Sep 23, 2006

மரணிக்கத்தெரிந்தவன்




நீர் அருந்தும

நீர் இருந்தும் - நீந்தமுடியா

மீன் அவனே


.

தேன் எனவிருந்தும்

தேனிருந்தும்

தேற்றவியலா

வண்ணத்துபூச்சியானவன் அவனே

.

சிறகு இருந்தும்

சிறகென உருவமிருந்தும்

பறக்கவியலா சிறு

பறவை அவனே

.

வெளிதனில் தவழ்ந்தும்

ஒளியினையுண்டும்

காணவியலாக் காட்சி்

அவன்

.

காற்றில் பிறந்தும்

காற்றிருந்தும்

சுவாசம் தொலைத்த

அபலை அவனே

.

நினைவாய் இருந்தும்

நினவினைச்சுகித்தும்

நிந்திக்கத்தெரியாதவன்

அவன்

.



உணர விருந்தும்

உணர்விருந்தும்

உண்மை தொலைத்த

பேதையவனே

.

இறையே

நீ அவனுக்கு

ஒளி யளித்தாய்

அவனோ

அதை இருள் -

வெளியினில் தொலைத்தான்

அவனும்

இருளெனத் தொலைந்தான்

.

நீ

அவனுக்குத்தாய் -

உயிரெனச் சுகித்தாய்

அவனோ

மரணத்தை

துணைக்கழைத்திருந்தான்

அதனையே

மணந்திருந்தான்

அதனுள்ளே

என்றென்றும் உறைந்தான்

.

செந்தில்குமாரன்