Dec 21, 2009

அவதார் - மாபெரும் திரைக்காவியம் - விமர்சனம்




கிட்டத்தட்ட பதினாலு வருட நேர்த்தியான கருத்துருவாக்கம்!

ஒவ்வொரு பிரேமிலும் கற்பனைக்கெட்டாத உலகத்திற்கே நம்மை இழுத்துச் செல்லும் மாயாஜால உலகம்!

மனதை வசியவைத்த திரைக்கதை அமைப்பு மற்றும் கண்களை கொள்ளை கொள்ளும் கிராபிக்ஸ் சித்து விளையாட்டு.

ஏறக்குறைய ஐயாயிரம் கோடிகளை அசுரத்தனமாக விழுங்கிய தொழில்நுட்பம்!

அதுதான் அவதார்!

டெர்மினேட்டர் (Terminator), ஏபிஸ் (Abyss), ஏலியன்ஸ் (Aliens), டைட்டானிக் (Titanic) போன்ற வரலாறு படைத்த படங்களை கொடுத்துவிட்டு டாக்குமெண்டரி படங்களின் பக்கம் ஜேம்ஸ் கேமரூன் கவனத்தை செலுத்தியிருந்தாலும், இவரின் மனதில் பதினைந்து வருடங்களாக கருவாகி வந்த அவதார் எனும் திரைக்கதை, கேமரூனை மீண்டும் திரைப்படத் துறைக்கே கொண்டு வந்துள்ளது.

இனி கதை.
விண்வெளியில் தொலைதூர கிரகநிலவான பாண்டோரா-வில் இருக்கும் அரியவகை உலோகத்தை அடைவதற்கு நம் பூமியில் இருக்கும் ஒரு நிறுவனம் கி.பி. 2154-ல் முயற்சிக்கிறது. இதற்கு இடைஞ்சலாக இருப்பது அங்கே வசித்து வரும் நீலமான உடல் படைத்த, மனிதனை விட தொன்மையான, ஒன்பது அடி உயிரினம் நாவி( Na'vi). மனிதர்களை எதிரிகளாகப் பாவிக்கும் நாவி இனத்தை மசிய வைப்பதற்கு நம் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தந்திரம் உபயோகிக்கிறார்கள். அதுதான் நாவி இனத்தின் டி.என்.ஏ (DNA-மரபணு) வையும் நம் டி.என்.ஏ வையும் இணைத்து நாவி உடலமைப்பு போன்ற ஒரு கலவையான உயிரை அங்கே உருவாக்குவது - அதன் பெயர்தான் அவதார்.




அவதார் மூலம் நாவி உடலமைப்பில் மனித ஆத்மாவை நம்மூர் கூடு விட்டு கூடு பாயும் விதமாக உயிர் கொடுத்து நாவி இனத்தினூடே பழகி அவர்களது நம்பிக்கையை பெற முயற்சிக்கிறார்கள். (இயக்குனர் ஒரு பேட்டியில் இதனை இந்திய இதிகாசத்திலிருந்து தழுவி எடுத்ததாக தெரிவித்துள்ளார்!).
இம்முயற்சியில் தனது இரட்டைச்சகோதரன் இறந்ததை ஈடு கட்டும் விதமாக வரும் உடல் ஊனமுற்ற ஒரு ராணுவ வீரன் ஜேக், தானும் ஒரு அவதாரமாக உருவெடுக்கிறார். அவருக்கு இட்ட பணி, 'நாவி'யினத்தின் நம்பிக்கையைப் பெற்றபின் அவர்களின் பூர்வீக இடத்தை விட்டு வேறு பக்கம் நகரச் செய்வது. பிறகு அந்த இடத்தின் அடியிலிருக்கும் அரிய உலோகத்தை (unobtainium) பெறுவது.

ஜேக்கின் அவதார் அங்கிருக்கும் நேத்ரி (Neytiri) எனும் நாவி இளவரசியை சந்தர்ப்பவசமாக சந்தித்து அவள் மூலமாக அவ்வினத்தில் கலக்கிறது. அவதாருக்கும் நேத்ரிக்கும் காதல் மலர்கிறது.










அவதார் நாவிக்களை அவ்விடத்திலிருந்து அப்புறபடுத்துவது தோல்வியில் முடிய, மனிதர்கள் போரின் மூலமாக நாவிக்களை அகற்ற முயற்சிக்கிறார்கள். அதில்
விருப்பம் இல்லாத அவதார் மனிதர்களை எதிர்த்து நாவிக்களிக்கே உதவி செய்கிறார். வெல்வது யார் ? மனிதர்களா ? அல்லது மனிதனிலிருந்து அவதாரத்தின் துணையுடன் போரிடும் நாவிக்களா ? மீதி வெண்திரையில்.

