இங்கு நான எழுதிய கவிதைகளை, என்னுடைய க(ருத்து)விதைகளை மற்றும் அறிவியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளேன். அன்பர்கள் அனைவரும் இவ்வுலகத்தினுள் இன்ப சுற்றுலா சென்று வருக!.
Dec 20, 2009
Sep 27, 2009
நீ சாஞ்சு போன சேதி
சாஞ்சிக்கிடக்கிற உன்பொழப்பப் பாத்து
எந்நெஞ்சுக்குலை
பிரளயம் ஒய்ந்திடுமோ ?
அணுஅணுவாய் பிளந்து
மனம்கொள் சிங்களர்களின்
கொலைக்களமா?
Feb 6, 2009
pongal 2009
ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
இன்றளவும் இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறு தழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும், அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீர சோதனைதான்.
இந்த மண்ணுல நம்ம மனுசனோட வளர்ச்சியை நினைச்சு பார்த்தீங்கன்னா தெரியும் அவன் விலங்கிலிருந்து மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து இன்னைக்கு உலகத்தில் அங்கிங்கெனாதபடி ஈரேழு திசைகளையும் தன் கட்டுக்குள் வசப்படுத்தியிருகிறான்னு. அதற்கான மூலகாரணமே கற்காலத்து மனிதன் ஆற்றுவெளி சமுதாயத்தை உருவாக்கியதிலிருந்து வந்த வாழ்க்கைமுறைதான். ஆற்றுவெளியின் அவன் ஆரம்பிச்ச உழவுத்தொழில் நாகரீக வளர்ச்சியின் வித்து, அது விருட்சமாகி, பல்கிப்பெருகி விண்ணையே வசப்படுத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கு.
நம்ம பண்டைய தமிழர்கள் இந்த உழவுத்தொழிலின் முக்கியத்துவம் தெரிஞ்சு வந்ததனாலேயே, அதன் ஆதாரமான இயற்கையை வணங்கி அதோடு ஒன்றினைந்து வாழ்ந்திருக்காங்கன்னு தெரியுது. அறிவியலே வளர்ச்சியடையா அக்காலத்தில் தங்களோட அறிவின் வளர்ச்சியினாலே வானிலை மற்றும் பருவகால மாற்றங்களை தெளிவாக தெரிஞ்சு காலங்களை இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர், முன்பனி, பின்பனி எனப்பகுத்து அதுப்படி உழவுத்தொழிலை செம்மைப்படுத்தி வந்திருக்காங்க. அதுல இளவேனிற் காலம் அவங்களுக்கு முக்கியமான காலம். ஏன்னு பார்த்தீங்கன்னா அப்பதான் அந்த உழவின் பயனை தம் வாழ்வின் வசந்தங்களை மகிழ்ச்சியாக தொடங்குகிற காலம் – அதனால தான் இளவேனிற் காலத்தை அவங்க புத்தாண்டின் தொடக்கமாக தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு தெரியுது.
தமக்கு உணவுதந்த அந்த ஆதார சக்தியான ஆதவனை வழிபட்டு, இயற்கைக்கு உணவை பொங்கி வரும் பொங்கலாக படையலிட்டு ஒரு விழாவாக அதை நம்ம தமிழ் சமுதாயத்தின் அடையாளமா கொண்டாட ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு நம்ம தமிழர்கள் உலகின் எந்தக்கோடியிலிருந்தாலும் அந்த பொங்கல் திருநாளை கொண்டாடுறது நம்ம பண்பாட்டின் ஒரு அடையாளம்.
அது சரி, பூலோகத்தின் இன்னொரு கோடியில், ஆசுலே மற்றும் கூப்பர் ஆத்துவெளியில, அன்றைய தமிழர்களின் இன்றைய சந்த்திகளான வாழ்ந்து கொண்டிருக்கும் சார்லச்டன் தமிழ்ச் சமுதாயம் தைப்பொங்கல் திருநாளை அன்னிய மண்ணில் எப்படி கொண்டாடி மகிழ்கிறாங்கன்னு வாங்க போயி பார்க்கலாமா ?
பொங்கல் விழா அன்னைக்கு வர்ற பார்வையாளர்களுக்கு அந்த ஒரு நாள்-திருநாள், ஆனா அன்றைய விழாக்கலைஞர்களுக்கு அன்னைக்கு மட்டுமில்ல கடந்த பல வாரங்களாகவே கொண்டாட்டமான நாட்கள். எப்பிடின்னு கேட்டீங்கன்னா, விழாவிற்காக ஆறேழு வாரங்களுக்கு முன்னாலே பயிற்சி மற்றும் ஒத்திகைக்காக கூடி, மத்தவங்க ஒத்திகையில பண்ற தப்ப பார்த்து சிரிச்சு, தாமே பண்ற தப்பை சமாளிச்சு, எல்லாரும் சமைச்சு கொண்டு வர்ற அத்தனை சாப்பாட்டு வகைகளையும் ஒரு கட்டு கட்டிட்டு, சுகமா கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சு, மத்தவங்கள கேலி பண்ணி், அதகளம் பண்ணி- மொத்தத்தில பல வாரக்கடைசி நாட்கள் கலாட்டா கச்சேரியாத்தான் இருந்துச்சு.
சங்கத்தலைவர் சுந்தர்தான் அயராத வேலைப்பளுவிற்கு மத்தியில் பல நாட்களாக அத்தனை ஆட்களையும் இழுத்துப் பிடிச்சு பல கலை நிகழ்ச்சிகள் உருவாகக் காரணமா இருந்தார்.
இந்த தடவை டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம்…மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான் வசதி, ஒலி, ஒளி அமைப்பு, உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம்ன்னு நீங்க பார்த்தாலே தெரியும். வாங்க உள்ளே போகலாம்.
ஆகா….இதென்ன தப்பித்தவறி தமிழ் நாட்டுக்குள்ளேயே வந்திட்டோமா ?....எங்க பார்த்தாலும் கண்ணைப்பறிக்கிற மாதிரி பட்டுப்புடவை, வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்டையில நம்ம மக்கள் – ஒரு கலக்கு கலக்கிட்டாங்க போங்க. விழா ஏற்பாடுகளை அரக்க பரக்க ஏற்பாடு பண்ற மக்கள் சில பேர், ஒத்திகைகளை மனசில பார்த்துகிட்டே வெளியே பரபரப்பு தெரியாம நண்பர்கள் கிட்ட பேசிகிட்டு இருக்கிற சில பேர், சுத்தி சுத்தி ஓடியாடி உற்சாகமா அரங்கத்தையே அதிர வைக்கிற சுட்டிப்பசங்க சில பேர், பல நாட்கள் கழிச்சு பார்க்கிற சில நண்பர்களோட அரட்டை அடிக்கிற மக்கள் சில பேர், உள்ள வர்ற நம்ம மக்களை வரவேற்கிற மாதிரி…அவங்க கொண்டு வர்ற உணவு பதார்த்தங்கள அப்பிடியே மோப்பம் பார்க்கிற இளவட்டங்கள் சில பேர், - இப்படி பல வித நண்பர்களை பார்க்கிறதே கண்கொள்ளா காட்சியா இருக்கு, இல்லையா.
சிறுமி இனியாவின் நடனம் பார்வையாளர்களுக்கு அருமையான விருந்து – பார்த்துகிட்டிருந்த சின்னப்பசங்களும் ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க.
அடுத்தது – ஏலோலோ நாட்டிய நாடகம். மீனவர்களின் வாழ்க்கையில் படும் அவதிகளை, அவ்வாழ்வின் அல்லல்களை அப்பிடியே படம் பிடிச்சுகாட்டுற மாதிரி நடிச்சிருந்தாங்க. சுந்தர், யுவராசு, கொளசிக் மற்றும் செந்தில் மீனவர்களின் ஒவ்வொரு காலகட்டங்களை நடிச்சு நடனமாடி காட்டிகிட்டிருக்காங்க. படகோட்டி துடுப்பு போடுகிற மீனவ மக்களா நடிக்கிறது சந்தோசு, உதய், விக்னேசு, சிவா. மீனவர்களின் கடின வாழ்க்கையை நாடக நடினமாக பார்க்கிற பார்வையாளர்களின் மனச கலங்கடிச்சிட்டாங்க.
இப்ப நீங்க பாக்கிறது, கீதா, சானகி, லட்சுமி, சந்தியா, வானதி, மற்றும் வினு குழுவின் கும்மி நடனம். பட்டுப்புடவையில பகட்டா வந்திருந்து ஆடிறாங்க பாருங்க ஆட்டம் - நம்ம ஊரு கிராமப்பொண்ணுகளே வந்து ஆடி பட்டைய கிளப்பின மாதிரி இருந்த்து. ஒரு தப்பில்ல, தாளம் பிசகல்ல, அத்தனை நேர்த்தி, அத்தனை அசத்தல்.
