Oct 16, 2013

ஒரு பிரபஞ்சச்சுவராசியம்

மேகங்களை
துவைத்து து-வைத்து
மழையெனச்
சாறுபிழிந்து - பச்சிளம்
புவியதனனின் 
பசிதணித்து-வெளி
 எங்கெங்கினும் 
செழித்துயிர்த்திருக்கும்-பசுந்தாவரப்
 பாலகன்களுக்கு
சூரியத்தந்தையாய்-வெளிச்சப் 
பாலமுதம் ஊட்டி

தாவரங்கள்
பலகோடி
விலங்கினங்கள்
பலப்பல கோடி
புவியெங்கும் பூச்சியினங்கள்
பல்லாயிரம் கோடி
இவையனைத்தும்
உருக்கொடுத்து
அவ்விதமே
உருவெடுத்து - அதன் 
அங்கமெல்லாம்
உயிர்த்துவம் அளித்து






பிரபஞ்சத் துகள்களையும்
உய்ப்பித்து, அதன்
அணுவிற்கும் அணுவெனத் திகழ்ந்து
அண்டசராசரங்களையும் ஆட்டுவித்து
அயர்ந்திருந்த
ஒரு இறைத்த்த்துவத் தருணத்தில்














பிரபஞ்சத்
தொலைவெளிதனில்
வீச்சாய் விரவிப்
பரவியிருந்த-எம்
திக்கிலாச்சிந்தையில்
உதித்த
சுவராசியமான
சித்தம்.

எம் படைப்புச்
சுக்கல்களானசில
மானுட
மனங்களுக்குள் சில
சுவராசிய சு-தந்திரங்களை
விதைக்கும்
வித்தைதான் அது

எம் படைப்புகள்
எனையே
சப்த
ஸ்பரிச
ரூப
ரஸ
கந்தங்கள் மூலம்
உணர மறுக்கும்
விந்தைதான் அது.

இருளால்
வெளிச்சத்தின்
மேன்மை -இருளால்
வரையறுக்கப்படுகிறது

-
அதன்போல்
இறையதனின்
முழுமையை
நாத்திகம்
வரையறுக்கும்

இறையினைத் 
தொழும் ’இறை’ச்சல் 
எம் ஒரு
புள்ளியினை
பிரவசமாய்ப் 
பிரதிபலிக்கும் -அதனுள்ளே 
தம்உரு 
தொலைக்கும்
ஆயின் 
எமை
மறுத்துத்தூற்றும் 
நாத்திகச்சிந்தை 
எம் இறையையே
முழுமையாக்கும்- 
அங்ஙனமே
எம் அகப்பரிணாமத்தை
செழுமையுறச்செய்யும்.

ஆகவே
பிரபஞ்சத்திவலைகளாய் 
விரவி -அதனுள் 
ஆகிருதியாய் 
யுகயுகங்களாய் 
உறைந்திருந்திருந்த
இறைஎனும் 
இப்பேரண்டத்தையொத்த 
பேருண்மையை மறுக்கும்
நாத்திகமானுடங்களைப் 
படைப்பதென்பது-எமக்குள்
உயிர்த்துயரும் 
ஒரு 
பிரபஞ்சச்சுவராசியம்தான்!

Sep 5, 2013

பைந்தமிழ்ப் பயிர்த்து



புற்றீசல்போல்
பல்கிப்பல்கிப்பெருகிப் 
பரிணமிக்கும்
சில தமிழ்இலக்கிய 
வியாதிகள்!
விரசமாய் விடவித்துக்களை 
விதைக்கும் 
தமிழ்இலக்கிய 
வியாதிகள் - அவ்வாறே
சமீபத்திய வரவென
சில படைப்பாளிகள்
தமிழ்ச்சோலையில் 
எங்குகாணினும்
அவர்தம் எடுத்தவாந்திகள்!

ஆம், அங்கிங்கெனாதபடி
எங்கெங்கிலும்
வீர்யம் நீர்த்துப்போன
நொள்ளைச்சந்ததிகளாய்
சவலைக்குழந்தைகளாய்ப்பிறந்த
இதுகள்தான்
செந்தமிழ் அழிக்கும் 
சாத்தான்கள்.

அருந்தமிழ் மத்தினைத்துறந்து
சல்லிக்கற்களைக்கொண்டு 
தமிழ்ப்பாற்கடலிலிருந்து 
அமிர்தம்தனை கறந்திடத்துடிக்கும்
போலி இலக்கியநச்சினை 

நம் மனத்தினுள் 
புகுத்திடத்துடிக்கும் 
தமிழ்க்கொலைஞர்களின்
கலிகாலம் இது
அய்யகோ –
கலிகாலம் இது!

எம்மொழிச்சத்து - நீர்த்துப்போய்
தமிழ்தம் வீர்யம்
குறைகுறையென
குறையாதிருக்க
அருந்தமிழ்ச்சூல் தரித்
நற்றமிழ் இலக்கியங்கள் –
தமிழ்அகமெங்கிலும் 
பிறக்கக்கடவதாக!

அங்கனமே
தமிழ்கூறும் யுகமெங்கிலும்-
செவ்வனே இப்பைந்தமிழைப்
பயிர்த்திருப்பதாக! பயிர்த்திருப்பதாக!!
நம்மனச்செழுமைஏற்றும்
தமிழ்ப்படைப்பாளிகள் - அவர்தம்படைப்புக்கள்
இம்மானுடம் உள்ளவரை
உயிர்த்திருப்பதாக! உயிர்த்திருப்பதாக!!