Sep 10, 2006

குருட்டுப்பார்வை




என் கண்கள்

எதையும் கண்டதில்லை

எத்திசையும்

காண்பதேயில்லை

வண்ணங்களில்

சிறைப்பட்டுக்கொண்டதில்லை

வடிவங்களால்

வரையரை யானதில்லை

ஒளியினில்

மயங்கியதில்லை



எவையெல்லாம்

எப்பிடியெப்பிடியெல்லாம்

இருக்குமோ

என்றெண்ணியதில்லை

ஒளி பிரிந்த, தொலைந்த -

அதன்

உருக்குலைந்த ஓசை

நான்

நித்தம்

கேட்பதினால் - நிழல்

படரபயணம் செய்ததில்லை



கடல், இருட்கடல் முழுகி

முத்துக்குளிப்பினும்

கிடைப்பதென்னவோ

கருமுத்து

சிறிதும்

ஒளியில்லா முத்து



என் மனப்பிரபஞ்சத்தில்

ஒளிச்சூரியன்

தினமும்

இறந்தே பிறந்தான் - மறுபடியும்

பிறந்தாலும் இறந்தான்

இருட்சூரியனோ

இறந்தாலும் பிறந்தான் - பின்

இறப்பையே தொலைத்தான்

அதனால்தான்

நான் இருளை

இருளில்

சுவாசிப்பவன் -




என் மனப்பச்சையம் ஒளியில்லா சுவாசத்தில்

அச் சுகமில்லா வாசத்தில் -

உயிரில்லா ஜீவிதம்

அஜ்ஜீவிதததின் கண்களிலோ

வண்ணாமில்லா வாழ்க்கை

வறண்டுபோன வயற்காடு

வெளிச்சமில்லா இடுகாடு




இருப்பினும் செப்பிடுவேன்

ஊன் உறுதியோடு

உள சுருதியோடு

என் மனது

வணண்மயமான தென்று

எச்சூரியனையும்

சுட்டெரிக்குமென்று

1 comment:

- செகு - said...

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சந்திரசேகரன்....

அடிக்கடி வந்து செல்லவும்....


செந்தில்குமாரன்