ஆகா, இது யாரு சரோஜா தேவியா அது, அட இந்தப்பக்கம் யாரு எம்.ஜி.ஆரு – என்னா பண்றாங்க இங்க வந்து – “அன்று வந்ததும் அதே நிலா – இன்று வந்த்தும் அதே நிலா”. பாட்டுக்கு ஆடிறாங்க. உத்துப்பார்த்தாதான் தெரியுது - இது நம்ம லட்சுமி-கவுசிக்தான்னு. அவங்க போனபிறகு குங்குமப்பூவா கொஞ்சுப்புறாவா கொஞ்சி கொஞ்சி செந்தில் – வினு ஜோடி ஒரு கலக்கல் நடனம், அதுக்குப்பிறகு வந்தது அமிர்தா அவங்கப்பா சந்தோசோட வந்து அவரோட காதல்கதையை கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. பிறகு வர்றது வா வாத்தியாரே ஊட்டாண்டன்னு சென்னைத்தமிழ் வச்சு மனோரமா – சோ ஆடுன ஆட்டம் கலகலப்பா இருக்கு. ஒரு பெண்ணைப்பார்த்து நிலவை பார்த்தேன் – செந்தில் – வினு ஜோடி இந்தப்பாட்டுக்கு ஆட ஒரே அசத்தல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். மொத்தத்தில இந்த அக்கால நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் கைத்தட்டல், தூதுகலம், உற்சாகம், பார்க்கிறவங்க எல்லாம் அந்தக்காலத்துக்கே போயிட்டாங்க.
இப்போ வந்திருக்கிறது யுவராசு, செந்தில், குமரன், சந்தோசு நண்பர்கள் சமய நல்லிணக்கத்தை ஒரு இசை நாடகமா அருமையா நடத்தியிருக்காங்க. மனுசங்க மதங்களால பிரிஞ்சு அடிச்சுகிட்டு மனிதத்தையே தன் புனிதத்தையே தொலைச்சுடறான் அப்பிடிங்கிறத அற்புதமாக நடிச்சு காட்டுனாங்க. மனம் நிறைய வைத்த ஒரு நெகிழ்வான நிகழ்வா இருந்தது.
Dec 25, 2008
pongal 2009 skit
நாரதர் - எல்லாம் நேரம் தான்..என்ன பண்ணுவது ...நான் விஷ்ணுவின் அன்புக்கு பாதிரப்பட்ட என்னையே இங்கே தேவலோகத்தின் அத்தனை அமைச்சர்கள் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விடுகிறார்கள்.
ஒரு வேலை உருப்படியாக முடிப்பதர்ற்குள் என் விழி பிதுங்கி போய் விடுகிரதைய்யயா...
தேவேந்திரன் - என்ன நாரதர் உம்மாலே நமது தேவலோகத்தில் ஒரு வேலை உருப்படியாக முடிக்க முடிவதில்லையா...என்ன கொடுமை இது...
நாரதர் - இதைத்தான் சந்திரமுகி என்னும் படத்தில் ரஜினி உபயோகப்படுத்தி இருக்கிறாரே ....நீர் அதையே இங்கே எடுத்து விடுகிறீர்...
நாரதர் - அந்தக்காலத்திலே நான் விஷ்ணுவை பார்க்க வேண்டும் என்று நினைத்த அடுத்த கணத்திலே எனக்கு பாற்கடல் ஆபிஸ்-ல் அனுமதி கிடைக்கும்...இப்போது என்னவென்றால் இன்று விஷ்ணு பிஸி என்று எனக்கே கதை விடுகிறார்கள். பூலோகத்திற்கு செல்ல ஒரு ரதம் வேண்டும் என்று கேட்டு ஒரு வாரமாகியும் தேவலோக மெக்கானிக் இன்னும் கொண்டு வந்து சேர்க்கவில்லை...
தேவேந்திரன் - அட நீர் வேற...இங்கும் அதே கதைதான் நடக்கிறது....தேவேலோகத்தில் சாம பானம் சப்ளை காலியாகி பல நாட்கள் ஆகி விட்டன....கேட்டால் எல்லாம் தமிழ் நாட்டு டாச்மார்க்கிற்கே போதவில்லை என்று
சோமபான சோம்பேறி அதிகாரி என்னிடமே நக்கலடிக்கிறான். இதை எங்கே போய் செப்புவது...
