Nov 20, 2005

மானுடம்.....




மனங்களை மானுடர்கள்

எங்கெங்கோ எதற்காகவோ

தொலைந் தெறித்து விட்டார்கள - பாவம்

மானுடத் தன்மையும், மானுடத் துண்மையும்

மனித சீவராசிகளால் -

யுக யுகங்களாக உருக் குலைந்து உரு தொலைந்து விட்டதே......!!!

அற்றொழிந்த மானுடர்களே - தாங்கள்

ஆற்று நீரில் அடித்து செல்லப்படுவதை

அவ்வப்போது கூட உணர்வதில்லையா....

அய்யகோ...

எங்கே, எதற்கு, ஏன்

கொண்டு செல்லப்படுகிறோம்- என்று அறியாப பிண்டங்கள்

ஓட்டைச் சடலம், உப்பில்லா பாண்டம்

என்றெவனோ- பாடித்

தொலைத்ததை

உண்மையாக்கும் ஈனப்பிறவிகள்...

என் மானுட மன்னர்களே... கனவான்களே! - நீங்கள்

காரல் மார்க்ஸினை அறிந்ததுண்டா

டால்ச்டாயின் தத்துவ நெறியை மேய்ந்த துண்டா.... ?

நிகொலாச்கோயின் இடர்பாடுகளை உணர்ந்ததுண்டா - லெனினின்

சமத்துவ புரட்சிகளுடன் புரட்சி செய்ததுண்டா....

தாகோரின் கவிதாஞ்சலியில் முத்தெடுத்தது உண்டா...

பாரதியை உரசியதுண்டா....நீட்சேயினை நிந்தித்ததுண்டா...

ஷெல்லியின் வரிகளை சுவாசித்ததுண்டா......ஷேக்ஷ்பியரினுள் சென்றது உண்டா...

வேர்ட்ஸ்வெர்த்திடம் விளையாடி யதுண்டா....

புத்தனை புரிந்ததுண்டா....புதுமைப்- புத்தனை புரட்டியதுண்டா.....

ஜெயகாந்தனை...ஜெகத்தினை... அளாவளாவியது உண்டா....

ஒஷோவின் உயர்த்த சிந்தனைகளை உண்ர்ந்ததுண்டா...

ஜென் துற வறங்களை ஒரளவு உரசியதுண்டா....

ஆரோக்கியமான சிந்தனைகளிலாவது வலம் வந்ததுண்டா.....

நீங்கள் பிறக்கிறீர்கள் . என்ன வென்று உணராமலே....

நீங்கள் வளர்கிறீர்கள்.....எப்படி யென்று தெரியாமலே....

பின்

இறந்து விடுகிறீர்கள்....எதற் கென்று புரியாமலே....

மானிட்ர்களே வாழ்வை, அதன் பிரபஞ்ச உண்மையை,

அறிந்து புரிந்து உணர்ந்து கொள்ளுங்கள்....

இயற்கையின் இறையை - இரசிக்கக்

கற்றுக்கொள்ளுங்கள்....

அன்பே இறையென்றுணருங்கள்


இதெல்லாம் முடியா விடில் ......

இன்றைக்கே......

இறந்து விடுங்கள்....

- செந்தில் குமாரன்

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இது கவிதை என்றால் இன்னும் சுருக்கமாகவும் நச்சென்றும் இருந்திருப்பது நலம். இல்லை, இன்னும் தெளிவான விரிவான வேறு எழுத்து வடிவத்தை நீங்கள் முயலலாம்.

வாழ்த்துக்கள்

- செகு - said...

//
இது கவிதை என்றால் இன்னும் சுருக்கமாகவும் நச்சென்றும் இருந்திருப்பது நலம். இல்லை, இன்னும் தெளிவான விரிவான வேறு எழுத்து வடிவத்தை நீங்கள் முயலலாம்.
//
தங்கள் கருத்துக்கு ஓரளவு உடன்படுகிறேன். இது கொஞ்சம் நீளம்தான். கொஞ்சம் சின்ன வயசில எழுதினது. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன். அப்போதைய கோபம். அப்போதைய வெளிப்பாடு.மாற்றமில்லாமல் இங்கே மறுபதிவானது. இன்னும் சுருக்கமாக, நச்சென்று எழுதும் கலை இயல்பாக வரவில்லை. அப்படி முயற்சித்தால் படர்ந்து திரியும் சுதந்திரக்கருத்துக்களை சுருக்கிச் சுருக்கிப் பின் அழுத்தித்திரிப்பது போல் ஆகிவிடுகிறது.

அப்படிப் பார்த்தால் கி.மு. 300க்குப் பிறகு பல நூற்றாண்டுகளாக சில வள்ளுவர் போன்று சுருக்கமாக, நச்சென்று கவி படைக்கும்ஒருசிலர் கூடப் பிறக்கவில்லையே!