கேமரூனின் அசாத்திய உழைப்பு ஒவ்வொரு நொடியிலும் மிகப்பிரமாண்டமாக தெரிகிறது. படம் பார்க்கும் முன்னரே "ஐமாக்ஸ்-3D"-ல் தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து சென்றது மிக நல்லதாகப் போனது. அவதாரின் பிரமாண்டத்தை அதன் உள்ளே நாமும் ஒரு அங்கமாகப் பார்ப்பது ஒரு சிறப்பு அனுபவம். கேமரூனின் தனித்துவமே லாஜிக்கை அழகாக மீறுவது. நம்மூர் காதல் கதைபோல பார்த்த உடன் இந்தப்படத்திலும் பற்றிக்கொண்டாலும், படம் பார்ப்பவர்கள் மனமும் அதனுடன் இயைந்து விடுகிறது. அது போல மனிதர்கள் நாவிக்களை எதிர்க்கும் கட்டத்திலும் நம் மனம் மனிதர்கள் வெல்லவேண்டும் என்று நினைப்பதை விட நாவிக்கள் வெல்வதையே விரும்புவதிலே தெரிந்து விடுகிறது கேமரூனின் திரைக்கதை நம் மனதை வென்று விட்டதை.






கேமரூன் பலவருட இடைவேளைக்குப் பின்னே இதை வெளிவிட்டாலும் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மீண்டும் நிரூபித்துள்ளார்.மேலும், பலவருடங்களுக்கு முன்னரே வரவேண்டிய திரைக்கதை, தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாய் இப்போதுதான் சாத்தியமாகி உள்ளது. காதலையும், மனித உணர்ச்சிகளையும் தொழில்நுட்பத்தின் தாக்கங்களையும் அழகாக ரசவாதக்கலவையாக ஒன்றுடன் ஒன்று இணைப்பதில் அவருக்கு நிகர் அவரே. அவருடைய முந்தைய பட டைட்டானிக்கிலும் (Titanic) காதலை அருமையாக செதுக்கி நம்மை உருக வைத்திருப்பார். இந்தப்படத்தில் ஒரு சிரமம், இதில் வருவது நாவி எனும் வேற்று கிரக உயிரினம். அதை ஒரு மனித ஆத்மா காதலிப்பது போல பார்வையாளர்களை வசியப்பத்துவது கொஞ்சம் சிக்கலான வேலை. ஆனால் அதில் வெற்றி பெற்றுள்ளார்.

படத்தில் சில குறைகளும் உள்ளன. சில நேரங்களில் காட்சியமைப்பு நம் கண்களை லேசாக பதம் பார்க்கிறது. படத்தில் சில இடங்களில் லாஜிக்குகள் மீறல் லேசாக உறுத்துகிறது. ஆனால் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் விதமாக பிரமிப்பான காட்சிகள் சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது.

கேமரூன் தனிக்காட்டு இராஜாவானாலும் மற்றவர்கள் துணை இல்லாமல் பிரமாண்டமான படத்தை அளிக்க முடியாதல்லவா. நாமும் அவதாரில் மற்ற முக்கியமான ஆட்களின் பங்களிப்பை பார்க்கலாம்.
இசை ஜேம்ஸ் ஹோர்னர் -- அபோகலிப்டா (Apocalypto) மற்றும் அபோல்லா (Apollo-13) போன்ற படங்களுக்கு இசையமைத்தவர். இதிலும் அருமையாக அசத்தியுள்ளார்.

எடிட்டிங்கிலும் ஸ்டீவென் மற்றும் ஜானுடன் இணைந்து கேமரூனின் கைவண்ணம் நேர்த்தியாகத் தெரிகிறது.

ஜூராசிக் பார்க் (Jurassic Park) மற்றும் லார்ட் ஆப தி ரிங்ஸ் (Lord of the Rings) படங்களில் பணி புரிந்த ஜோ லேட்டேரி, ஒளித்தந்திர நிபுணத்துவத்தில் -ல் (Visual Effects) இதுலும் ஒரு கலக்கி கலக்கி உள்ளார். மூன்று முறை ஏற்கனவே ஆஸ்கர் வென்ற ஒரு நிபுணர்.

அவதார்- திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல். அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு மாபெரும் திரைக்காவியம்.

அவதாரின் பிரத்யோக வலைத்தளம் இங்கே சொடுக்க

* செந்தில் *



Dec 20, 2009

கிட்டத்தட்ட பதினாலு வருட நேர்த்தியான கருத்துருவாக்கம்!

ஒவ்வொரு பிரேமிலும் கற்பனைக்கெட்டாத உலகத்திற்கே நம்மை இழுத்துச் செல்லும் மாயாஜால உலகம்!

மனதை வசியவைத்த திரைக்கதை அமைப்பு. கண்களை கொள்ளைகொள்ளும் கிராபிக்ஸ் சித்து விளையாட்டு.

