Dec 20, 2009

கிட்டத்தட்ட பதினாலு வருட நேர்த்தியான கருத்துருவாக்கம்!

ஒவ்வொரு பிரேமிலும் கற்பனைக்கெட்டாத உலகத்திற்கே நம்மை இழுத்துச் செல்லும் மாயாஜால உலகம்!

மனதை வசியவைத்த திரைக்கதை அமைப்பு. கண்களை கொள்ளைகொள்ளும் கிராபிக்ஸ் சித்து விளையாட்டு.

ஏறக்குறைய ஐயாயிரம் கோடிகளை அசுரத்தனமாக விழுங்கிய தொழில்நுட்பம்!

அதுதான் அவதார்!

டெர்மினேட்டர், ஏபிஸ், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற வரலாறு படைத்த படங்களை கொடுத்து விட்டு டாக்குமெண்டரி படங்களின் பக்கம் ஜேம்ஸ் கேமரூன் கவனத்தை செலுத்தியிருந்தாலும், இவரின் மனதில் பதினைந்து வருடங்களாக கருவாகி வந்த அவதார் எனும் திரைக்கதை, கேமரூனை மீண்டும் திரைப்படத் துறைக்கே கொண்டு வந்துள்ளது.

இனி கதை.
விண்வெளியில் தொலைதூர கிரகநிலவான பாண்டோரா-வில் இருக்கும் அரியவகை உலோகத்தை அடைவதற்கு நம் பூமியில் இருக்கும் ஒரு நிறுவனம் முயற்சிக்கிறது. இதற்கு இடைஞ்சலாக இருப்பது அங்கே வசித்து வரும் நீலமான உடல் படைத்த, மனிதனை விட தொன்மையான, ஒன்பது அடி உயிரினம் நாவி. மனிதர்களை எதிரிகளாகப் பாவிக்கும் நாவி இனத்தை மசிய வைப்பதற்கு நம் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தந்திரம் உபயோகிக்கிறார்கள். அதுதான் நாவி இனத்தின் டி.என்.,ஏ வையும் நம் டி.என்.,ஏ வையும் இணைத்து நாவி உடலமைப்பு போன்ற ஒரு கலவையான உயிரை அங்கே உருவாக்குவது - அதன் பெயர்தான் அவதார்.

அவதார் மூலம் நாவி உடலமைப்பில் மனித ஆத்மாவை நம்மூர் கூடு விட்டு கூடு பாயும் விதமாக உயிர் கொடுத்து நாவி இனத்தினூடே பழகி அவர்களது நம்பிக்கையை பெற முயற்சிக்கிறார்கள். (இயக்குனை ஒரு பேட்டியில் இதனை இந்திய இதிகாசத்திலிருந்து தழுவி எடுத்ததாக தெரிவித்துள்ளார்!). இம்முயற்சியிலிருந்து தனது இரட்டைச்சகோதரன் இறந்ததை ஈடு கட்டும் விதமாக வரும் உடல் ஊனமுற்ற ஒரு ராணுவ வீரன் ஜேக் ஒரு அவதாரமாக உருவெடுக்கிறார். அவருக்கு இட்ட பணி, நாவியினத்தின் நம்பிக்கையைப் பெற்றபின் அவர்களின் பூர்வீக இடத்தை விட்டு வேறு பக்கம் நகரச் செய்வது. பிறகு அந்த இடத்தின் அடியிலிருக்கும் அரிய உலோகத்தை பெறுவது.

ஜேக்கின் அவதார் அங்கிருக்கும் நேத்ரி எனும் நாவி இளவரசியை சந்தர்ப்பவசமாக சந்தித்து அவள் மூலமாக அவ்வினத்தில் கலக்கிறது. அவதாருக்கும் நேத்ரிக்கும் காதல் மலர்கிறது. அவதார் நாவிக்களை அவ்விடத்திலிருந்து அப்புறபடுத்துவது தோல்வியில் முடிய, மனிதர்கள் போரின் மூலமாக நாவிக்களை அகற்ற முயற்ச்சிக்கிறார்கள். அதில் சற்றும் சம்மதம் இல்லாத அவதார் மனிதர்களை எதிர்த்து நாவிக்களிக்கே உதவி செய்கிறார். வெல்வது யார் ? மனிதர்களா ? அல்லது மனிதனிலிருந்து அவதாரத்தின் துணையுடன் நாவிக்களா ? மீதி வெண்திரையில்.

