Sep 9, 2006

மழலைக்காதல்




தோள் தொட்டுத்தூக்கி

உச்சி முகர்ந்து

உன் குறும்புக்கண்களை

கொஞ்சுகொஞ் சென்று

கொஞ்சநேரம்கா தலித்து

உன்னதரப்புன்ன கையை

அப்படிஅப்பிடியே இரசிக்க

அய்யகோ

எனை நானிழந்தேன்

.

என் கேசம் கலைத்து

காது மடல் வருடி

கன்னம் குழைத்து

முத்தத்தால் மூழ்கியெடுத்து

உன் பிஞ்சுப்பாதங்கள் என் நெஞ்சினை தாக்க

கொஞ்சி மகிழுமுனக்கு

என் நெஞ்சம் உன் மஞசமடா...கண்ணே...

.

கொஞ்சு மொழிகள் உணர்வாய்

கெஞ்சித் தவழும்

அருட்பார்வை அளிப்பாய்

விரல் பிடித்து வீதிதனில்

நடை பயில

இறைவனையே துணைக்கழைப்பாய்


.
என் மனக்கள்ளனே

என்னையே திருடியவனே

உன் மழலை சிரிப்புக்கு

இந்தப்பரபஞ்சத்தையே

தானமளிக்கிறேன்

.


கிள்ளை மொழி மிழற்றி

கொஞ்சு நடைபயின்று

எனை அள்ளிக்கொண்டு

போனதுன் உள்ளம் - மனக்கள்ளம்

.


இத்தனை காலங்களிலும்

எததனை தூரங்களிலும் -

என் மனத்தோடு ஒட்டிய

தொலைதூரச் சுவடுகளிலும்

இப்பொழுதும்

உன்னைத்தவிர

வேறு எவருமில்லை

.

1 comment:

காயத்ரி said...

முதிர்ந்த மழலையே! - நின்
மழலை மொழியின்
முதிர்ச்சிக்கு முன் - இந்த
மழலை மொழிகள்
முதிர்வடையக் ௬டுமோ!