நாரதர் - இங்கேயே இந்தக் கதியென்றால் பூலோகத்தில் என்னாவதோ ....மனிதர்கள் இந்த அதிகார வர்கங்களிடம் அல்லல் படுவது இங்கு நடப்பதை விட்ட கொடுமையாக இருக்கும்...
பிரம்மன் - நாரதா, தேவேந்திரா...உங்களுடைய கவலை எமக்கு புரிகிறது ... எம்மை போன்றவர்களுக்கே கைலாயத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் சிவனைப பார்க்க முடிவதில்லை ....எங்கே பார்த்தாலும் சிவனடியார்களின் ஆதிக்கம்...
நாரதர் - உமக்கே இந்த கதியா....நாராயணா நாராயணா ....இதற்கு ஒரு முடிவு கட்ட முடியாதா உம்மால்
பிரம்மா - நம்மைபோன்ற தேவர்களும் ....காலச்சக்கரத்தின் சுழற்சிக்கு அப்பாற்பட்டு எதுவும் செய்ய முடியாது...வேண்டுமென்றால் .....ஒரு சித்து விளையாட்டு நடத்திப் பார்க்கலாம்..
நாரதர் - என்ன விளையாட்டு
பிரம்மா - இப்பூலோகத்தில் இதே போன்று வெறுத்துப் போயிர்க்கும் சில மனிதர்களை எதிர்காலத்திற்கு கொண்டு சென்று இப்போதைய நிலைமையை அப்பிடியே தலைகீழாக மாற்றினால் என்ன
நாரதர் - இது நடக்கக் கூடிய விஷயமா ...அவர்களே ...விரக்தியுன் உச்ச்யில் ...நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கிறார்கள் ...அப்பிடியே தூங்கினாலும் கனவு கூட வந்து தொலைப்பதில்லை...
பிரம்மா - அதே தான் ....அவர்களை அப்பிடியே எதிர்காலத்திற்கு கொண்டு செல்லவில்லை....அவர்களின் கனவில் அவர்களை எதிர்காலத்திற்குள் தள்ளி விடுகிறோம்...அப்புறம் பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..
நாரதர் - நானே ஒரு மிகப்பெரிய குழப்பவாதி -- நீர் எம்மை விட ஒரு பெரிய குழப்பவாதியப்பா ...எதோ ஒன்று இன்று எம்முடைய வேலையை நீரே செய்கிறீர் ,,,,நடத்தும் உம்முடைய நாடகத்தை...
என்ன கொடுமை சரவணன் இது...சே எங்க போனாலும் நம்மள கடிக்கிறானுங்க...ஊருல குப்பை கொட்டுறவன் கூட நம்மள மதிக்க மாட்றான்...ஒரு நாயை விட கேவலமா போயிட்டோமா நம்ம... இந்த ஆர் டி ஒ என்ன பிரம்மலோகத்திலிருந்து நேரடியா குதிச்சு வந்தவனா என்ன...நம்மள ஒரு மனுசனா வே கண்டுக்கற மாட்டிங்கிரானே.... இவனுங்கள எல்லாம் நிக்க வச்சு சுடனும் .....இந்த நிலைமை என்னிக்கு மாறுமோ.... கடவுளே...இதைக்கேட்க நாதியில்லையா.... வெறுப்புடன் நொந்தகுமாரன் தூங்குகிறான்... கனவில்.....
Oct 16, 2008
சார்லஸ்டன் போ.வி.த
விமானங்கள் எலிகள் மாதிரி ஊர்ந்து செல்லும் காட்சி....

அப்பாடி எம்மாம் பெருசு......C17 முன்னே ராணுவ வீரர் வாக்கிங் போறாரோ ?



Oct 15, 2006
STEM CELLன்னா என்னாங்க
இப்பகுதியில் அறிவியலின் சில சுவராசியமான விஷயங்களை தமிழ்ப்படுத்த, எளிமைப்படுத்த முயன்றுள்ளேன். முதல் பகுதியில் ஸ்டெம் செல்லைப்பற்றி சிறிது பார்ப்போமா
...........................
