Sep 18, 2006

தொலைந்த இயல்புகள்




ஓ வண்ணத்துப்பூச்சிகளே

உங்கள் உற்சாகத்தை

என்றென்றும்

இழந்து விடாதீர்கள்



ஓ மலர்களே

உங்கள் நிறங்க்ளை

தொலைத்து விட

எப்பொழுதும்

சம்மதித்து விடாதீர்கள்



ஓ தென்றலே

உங்களிக்குள்ளிருக்கும்

உன்னதத்தினை

எவ விடத்துமிழக்க

சம்மதித்து விடாதீர்


ஓ சிட்டுக்குருவிகளே

உங்கள் சிறகு

சுதந்திரங்களை

எந்நிலையிலும்

பலவீனமாக்கி விடாதீர்கள்


ஓ இனிய பறவைகளே..

உங்களின்பத்தினை

எங்கும்

இழந்து விடத் துணியாதீர்


ஓ அணில் குஞ்சுகளே

உங்கள் தூதுகலத்தினை

என்றென்றும்

துச்சமாக எண்ணி

விட வேண்டாம்



ஓ இயற்கையன்னையே

உன் ஏழிலழகை

ஊமையாக்கி விடாதே



ஏனெனில்

மனிதன்

................

................

................

................

................

No comments: