Sep 1, 2014

- பெரும்பூகம்பங்கள் -

என்றென்றோ 
பொங்கலுக்கும் 
தீபாவளிக்கும் 
 தவமாய்த்
தவமிருந்து பெற்ற  சொற்ப 
விடுமுறை 
மணித்துளிகளை 
சொந்த ஊரில் 
கொண்டு சேர்த்த கணத்தில் 
அங்கிங்கெனாதபடி 
எட்டுத்திக்கிலிருந்து 
பதுங்கிப்பாயும் 
பணத்தேவைகள் 
அப்பொக்கிச மணித்துளிகளை 
அப்படி அப்படியே  
கொள்ளையடித்த  
வன்கொடுமைகளைத்தான் 
என் மன தேசத்தில் 
இடையறா நிகழும்  
பெரும்பூகம்பங்கள் என்பேன்!
பெரும்பூகம்பங்கள் என்பேன்!

-

2 comments:

காயத்ரி said...

வார்த்தை ப்ரயோகம் அருமை செந்தில்! உண்மையாகவே இது பூகம்பம்தான்!

- செகு - said...



தங்கள் பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி காயத்ரி. மீண்டும் வருக.

-- செ.கு.