ஸ்டெம் செல் (stem cell)
முன்னுரை
மருத்துவ உலகில் கிட்டத்தட்ட எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தாலும், தண்டுவட மற்றும் மூளை, சில விநோத இதய, கல்லீரல் வியாதிகள் மருத்துவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மாபெருரும் சவாலாக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. இந்த உடல் உறுப்புகள் சேதாரமடைந்தால் அதை எப்பாடுபட்டாலும் சரிப்படுத்தி உயிர்காக்க முடியாமல் போனது.
இந்நிலையில் 1998 நவம்பர் மாதம் ஒரு அற்புத வரப்பிரசாதமாக ஜேம்ஸ் தாம்ஸன், விஸ்காஸ்டின் யுனிவெர்சிடி (Wisconsin university) மற்றும் ஜான் கீர்கார்ட், ஜான் ஹாப்கின்ஸ் மெடிசின் ஸ்கூல் (John Hopkins School of Medicine)ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம்செல் மகத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு முன்பே (Ernest A. McCulloch and James E. Till - 1960) அது பற்றிய ஆராய்ச்சிகள் வந்திருந்தாலும் மனித கருமுட்டையிலிருந்து ஸ்டெம் செல்லை உருவாக்கும் அற்புதத்தை முதலில் கண்டுபிடித்தது அவர்கள் தான்.
ஸ்டெம் செல் - விளக்கம்
இப்போது ஸ்டெம் செல் தனித்தன்மையை, அது எவ்வாறு மற்ற செல்களிடமிருந்து மாறுபடுகிறது என்பதை பார்த்து விடலாமா..
நம்மூர் மாயாஜாலக்கதைகளில் படித்திருப்பீர்கள் மந்திரக்குள்ளனின் சுண்டு விரல் துண்டுபட்ட மறு நிமிடமே அது மாயமாக வளர்ந்து மற்றொரு குள்ளனாக உருவெடுப்பதாக. அது போன்று நம் உடம்பில் செல்களுக்கு மந்திரத்தன்மை கிடையாது. நம் உடம்பு மிகச்சிக்கலான, உயிர் மூலக்க்கூறுகளினால் உருவாக்கப்பட்ட உயிரினமானதினால் இது போன்ற வளர்ச்சியடையும் சிறப்புத்தன்மைகள் அதற்கு கிடையாது.
ஆனால் இந்த ஆராய்ச்சியாளர்கள் விடாத முயறசியாக நம் உடம்பில் உள்ள சில வகை செல்களை இந்த வகையான தன்மை கொண்டதாக தூண்ட முடியும் என்று கண்டறிந்தார்கள். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் ஒரு மகத்தான மைல்கல். இவ்வகை செல்கள் பல்வேறு கூறுகளாய் பிளவடைந்து அதே போன்ற செல்களை உருவாக்கும் தன்மையையும் (Proliferation), தூண்டல்களுக்கு ஏற்றவாறு சிலவகை சிறப்பு செல்களாகவும் (differentiation) உருவாக்க முடியும் என்றும் கண்டறிந்தார்கள். இவ்வித சிறப்பு செல்கள் பல்கி பெருகி பல்வேறு உறுப்பாக உருவெடுக்கச் செய்யலாம். அங்கனம் இச்செல்கள் எந்த மனித உடம்பின் எந்த பாகமாகவும் உருவாக்கம் செய்து விட சாத்தியமுண்டு. கரு வகை ஸ்டெம் செல்கள் (Embryonic Stem Cells) கரு உருவாகி ஒரளவு வளர்ச்சியடந்த நிலையில் உள்ள செல்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஸ்டெம் செல்களாகும்.
இம்முறையில் உருவான உறுப்புகள் காலகாலமாக தீராத நோய்களுக்கு அருமருந்தாகவும், விபத்துக்களில் பாதிக்கப்பட்ட மற்றும் செயலிலந்த மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்து விடுகிறது. இம்மருத்துவத்தின் மகத்துவம் அளவிடமுடியாத மற்றும் ஆச்சரியப்படத்தக்க ஒன்றாகும்.
