Jan 17, 2015

என் திருஉளமே



பாரெங்கிலும் 

குப்பை குப்பை  என்று

பகுமானமாய்த் தூற்றி 

அதைப்பகுத்தாய்ந்து 

ஊரெங்கிலும் உறவெங்கிலும்

துப்புரவாக்கிட 

முனைப்புடன் சென்றுபின் 

யாக்கை சுருக்கிட 

அகம் பிறழ்ந்திட 

வெறுமையுடன் திரும்பும் 

ஒரு பிரேதகணத்தில்  -

குப்பைகள் ஓரிடத்தில் 

குவிந்து கிடக்க 

எவ்விடமென 

நோக்கியபின் தெரிந்தது 

அவ்விடம் என் உளமே 

என் திரு உளமே



******************************************** 

1 comment:

காயத்ரி said...

அறியாமையை
உள்கொணர்ந்த
என் திரு உளமே
அவ்விடமே
தூய்மை செயவே
விழைவதென்னவோ
உண்மையே!!