ஏறக்குறைய ஐயாயிரம் கோடிகளை அசுரத்தனமாக விழுங்கிய தொழில்நுட்பம்!

அதுதான் அவதார்!

டெர்மினேட்டர், ஏபிஸ், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற வரலாறு படைத்த படங்களை கொடுத்து விட்டு டாக்குமெண்டரி படங்களின் பக்கம் ஜேம்ஸ் கேமரூன் கவனத்தை செலுத்தியிருந்தாலும், இவரின் மனதில் பதினைந்து வருடங்களாக கருவாகி வந்த அவதார் எனும் திரைக்கதை, கேமரூனை மீண்டும் திரைப்படத் துறைக்கே கொண்டு வந்துள்ளது.

இனி கதை.
விண்வெளியில் தொலைதூர கிரகநிலவான பாண்டோரா-வில் இருக்கும் அரியவகை உலோகத்தை அடைவதற்கு நம் பூமியில் இருக்கும் ஒரு நிறுவனம் முயற்சிக்கிறது. இதற்கு இடைஞ்சலாக இருப்பது அங்கே வசித்து வரும் நீலமான உடல் படைத்த, மனிதனை விட தொன்மையான, ஒன்பது அடி உயிரினம் நாவி. மனிதர்களை எதிரிகளாகப் பாவிக்கும் நாவி இனத்தை மசிய வைப்பதற்கு நம் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தந்திரம் உபயோகிக்கிறார்கள். அதுதான் நாவி இனத்தின் டி.என்.,ஏ வையும் நம் டி.என்.,ஏ வையும் இணைத்து நாவி உடலமைப்பு போன்ற ஒரு கலவையான உயிரை அங்கே உருவாக்குவது - அதன் பெயர்தான் அவதார்.

அவதார் மூலம் நாவி உடலமைப்பில் மனித ஆத்மாவை நம்மூர் கூடு விட்டு கூடு பாயும் விதமாக உயிர் கொடுத்து நாவி இனத்தினூடே பழகி அவர்களது நம்பிக்கையை பெற முயற்சிக்கிறார்கள். (இயக்குனை ஒரு பேட்டியில் இதனை இந்திய இதிகாசத்திலிருந்து தழுவி எடுத்ததாக தெரிவித்துள்ளார்!). இம்முயற்சியிலிருந்து தனது இரட்டைச்சகோதரன் இறந்ததை ஈடு கட்டும் விதமாக வரும் உடல் ஊனமுற்ற ஒரு ராணுவ வீரன் ஜேக் ஒரு அவதாரமாக உருவெடுக்கிறார். அவருக்கு இட்ட பணி, நாவியினத்தின் நம்பிக்கையைப் பெற்றபின் அவர்களின் பூர்வீக இடத்தை விட்டு வேறு பக்கம் நகரச் செய்வது. பிறகு அந்த இடத்தின் அடியிலிருக்கும் அரிய உலோகத்தை பெறுவது.

ஜேக்கின் அவதார் அங்கிருக்கும் நேத்ரி எனும் நாவி இளவரசியை சந்தர்ப்பவசமாக சந்தித்து அவள் மூலமாக அவ்வினத்தில் கலக்கிறது. அவதாருக்கும் நேத்ரிக்கும் காதல் மலர்கிறது. அவதார் நாவிக்களை அவ்விடத்திலிருந்து அப்புறபடுத்துவது தோல்வியில் முடிய, மனிதர்கள் போரின் மூலமாக நாவிக்களை அகற்ற முயற்ச்சிக்கிறார்கள். அதில் சற்றும் சம்மதம் இல்லாத அவதார் மனிதர்களை எதிர்த்து நாவிக்களிக்கே உதவி செய்கிறார். வெல்வது யார் ? மனிதர்களா ? அல்லது மனிதனிலிருந்து அவதாரத்தின் துணையுடன் நாவிக்களா ? மீதி வெண்திரையில்.

கேமரூனின் அசாத்திய உழைப்பு ஒவ்வொரு நொடியிலும் மிகப்பிரமாண்டமாக தெரிகிறது. படம் பார்க்கும் முன்னரே ஐமாக்ஸ் இல் தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து சென்றது மிக நல்லதாகப் போனது. அவதாரின் பிரமாண்டத்தை அதன் உள்ளே நாமும் ஒரு அங்கமாகப் பார்ப்பது ஒரு சிறப்பு அனுபவம். கேமரூனின் தனித்துவமே லாஜிக்கை அழகாக மீறுவது. நம்மூர் காதல் கதைபோல பார்த்த உடன் இந்தப்படத்திலும் பற்றிக்கொண்டாலும், படம் பார்ப்பவர்கள் மனமும் அதனுடன் இயைந்து விடுகிறது. அது போல மனிதர்கள் நாவிக்களை எதிர்க்கும் கட்டத்திலும் நம் மனம் மனிதர்கள் வெல்லவேண்டும் என்று நினைப்பதை விட நாவிக்கள் வெல்வதையே விரும்புவதிலே தெரிந்து விடுகிறது கேமரூனின் திரைக்கதை நம் மனதை வென்று விட்டதை.

பலவருடங்களுக்கு முன்னரே வரவேண்டிய திரைக்கதை, தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாய் இப்போதுதான் சாத்தியமாகி உள்ளது. கிட்டத்தட்ட பதினாலு வருட நேர்த்தியான கருத்துருவாக்கம்!
ஏறக்குறைய ஐயாயிரம் கோடிகளை அசுரத்தனமாக விழுங்கிய தொழில்நுட்பம்!
ஒவ்வொரு பிரேமிலும் கற்பனைக்கெட்டாத உலகத்திற்கே நம்மை இழுத்துச் செல்லும் மாயாஜால உலகம்!
மனதை வசியவைத்த திரைக்கதை அமைப்பு. கண்களை கொள்ளைகொள்ளும் கிராபிக்ஸ் சித்து விளையாட்டு.

அதுதான் அவதார்!

தேர்மினடர், ஏபிஸ், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற வரலாறு படைத்த படங்களை கொடுத்து விட்டு டாக்குமெண்டரி படங்களின் பக்கம் ஜேம்ஸ் கேமரூன் கவனத்தை செலுத்தியிருந்தாலும், இவரின் மனதில் பதினைந்து வருடங்களாக கருவாகி வந்த அவதார் எனும் திரைக்கதை, கேமரூனை மீண்டும் திரைப்படத் துறைக்கே கொண்டு வந்துள்ளது.

இனி கதை.
விண்வெளியில் தொலைதூர கிரகமான பாண்டோரா-வில் இருக்கும் அரியவகை உலோகத்தை அடைவதற்கு நம் பூமியில் இருக்கும் ஒரு நிறுவனம் முயற்சிக்கிறது. இதற்கு இடைஞ்சலாக இருப்பது அங்கே வசித்து வரும் நீலமான உடல் படைத்த, மனிதனை விட தொன்மையான ஒன்பது அடி உயர உயிரினம் நாவி. மனிதர்களை எதிரிகளாகப் பாவிக்கும் நாவி இனத்தை மசிய வைப்பதற்கு நம் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தந்திரம் உபயோகிக்கிறார்கள். அதுதான் நாவி இனத்தின் டி.என்.,ஏ வையும் நம் டி.என்.,ஏ வையும் இணைத்து நாவி உடலமைப்பு போன்ற ஒரு கலவையான உயிரை அங்கே உருவாக்குவது - அதன் பெயர் அவதார். அவதார் மூலம் நாவி உடலமைப்பில் மனித ஆத்மாவை நம்மூர் கூடு விட்டு கூடு பாயும் விதமாக உயிர் கொடுத்து நாவி இனத்தினூடே பழகி அவர்களது நம்பிக்கையை பெற முயற்சிக்கிறார்கள். (இயக்குனை ஒரு பேட்டியில் இதனை இந்திய இதிகாசத்திலிருந்து தழுவி எடுத்ததாக தெரிவித்துள்ளார்!).

இம்முயற்சியிலிருந்து தனது இரட்டைச்சகோதரன் இறந்ததை ஈடு கட்டும் விதமாக வரும் உடல் ஊனமுற்ற ஒரு ராணுவ வீரன் ஜேக் ஒரு அவதாரமாக உருவெடுக்கிறார். அவருக்கு இட்ட பணி, நாவியினத்தின் நம்பிக்கையைப் பெற்றபின் அவர்களின் பூர்வீக இடத்தை விட்டு வேறு பக்கம் நகரச் செய்வது. பிறகு அந்த இடத்தின் அடியிலிருக்கும் அரிய உலோகத்தை பெறுவது.

ஜேக்கின் அவதார் அங்கிருக்கும் நேத்ரி எனும் நாவி இளவரசியை சந்தர்ப்பவசமாக சந்தித்து அவள் மூலமாக அவ்வினத்தில் கலக்கிறார். அவதாருக்கும் நேத்ரிக்கும் காதல் மலர்கிறது. அவதார் நாவிக்களை அவ்விடத்திலிருந்து அப்புறபடுத்துவது தோல்வியில் முடிய, மனிதர்கள் போரின் மூலமாக நாவிக்களை அகற்ற முயற்ச்சிக்கிறார்கள். அதில் சற்றும் சம்மதம் இல்லாத அவதார் மனிதர்களை எதிர்த்து நாவிக்களிக்கே உதவி செய்கிறார். வெல்வது யார் ? மனிதர்களா ? அல்லது மனிதனிலிருந்து அவதாரத்தின் துணையுடன் நாவிக்களா ? மீதி வெண்திரையில்.

கேமரூனின் அசாத்திய உழைப்பு ஒவ்வொரு நொடியிலும் மிகப்பிரமாண்டமாக தெரிகிறது. படம் பார்க்கும் முன்னரே ஐமாக்ஸ் இல் தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து சென்றது மிக நல்லதாகப் போனது. அவதாரின் பிரமாண்டத்தை அதன் உள்ளே நாமும் ஒரு அங்கமாகப் பார்ப்பது ஒரு சிறப்பு அனுபவம். கேமரூனின் தனித்துவமே லாஜிக்கை அழகாக மீறுவது. நம்மூர் காதல் கதைபோல பார்த்த உடன் இந்தப்படத்திலும் பற்றிக்கொண்டாலும், படம் பார்ப்பவர்கள் மனமும் அதனுடன் இயைந்து விடுகிறது. அது போல மனிதர்கள் நாவிக்களை எதிர்க்கும் கட்டத்திலும் நம் மனம் மனிதர்கள் வெல்லவேண்டும் என்று நினைப்பதை விட நாவிக்கள் வெல்வதையே விரும்புவதிலே தெரிந்து விடுகிறது கேமரூனின் திரைக்கதை நம் மனதை வென்று விட்டதை.

கேமரூன் பலவருட இடைவேளைக்குப் பின்னே இதை வெளிவிட்டாலும் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மீண்டும் நிரூபித்துள்ளார்.மேலும், பலவருடங்களுக்கு முன்னரே வரவேண்டிய திரைக்கதை, தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாய் இப்போதுதான் சாத்தியமாகி உள்ளது. காதலையும், மனித உணர்ச்சிகளையும் தொழில்நுட்பத்தின் தாக்கங்களையும் அழகாக ரசவாதக்கலவையாக ஒன்றுடன் ஒன்று இணைப்பதில் அவருக்கு நிகர் அவரே. அவருடைய முந்தைய பட டைட்டானிக்கிலும் காதலை அருமையாக செதுக்கி நம்மை உருக வைத்திருப்பார். இந்தப்படத்தில் ஒரு சிரமம், இதில் வருவது நாவி எனும் வேற்று கிரக உயிரினம். அதை ஒரு மனித ஆத்மா காதலிப்பது போல பார்வையாளர்களை வசியப்பத்துவது கொஞ்சம் சிக்கலான வேலை. ஆனால் அதில் வெற்றி பெற்றுள்ளார்.

கேமரூன் தனிக்காட்டு இராஜாவானாலும் மற்றவர்கள் துணை இல்லாமல் பிரமாண்டமான படத்தை அளிக்க முடியாதல்லவா. நாமும் அவதாரில் மற்ற முக்கியமான ஆட்களின் பங்களிப்பை பார்க்கலாம்.
இசை ஜேம்ஸ் ஹோர்னர் -- அபோகலிப்டா மற்றும் அபோல்லா போண்டா படங்களுக்கு இசையமைத்தவர்தான். இதிலும் அருமையாக அசத்தியுள்ளார்.

எடிட்டிங்கிலும் ஸ்டீவென் மற்றும் ஜானுடன் இணைந்து கேமரூனின் கைவண்ணம் நேர்த்தியாகத் தெரிகிறது.

ஜோராச்சிக் பார்க் மற்றும் லார்ட் ஆப தி ரிங் படங்களில் பணி புரிந்த ஜோ லேட்டேரி, விசுவல் எபிபிச்ட்-ல் இதுலும் ஒரு கலக்கி கலக்கி உள்ளார். மூன்று முறை ஏற்கனவே ஆஸ்கர் வென்ற ஒரு நிபுணர்.







Sep 27, 2009

நீ சாஞ்சு போன சேதி

அப்பாவி சனமே நீங்க அழிஞ்சி போன சேதி
என்நெஞ் சத்துல அரஞ்சதென்ன
உடம்பிலிருந்து உசுர
கொஞ்சங்கொஞ்சமா உறிஞ்சி விட்டதென்ன

ஆறாத புண்ணுல
ஆயிரம்தேளுக - அங்குலஅங் குலமா
கொத்திவிட்டதென்ன
எண்ணக்கொப் பறையில - எரிஞ்சுஎரியாம
எங்கதேகம் கொதிச்சதென்ன ?
கண்ணுக்குள்ள - இரும்புக்குழம்ப
காச்சிஊத்தி விட்டதென்ன

நெஞ்சுக்குள்ள அமிலத்த
நஞ்சுநஞ்சா ஊத்திவிட்டதென்ன
நாளும்பொழுதுமா எங்கண்ணுல
இரத்தம்க சிஞ்சதென்ன
இராத்திரிப கலென்ன... ரணகளமானதென்ன ...

வீச்சருவா வீசி வீசி
ஏம்மூச்ச, பேச்ச - முழுசா
பறிச்சதென்ன
மொட்டக்கத்தி வச்சு வச்சு
பாதியும் மீதியுமா - எம்மனச
அறுத்ததென்ன

மிஞ்சிக்கிடக்கிற கொஞ்ச சனமே
சாஞ்சிக்கிடக்கிற உன்பொழப்பப் பாத்து
கொஞ்சகொஞ்சமா - மீதி உசுரு
புரையோடிப் போனதென்ன ?

அப்பாவித்தமிழ்சனங்க
ஆவி அடங்கினதென்ன - அதக்கண்டு
எந்நெஞ்சுக்குலை
நித்தம் சுருங்கினதென்ன

சிங்களப்பேய்களெல்லாம் - எங்க ரத்தம்
குடிச்சுக்குடிச்சு
கூத்தாடிக்கும்மி யடிச்சதென்ன
ஒப்பாரிவக்க வழியில்லாம
நாதியத்துப் போனதென்ன?

வீடுவிட்டு நாடுவிட்டு
ஊருவிட்டு உறவுவிட்டு
பந்தம்விட்டு சொந்தம்விட்டு
ஓடிஒளிஞ்சு தொலஞ்ச இந்தக்குலத்த
கடைசி வரை - தலைவிதி
வன்மம் வச்சு வன்மம் வச்சு
சென்மசென்மமா விரட்டுவதென்ன

சரித்திரமே நீ - என்னைக்கும்
தரித்திரமா மாறியதென்ன
எங்க பொழப்பு ஏழு சென்மமும்
நாறிப் போனதென்ன




பிரளயம் ஒய்ந்திடுமோ ?

இத்தமிழ்த் தளிர்கள்
விதையென
முளைத்தெழா - விறகென
வீதிகளில் வெற்றுயிர்
கருகிச்சரிய !

முழு இனமே
மந்தை மந்தைகளாய்- எட்டுத்திக்கிலும்
சுட்டுத் தெறிக்க
வாசல் வாசலாய் - சனங்கள்
ஈசல் ஈசலாய் சிதறிக்கிடக்க

என்நெஞ்சுத்தசை
அணுஅணுவாய் பிளந்து
கிழிந்தழிந்ததே
உள்ளினும், வெளியினும் ஊனுயிர் தொலைந்ததே !!

இதுகாறும் இச்சமூகம் இவ்விடத்தே
பூத்துக்குலுங்கிய இத்தேசமே
நீ பிணங்களின் விளைநிலமா ?
கொள்ளிவாய்ப் பேய்களினினும் - கொடூர
மனம்கொள் சிங்களர்களின்
கொலைக்களமா?

சூத்திரர்களின் சூழ்ச்சிக்கரங்களில்
சுதந்திரத்தை சுட்டெரிக்கச்
செய்திட்ட சுடுகாடா ?
விதியெல்லாம் விளையாடி - ஒளிந்தோடி
வீழ்ச்சியடைந்த வெருங்காடா?

ஹிட்லரும் முசோலினியும்
சேர்ந்து உருவான ராசபக்சேயின்
சதிராட்டம் தொலைந்தொழியுமோ?
இப்பிணம்தின்னிப் பேய்களின்
குருதித்தாகம் எம் வேகம் தடுத்திடுமோ?

நாட்டாமை நாடுகள் அனைத்தும்
நல்வழி உணர்ந்திடுமோ?
சூதுகொண்ட ஊழிக்காலம்
உருத்தெரியாமல் அழிந்திடுமோ?

நாளொரு பொழுதும் நரகமாகிப்போன
வன்கொடுமையும் கழிந்திடுமோ?
இருள்சூழ் - எம் உலகில்
ஒளிச்சூரியன் ஓரளவேனும்
உதித்திடுமோ?

ஊனுயிர் உருக்குலைத்த இப்பிரளயம்
எப்பிறவியில் ஓய்ந்திடுமோ ?
உண்மை உயிர்த்தெழுமா?
இக்குலம் தழைத்திடுமோ?

Feb 6, 2009

pongal 2009

சிந்து சமவெளி நாகரீகத்தில் ஜல்லிக்கட்ட

ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

தமிழர் இலக்கியத்தில் ‘கொல்லேறு தழுவல
்’என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது.

இன்றளவும் இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறு தழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும், அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீர சோதனைதான். 



 

இந்த மண்ணுல நம்ம மனுசனோட வளர்ச்சியை நினைச்சு பார்த்தீங்கன்னா தெரியும் அவன் விலங்கிலிருந்து மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து இன்னைக்கு உலகத்தில் அங்கிங்கெனாதபடி ஈரேழு திசைகளையும் தன் கட்டுக்குள் வசப்படுத்தியிருகிறான்னு. அதற்கான மூலகாரணமே கற்காலத்து மனிதன் ஆற்றுவெளி சமுதாயத்தை உருவாக்கியதிலிருந்து வந்த வாழ்க்கைமுறைதான். ஆற்றுவெளியின் அவன் ஆரம்பிச்ச உழவுத்தொழில் நாகரீக வளர்ச்சியின் வித்து, அது விருட்சமாகி, பல்கிப்பெருகி விண்ணையே வசப்படுத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கு.