கேமரூனின் அசாத்திய உழைப்பு ஒவ்வொரு நொடியிலும் மிகப்பிரமாண்டமாக தெரிகிறது. படம் பார்க்கும் முன்னரே ஐமாக்ஸ் இல் தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து சென்றது மிக நல்லதாகப் போனது. அவதாரின் பிரமாண்டத்தை அதன் உள்ளே நாமும் ஒரு அங்கமாகப் பார்ப்பது ஒரு சிறப்பு அனுபவம். கேமரூனின் தனித்துவமே லாஜிக்கை அழகாக மீறுவது. நம்மூர் காதல் கதைபோல பார்த்த உடன் இந்தப்படத்திலும் பற்றிக்கொண்டாலும், படம் பார்ப்பவர்கள் மனமும் அதனுடன் இயைந்து விடுகிறது. அது போல மனிதர்கள் நாவிக்களை எதிர்க்கும் கட்டத்திலும் நம் மனம் மனிதர்கள் வெல்லவேண்டும் என்று நினைப்பதை விட நாவிக்கள் வெல்வதையே விரும்புவதிலே தெரிந்து விடுகிறது கேமரூனின் திரைக்கதை நம் மனதை வென்று விட்டதை.

பலவருடங்களுக்கு முன்னரே வரவேண்டிய திரைக்கதை, தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாய் இப்போதுதான் சாத்தியமாகி உள்ளது. கிட்டத்தட்ட பதினாலு வருட நேர்த்தியான கருத்துருவாக்கம்!
ஏறக்குறைய ஐயாயிரம் கோடிகளை அசுரத்தனமாக விழுங்கிய தொழில்நுட்பம்!
ஒவ்வொரு பிரேமிலும் கற்பனைக்கெட்டாத உலகத்திற்கே நம்மை இழுத்துச் செல்லும் மாயாஜால உலகம்!
மனதை வசியவைத்த திரைக்கதை அமைப்பு. கண்களை கொள்ளைகொள்ளும் கிராபிக்ஸ் சித்து விளையாட்டு.

அதுதான் அவதார்!

தேர்மினடர், ஏபிஸ், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற வரலாறு படைத்த படங்களை கொடுத்து விட்டு டாக்குமெண்டரி படங்களின் பக்கம் ஜேம்ஸ் கேமரூன் கவனத்தை செலுத்தியிருந்தாலும், இவரின் மனதில் பதினைந்து வருடங்களாக கருவாகி வந்த அவதார் எனும் திரைக்கதை, கேமரூனை மீண்டும் திரைப்படத் துறைக்கே கொண்டு வந்துள்ளது.

இனி கதை.
விண்வெளியில் தொலைதூர கிரகமான பாண்டோரா-வில் இருக்கும் அரியவகை உலோகத்தை அடைவதற்கு நம் பூமியில் இருக்கும் ஒரு நிறுவனம் முயற்சிக்கிறது. இதற்கு இடைஞ்சலாக இருப்பது அங்கே வசித்து வரும் நீலமான உடல் படைத்த, மனிதனை விட தொன்மையான ஒன்பது அடி உயர உயிரினம் நாவி. மனிதர்களை எதிரிகளாகப் பாவிக்கும் நாவி இனத்தை மசிய வைப்பதற்கு நம் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தந்திரம் உபயோகிக்கிறார்கள். அதுதான் நாவி இனத்தின் டி.என்.,ஏ வையும் நம் டி.என்.,ஏ வையும் இணைத்து நாவி உடலமைப்பு போன்ற ஒரு கலவையான உயிரை அங்கே உருவாக்குவது - அதன் பெயர் அவதார். அவதார் மூலம் நாவி உடலமைப்பில் மனித ஆத்மாவை நம்மூர் கூடு விட்டு கூடு பாயும் விதமாக உயிர் கொடுத்து நாவி இனத்தினூடே பழகி அவர்களது நம்பிக்கையை பெற முயற்சிக்கிறார்கள். (இயக்குனை ஒரு பேட்டியில் இதனை இந்திய இதிகாசத்திலிருந்து தழுவி எடுத்ததாக தெரிவித்துள்ளார்!).

இம்முயற்சியிலிருந்து தனது இரட்டைச்சகோதரன் இறந்ததை ஈடு கட்டும் விதமாக வரும் உடல் ஊனமுற்ற ஒரு ராணுவ வீரன் ஜேக் ஒரு அவதாரமாக உருவெடுக்கிறார். அவருக்கு இட்ட பணி, நாவியினத்தின் நம்பிக்கையைப் பெற்றபின் அவர்களின் பூர்வீக இடத்தை விட்டு வேறு பக்கம் நகரச் செய்வது. பிறகு அந்த இடத்தின் அடியிலிருக்கும் அரிய உலோகத்தை பெறுவது.

