அவனி, அனைத்துலகு, அண்டமெங்கிலும் மூத்தமொழியென உதித்தெழுந்து - பின்
ஆறுமுக வல்லின, இடையின, ஆரணங்குகளாய்ச் செழித்த
இன்தமிழே இசைத்தமிழே, இன்னிசையே, இறைவா மொழியே - உன்
ஈராறு உயிரெழுத்தால் மூவாறு மெய் கொண்டு என்னுள் இசைந்திருந்து
உயிர்மெய்யென பாகுப்பாடின்றி, களமாடி, கவிபாடி, களவாடி,
எம்தம் அங்கத்தின் அணுவரை ஊடுருவி ஈர்த்தெம்மை ஆட்க்கொண்ட அருங்காப்பியமே, பேரின்பக்கடலே!
எட்டுத்திக்கிலும் ஏழுகடல்சூழ் புவிதனில் அங்கிங்கெனாதபடி பீடுற்றிப் பரவி
ஏழிசைத் தமிழென இவ்வையகத்தே வான் புகழ் கொண்ட தனித்தமிழே!
ஐயமில்லை நீ தன்னிகரில்லாப் பெட்டகமே, தெள்ளிய அமுதே, திகட்டாத தேன் சுவையே!
ஒப்பிலா அணிகலனே, ஒளிகுன்றா சுடர்நுதலே, ஓங்கார இசையழகே!
ஓராயிரம் சூரியன்கள் ஒன்றெனவே உதித்திடுமே - ஒய்யார மொழிநடை காண
அஃதெனவே நற்றமிழாய் நானிலத்தில் என்றென்றும் வாழிய வாழிய வாழியவே!!