 

நம்ம பண்டைய தமிழர்கள் இந்த உழவுத்தொழிலின் முக்கியத்துவம் தெரிஞ்சு வந்ததனாலேயே, அதன் ஆதாரமான இயற்கையை வணங்கி அதோடு ஒன்றினைந்து வாழ்ந்திருக்காங்கன்னு தெரியுது. அறிவியலே வளர்ச்சியடையா அக்காலத்தில் தங்களோட அறிவின் வளர்ச்சியினாலே வானிலை மற்றும் பருவகால மாற்றங்களை தெளிவாக தெரிஞ்சு காலங்களை இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர், முன்பனி, பின்பனி எனப்பகுத்து அதுப்படி உழவுத்தொழிலை செம்மைப்படுத்தி வந்திருக்காங்க. அதுல இளவேனிற் காலம் அவங்களுக்கு முக்கியமான காலம். ஏன்னு பார்த்தீங்கன்னா அப்பதான் அந்த உழவின் பயனை தம் வாழ்வின் வசந்தங்களை மகிழ்ச்சியாக தொடங்குகிற காலம் – அதனால தான் இளவேனிற் காலத்தை அவங்க புத்தாண்டின் தொடக்கமாக தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு தெரியுது.

தமக்கு உணவுதந்த அந்த ஆதார சக்தியான ஆதவனை வழிபட்டு, இயற்கைக்கு உணவை பொங்கி வரும் பொங்கலாக படையலிட்டு ஒரு விழாவாக அதை நம்ம தமிழ் சமுதாயத்தின் அடையாளமா கொண்டாட ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு நம்ம தமிழர்கள் உலகின் எந்தக்கோடியிலிருந்தாலும் அந்த பொங்கல் திருநாளை கொண்டாடுறது நம்ம பண்பாட்டின் ஒரு அடையாளம்.

 

அது சரி, பூலோகத்தின் இன்னொரு கோடியில், ஆசுலே மற்றும் கூப்பர் ஆத்துவெளியில, அன்றைய தமிழர்களின் இன்றைய சந்த்திகளான வாழ்ந்து கொண்டிருக்கும் சார்லச்டன் தமிழ்ச் சமுதாயம் தைப்பொங்கல் திருநாளை அன்னிய மண்ணில் எப்படி கொண்டாடி மகிழ்கிறாங்கன்னு வாங்க போயி பார்க்கலாமா ?

 

 

 

பொங்கல் விழா அன்னைக்கு வர்ற பார்வையாளர்களுக்கு அந்த ஒரு நாள்-திருநாள், ஆனா அன்றைய விழாக்கலைஞர்களுக்கு அன்னைக்கு மட்டுமில்ல கடந்த பல வாரங்களாகவே கொண்டாட்டமான நாட்கள். எப்பிடின்னு கேட்டீங்கன்னா, விழாவிற்காக ஆறேழு வாரங்களுக்கு முன்னாலே பயிற்சி மற்றும் ஒத்திகைக்காக கூடி, மத்தவங்க ஒத்திகையில பண்ற தப்ப பார்த்து சிரிச்சு, தாமே பண்ற தப்பை சமாளிச்சு, எல்லாரும் சமைச்சு கொண்டு வர்ற அத்தனை சாப்பாட்டு வகைகளையும் ஒரு கட்டு கட்டிட்டு, சுகமா கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சு, மத்தவங்கள கேலி பண்ணி், அதகளம் பண்ணி- மொத்தத்தில பல வாரக்கடைசி நாட்கள் கலாட்டா கச்சேரியாத்தான் இருந்துச்சு.

 

 சங்கத்தலைவர் சுந்தர்தான் அயராத வேலைப்பளுவிற்கு மத்தியில் பல நாட்களாக அத்தனை ஆட்களையும் இழுத்துப் பிடிச்சு பல கலை நிகழ்ச்சிகள் உருவாகக் காரணமா இருந்தார்.

 

இந்த தடவை டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம்…மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான் வசதி, ஒலி, ஒளி  அமைப்பு, உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம்ன்னு நீங்க பார்த்தாலே தெரியும். வாங்க உள்ளே போகலாம்.