ஸ்டெம் செல் உருவாக்கம் படத்தில்
1) கரு 2) 5-7 நாட்களான கரு 3) ப்ளாஸ்டோசிஸ்ட் நிலை கரு 4) இளநிலை ஸ்டெம் செல்கள் 5) இரத்த, நரம்பு மற்றும் இதய செல்கள்
இது க்ளோனிங் (cloning) எனப்படும் நகல்தன்மையிடமிடந்து மாறுபட்ட ஒன்றாகும். க்ளோனிங்கின் மூலம் உங்கள் உடல் செல்லின் மரபுத்தன்மையை மட்டும் எடுத்து, மரபுத்தன்மை நீக்கப்பட்ட கருவினுள் செலுத்தி அக்கருவை முழு உயிரினமாக வளரச்செய்தால் அது அச்சு அசலாக உங்களைப் போன்ற ஒருவரை உருவாக்கி விடலாம். இம்முறையில் பல நகல் மனிதர்களை உறுவாக்குவது சுவராசியத்தினை விட சமூகக்குழப்பங்களையும் மனக்குழப்பங்களையும் உண்டாக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
ஆனால் ஸ்டெம் செல் உடம்பிலிருந்தே உள்ள செல்களைக்கொண்டு உடல் பாகங்களை உருவாக்கி உயிர்காத்து மற்றும் நோய் தீர்ப்பதால் அதை ஒப்பிலா மருத்துவம் என்றே கூறவேண்டும்.
ஸ்டெம் செல்லிருந்து பல்வேறு உடல் பாகங்கள் உருவாவதை விளக்கும் படம்
இவற்றையும் மீறி விபரம் தெரியாத சில அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் இவ்வித ஆராய்ச்சிகளை முடக்கிவிட முயற்சிக்கிறார்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் அமெரிக்க சனாதிபதி ஜார்ஜ் புஷ், ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கான பண ஒதுக்கீட்டை முடக்கிவைத்து ஆணையிட்டது. இது இத்துறையில் உள்ள அமெரிக்க ஆராய்ச்சியாளர்க்கு ஒரு பேரிடியாக அமைந்தது (செய்தி இங்கே http://news.bbc.co.uk/2/hi/science/nature/5197926.stm).
ஸ்டெம் செல் பற்றிய ஜார்ஜ் புஷ் மீதான கேலிச்சித்திரம
ஆனால் அறிவியலின் வளர்ச்சியை இது போன்ற சிந்தனையில்லா முயற்சிகளால் தடுக்க முடிந்ததாக சரித்திரம் இல்லை.
ஸ்டெம் செல் வளரும்....அறிவியலும் வளரும்.....
மேல் விபரங்கள்.
http://www.dnalc.org/stemcells.html
http://www.cnn.com/interactive/health/0107/stem.cell/frameset.exclude.html
http://www.stemcellresearchfoundation.org/WhatsNew/EmbryonicStemCells.htm
http://stemcells.nih.gov/info/basics
http://ec.europa.eu/research/quality-of-life/stemcells.html
http://www.newscientist.com/channel/sex/stem-cells
செந்தில்குமார்
Sep 30, 2006
கடவுள் உண்டா ? The God Delusion ~ Richard Dawkins *
(புத்தக விமர்சனம்)இதை விட அழகாக கடவுள் தன்மையை பகுத்து ஆராய்ந்து, அதன் வேரினுள் ஊடுருவி அதன் ஆதாரங்களின் அத்தனை அங்கங்களையும் உலுக்கியெடுக்கும் வண்ணம் கேள்வி கேட்கமுடியுமா என்று வியக்க தோன்றுகிறது.
மனநம்பிக்கை, ஒருவகையில் மனிதனுக்கு ஆதாரமாக இருப்பதாக எடுத்துக்கொண்டால், மறுவகையில், அது மனிதனின் சிந்தனையை ஆழமாக முடமாக்குவதை மிக நேர்த்தியுடன் இப்புத்தகத்தில் ஆராய்ந்துள்ளார் - ரிச்சர்ட் டாவ்கின்ஸ்
அறிவியலும் நம்பிக்கையும் எவ்வாறு முரண் படுகிறது என்பதை
(ஆங்கிலத்தில்) Science, based on scepticism, investigation and evidence, must continuously test it own concepts and claims. Faith, by definition, defies evidence: it is untested and unshakeable, and is therefore in direct contradiction with science என்றும்
அது போல நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த மதங்களின் மறுபக்கத்தினை...
though religions preach morality, peace and hope, in fact, they bring intolerance, violence and destruction. என்றும் கூறுகிறார்
சமீபத்திய சர்ச்சைக்குள்ளான "intelligent design" தத்துவபோராட்டஙகள் , அறிவியலை கட்டுப்படுத்தும் மூடத்தனமான முயற்சி என வலியுருத்துகிறார் ( பார்க்க வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ்).