ஜேக்கின் அவதார் அங்கிருக்கும் நேத்ரி எனும் நாவி இளவரசியை சந்தர்ப்பவசமாக சந்தித்து அவள் மூலமாக அவ்வினத்தில் கலக்கிறார். அவதாருக்கும் நேத்ரிக்கும் காதல் மலர்கிறது. அவதார் நாவிக்களை அவ்விடத்திலிருந்து அப்புறபடுத்துவது தோல்வியில் முடிய, மனிதர்கள் போரின் மூலமாக நாவிக்களை அகற்ற முயற்ச்சிக்கிறார்கள். அதில் சற்றும் சம்மதம் இல்லாத அவதார் மனிதர்களை எதிர்த்து நாவிக்களிக்கே உதவி செய்கிறார். வெல்வது யார் ? மனிதர்களா ? அல்லது மனிதனிலிருந்து அவதாரத்தின் துணையுடன் நாவிக்களா ? மீதி வெண்திரையில்.

கேமரூனின் அசாத்திய உழைப்பு ஒவ்வொரு நொடியிலும் மிகப்பிரமாண்டமாக தெரிகிறது. படம் பார்க்கும் முன்னரே ஐமாக்ஸ் இல் தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து சென்றது மிக நல்லதாகப் போனது. அவதாரின் பிரமாண்டத்தை அதன் உள்ளே நாமும் ஒரு அங்கமாகப் பார்ப்பது ஒரு சிறப்பு அனுபவம். கேமரூனின் தனித்துவமே லாஜிக்கை அழகாக மீறுவது. நம்மூர் காதல் கதைபோல பார்த்த உடன் இந்தப்படத்திலும் பற்றிக்கொண்டாலும், படம் பார்ப்பவர்கள் மனமும் அதனுடன் இயைந்து விடுகிறது. அது போல மனிதர்கள் நாவிக்களை எதிர்க்கும் கட்டத்திலும் நம் மனம் மனிதர்கள் வெல்லவேண்டும் என்று நினைப்பதை விட நாவிக்கள் வெல்வதையே விரும்புவதிலே தெரிந்து விடுகிறது கேமரூனின் திரைக்கதை நம் மனதை வென்று விட்டதை.

கேமரூன் பலவருட இடைவேளைக்குப் பின்னே இதை வெளிவிட்டாலும் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மீண்டும் நிரூபித்துள்ளார்.மேலும், பலவருடங்களுக்கு முன்னரே வரவேண்டிய திரைக்கதை, தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாய் இப்போதுதான் சாத்தியமாகி உள்ளது. காதலையும், மனித உணர்ச்சிகளையும் தொழில்நுட்பத்தின் தாக்கங்களையும் அழகாக ரசவாதக்கலவையாக ஒன்றுடன் ஒன்று இணைப்பதில் அவருக்கு நிகர் அவரே. அவருடைய முந்தைய பட டைட்டானிக்கிலும் காதலை அருமையாக செதுக்கி நம்மை உருக வைத்திருப்பார். இந்தப்படத்தில் ஒரு சிரமம், இதில் வருவது நாவி எனும் வேற்று கிரக உயிரினம். அதை ஒரு மனித ஆத்மா காதலிப்பது போல பார்வையாளர்களை வசியப்பத்துவது கொஞ்சம் சிக்கலான வேலை. ஆனால் அதில் வெற்றி பெற்றுள்ளார்.

கேமரூன் தனிக்காட்டு இராஜாவானாலும் மற்றவர்கள் துணை இல்லாமல் பிரமாண்டமான படத்தை அளிக்க முடியாதல்லவா. நாமும் அவதாரில் மற்ற முக்கியமான ஆட்களின் பங்களிப்பை பார்க்கலாம்.
இசை ஜேம்ஸ் ஹோர்னர் -- அபோகலிப்டா மற்றும் அபோல்லா போண்டா படங்களுக்கு இசையமைத்தவர்தான். இதிலும் அருமையாக அசத்தியுள்ளார்.

எடிட்டிங்கிலும் ஸ்டீவென் மற்றும் ஜானுடன் இணைந்து கேமரூனின் கைவண்ணம் நேர்த்தியாகத் தெரிகிறது.

ஜோராச்சிக் பார்க் மற்றும் லார்ட் ஆப தி ரிங் படங்களில் பணி புரிந்த ஜோ லேட்டேரி, விசுவல் எபிபிச்ட்-ல் இதுலும் ஒரு கலக்கி கலக்கி உள்ளார். மூன்று முறை ஏற்கனவே ஆஸ்கர் வென்ற ஒரு நிபுணர்.