 

ஆகா….இதென்ன தப்பித்தவறி தமிழ் நாட்டுக்குள்ளேயே வந்திட்டோமா ?....எங்க பார்த்தாலும் கண்ணைப்பறிக்கிற மாதிரி பட்டுப்புடவை, வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்டையில நம்ம மக்கள் – ஒரு கலக்கு கலக்கிட்டாங்க போங்க. விழா ஏற்பாடுகளை அரக்க பரக்க ஏற்பாடு பண்ற மக்கள் சில பேர், ஒத்திகைகளை மனசில பார்த்துகிட்டே வெளியே பரபரப்பு தெரியாம நண்பர்கள் கிட்ட பேசிகிட்டு இருக்கிற சில பேர், சுத்தி சுத்தி ஓடியாடி உற்சாகமா அரங்கத்தையே அதிர வைக்கிற சுட்டிப்பசங்க சில பேர், பல நாட்கள் கழிச்சு பார்க்கிற சில நண்பர்களோட அரட்டை அடிக்கிற மக்கள் சில பேர், உள்ள வர்ற நம்ம மக்களை வரவேற்கிற மாதிரி…அவங்க கொண்டு வர்ற உணவு பதார்த்தங்கள அப்பிடியே மோப்பம் பார்க்கிற இளவட்டங்கள் சில பேர், - இப்படி பல வித நண்பர்களை பார்க்கிறதே கண்கொள்ளா காட்சியா இருக்கு, இல்லையா.

 

சிறுமி இனியாவின் நடனம் பார்வையாளர்களுக்கு அருமையான விருந்து – பார்த்துகிட்டிருந்த சின்னப்பசங்களும் ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க.

 

அடுத்தது – ஏலோலோ நாட்டிய நாடகம். மீனவர்களின் வாழ்க்கையில் படும் அவதிகளை, அவ்வாழ்வின் அல்லல்களை அப்பிடியே படம் பிடிச்சுகாட்டுற மாதிரி நடிச்சிருந்தாங்க. சுந்தர், யுவராசு, கொளசிக் மற்றும் செந்தில் மீனவர்களின் ஒவ்வொரு காலகட்டங்களை நடிச்சு நடனமாடி காட்டிகிட்டிருக்காங்க. படகோட்டி துடுப்பு போடுகிற மீனவ மக்களா நடிக்கிறது சந்தோசு, உதய், விக்னேசு, சிவா. மீனவர்களின் கடின வாழ்க்கையை நாடக நடினமாக பார்க்கிற பார்வையாளர்களின் மனச கலங்கடிச்சிட்டாங்க.

இப்ப நீங்க பாக்கிறது, கீதா, சானகி, லட்சுமி, சந்தியா, வானதி, மற்றும் வினு குழுவின் கும்மி நடனம். பட்டுப்புடவையில பகட்டா வந்திருந்து ஆடிறாங்க பாருங்க ஆட்டம் -  நம்ம ஊரு கிராமப்பொண்ணுகளே வந்து ஆடி பட்டைய கிளப்பின மாதிரி இருந்த்து. ஒரு தப்பில்ல, தாளம் பிசகல்ல, அத்தனை நேர்த்தி, அத்தனை அசத்தல்.

 

ஆகா, இது யாரு சரோஜா தேவியா அது, அட இந்தப்பக்கம் யாரு எம்.ஜி.ஆரு – என்னா பண்றாங்க இங்க வந்து – “அன்று வந்ததும் அதே நிலா – இன்று வந்த்தும் அதே நிலா”.  பாட்டுக்கு ஆடிறாங்க. உத்துப்பார்த்தாதான் தெரியுது - இது நம்ம லட்சுமி-கவுசிக்தான்னு. அவங்க போனபிறகு குங்குமப்பூவா கொஞ்சுப்புறாவா கொஞ்சி கொஞ்சி செந்தில் – வினு ஜோடி ஒரு கலக்கல் நடனம், அதுக்குப்பிறகு வந்தது அமிர்தா அவங்கப்பா சந்தோசோட வந்து அவரோட காதல்கதையை கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. பிறகு வர்றது வா வாத்தியாரே ஊட்டாண்டன்னு சென்னைத்தமிழ் வச்சு மனோரமா – சோ ஆடுன ஆட்டம் கலகலப்பா இருக்கு. ஒரு பெண்ணைப்பார்த்து நிலவை பார்த்தேன் – செந்தில் – வினு ஜோடி இந்தப்பாட்டுக்கு ஆட ஒரே அசத்தல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். மொத்தத்தில இந்த அக்கால நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் கைத்தட்டல், தூதுகலம், உற்சாகம், பார்க்கிறவங்க எல்லாம் அந்தக்காலத்துக்கே போயிட்டாங்க.

 

இப்போ வந்திருக்கிறது யுவராசு, செந்தில், குமரன், சந்தோசு நண்பர்கள் சமய நல்லிணக்கத்தை ஒரு இசை நாடகமா அருமையா நடத்தியிருக்காங்க. மனுசங்க மதங்களால பிரிஞ்சு அடிச்சுகிட்டு மனிதத்தையே தன் புனிதத்தையே தொலைச்சுடறான் அப்பிடிங்கிறத அற்புதமாக நடிச்சு காட்டுனாங்க. மனம் நிறைய வைத்த ஒரு நெகிழ்வான நிகழ்வா இருந்தது.