[அனைவரும் - மதநம்பிக்கையுடையோரும் - படித்து சிந்திக்க வேண்டிய அருமையான புத்தகம்]
ரிச்சர்ட் டாவ்கின்ஸ் -- இன்றைய தலைமுறையின் தலை சிறந்த அராய்ச்சியாளர் சிந்தனைவாதிகளில் ஒருவர்.
ரிச்சர்ட் டாவ்கின்ஸ் பற்றி
ரிச்சர்ட் டாவ்கின்ஸ் - வலைத்தளம்
வீடியோ
மேலும் விபரங்கள் (விகிபீடியா)
பிபிசி
Sep 26, 2006
தீயிலிட்ட மனது

யாராவது என் மனதிற்கு
தீ வைத்து விடுங்களேன்
என் மனது
பல்லாண்டு பல்லாண்டு
பல கோடி நூற்றாண்டு - என்னைக்
கொன்று கொண்டே இருக்கிறது - பசியாய்
தின்று கொண்டே இருக்கிறது -
.
என்னில் உருவகித்து - என்னையே
முடமாக்கியது
எனக்காக உயிர்த்து
என்னையே நீர்த்தது
.
அதற்கு நீரூற்றி வளர்த்தவன் நான்
விஷ வித்துக்களையே அளித்தது அது !
தீபமேற்றி வளர்த்தவன் நான்
என் கைகளை கருக்கி விட்டது அது
காறறு் வீசியவன் நான் - என்
சுவாசத்தையே சுருக்கியது அது
அதனைக் கண்டறிந்தவன் நான்
என்னையே தொலைத்து விட்டது அது
பறக்கக் கற்றுத்தந்தவன் நான்
என் சிறகுகளையே வெட்டிவிட்டதே!
விழி தந்தவன் நான் - என் வாழ்வதனின்
ஒளியணைத்து விட்டது அது !
.
எனவே
என்
அடையாளங்களின் மிச்சங்களை
எந்தன் வாழ்வின் எச்சங்களை
அதன் உச்சங்களை - எவ்வித
அச்சங்களின்றி
நிரட
யாராவது என் மனதிற்கு
தீ வைத்து விடுங்களேன்
Sep 23, 2006
மரணிக்கத்தெரிந்தவன்

நீர் அருந்தும
நீர் இருந்தும் - நீந்தமுடியா
மீன் அவனே
.
தேன் எனவிருந்தும்
தேனிருந்தும்
தேற்றவியலா
வண்ணத்துபூச்சியானவன் அவனே
.
சிறகு இருந்தும்
சிறகென உருவமிருந்தும்
பறக்கவியலா சிறு
பறவை அவனே
.
வெளிதனில் தவழ்ந்தும்
ஒளியினையுண்டும்
காணவியலாக் காட்சி்
அவன்
.
காற்றில் பிறந்தும்
காற்றிருந்தும்
சுவாசம் தொலைத்த
அபலை அவனே
.
நினைவாய் இருந்தும்
நினவினைச்சுகித்தும்
நிந்திக்கத்தெரியாதவன்
அவன்
.
உணர விருந்தும்
உணர்விருந்தும்
உண்மை தொலைத்த
பேதையவனே
.
இறையே
நீ அவனுக்கு
ஒளி யளித்தாய்
அவனோ
அதை இருள் -
வெளியினில் தொலைத்தான்
அவனும்
இருளெனத் தொலைந்தான்
.
நீ
அவனுக்குத்தாய் -
உயிரெனச் சுகித்தாய்
அவனோ
மரணத்தை
துணைக்கழைத்திருந்தான்
அதனையே
மணந்திருந்தான்
அதனுள்ளே
என்றென்றும் உறைந்தான்
.
