
................
Subscribe to:
Posts (Atom)