Sep 19, 2006
மன அழகு
பனித்துளி
புல்லின் மீதுறங்கும்
அதிகாலைப்பனித்துளி
மலர்வதில்லை
தடாகத்தாமரை
இரவு நெடுகிலும்
மொட்டவிழாதா மரை
வீசுவதில்லை
சுள்ளென்ற சூரிய ஒளி
முகில்களினூடே முக்காடிட்ட ஆதவன்
Sep 18, 2006
உள்ளூரத்தேடிய உணர்வுகள்

இப்போதெல்லாம்
உள்ளிருக்கும் உயிர்வரை
உற்று -
இயல்பு சிறிதும் பிறழாமலே
உற்று உற்று
நோக்கிடினும்
உண்மைகள்
புரிவதில்லை
என் மனவெளியின்
ஒற்றையடிப்பாதையில்
ஓராயிரம்
ஆண்டுகளாய் பயணித்தும் - மன
வெளிச்சம் காண இயலவில்லை
அருந்துகிற நீர்
நிச்சலனத்தினூடேயும
நித்தமும்
நித்திரைத் தருணங்களிலூடேயினும்
என்னுடம்பில் - ஒட்டுவதில்லை
என் சுவாசக்காற்று
என்னுள் - சுதந்திரமாக
சுற்றுத்திரிந்திடினும்
உயிரை உண்மையோடு
உரசுவதில்லை
கண்ணிமை கூட
அதன் உள்ளூரத் -
தூங்காதென் கண்களை
தொட்டுத்தழுவுவதில்லை
ஆன்மாவின் ஆதிக்கமற்ற
அந்தரங்கங்களை
என் சிந்தையெங்கிலும்
சேதாரத்தோடு சிந்திய -
மிச்சங்களாகக்கூட
சேமிக்க முடியவில்லை
எனக்குள்ளே - எங்கெங்கு
நோக்கினும்
எட்டுத்திசை எழுகடலென்று
உள்ளூரத்தொலைந்து
உன்மத்தம் பிறழ்ந்து
திரிந்திடினும்
நான் யாரென்ற
நமத்துப்போன நிந்தனைகள்
எனக்கே புரிவதில்லை
தொலைந்த இயல்புகள்

ஓ வண்ணத்துப்பூச்சிகளே
உங்கள் உற்சாகத்தை
என்றென்றும்
இழந்து விடாதீர்கள்
ஓ மலர்களே
உங்கள் நிறங்க்ளை
தொலைத்து விட
எப்பொழுதும்
சம்மதித்து விடாதீர்கள்
ஓ தென்றலே
உங்களிக்குள்ளிருக்கும்
உன்னதத்தினை
எவ விடத்துமிழக்க
சம்மதித்து விடாதீர்
ஓ சிட்டுக்குருவிகளே
உங்கள் சிறகு
சுதந்திரங்களை
எந்நிலையிலும்
பலவீனமாக்கி விடாதீர்கள்
ஓ இனிய பறவைகளே..
உங்களின்பத்தினை
எங்கும்
இழந்து விடத் துணியாதீர்
ஓ அணில் குஞ்சுகளே
உங்கள் தூதுகலத்தினை
என்றென்றும்
துச்சமாக எண்ணி
விட வேண்டாம்
ஓ இயற்கையன்னையே
உன் ஏழிலழகை
ஊமையாக்கி விடாதே
ஏனெனில்
மனிதன்
................
................
................
................
................
Sep 10, 2006
குருட்டுப்பார்வை

என் கண்கள்
எதையும் கண்டதில்லை
எத்திசையும்
காண்பதேயில்லை
வண்ணங்களில்
சிறைப்பட்டுக்கொண்டதில்லை
வடிவங்களால்
வரையரை யானதில்லை
ஒளியினில்
மயங்கியதில்லை
எவையெல்லாம்
எப்பிடியெப்பிடியெல்லாம்
இருக்குமோ
என்றெண்ணியதில்லை
ஒளி பிரிந்த, தொலைந்த -
அதன்
உருக்குலைந்த ஓசை
நான்
நித்தம்
கேட்பதினால் - நிழல்
படரபயணம் செய்ததில்லை
கடல், இருட்கடல் முழுகி
முத்துக்குளிப்பினும்
கிடைப்பதென்னவோ
கருமுத்து
சிறிதும்
ஒளியில்லா முத்து
என் மனப்பிரபஞ்சத்தில்
ஒளிச்சூரியன்
தினமும்
இறந்தே பிறந்தான் - மறுபடியும்
பிறந்தாலும் இறந்தான்
இருட்சூரியனோ
இறந்தாலும் பிறந்தான் - பின்
இறப்பையே தொலைத்தான்
அதனால்தான்
நான் இருளை
இருளில்
சுவாசிப்பவன் -
என் மனப்பச்சையம் ஒளியில்லா சுவாசத்தில்
அச் சுகமில்லா வாசத்தில் -
உயிரில்லா ஜீவிதம்
அஜ்ஜீவிதததின் கண்களிலோ
வண்ணாமில்லா வாழ்க்கை
வறண்டுபோன வயற்காடு
வெளிச்சமில்லா இடுகாடு
இருப்பினும் செப்பிடுவேன்
ஊன் உறுதியோடு
உள சுருதியோடு
என் மனது
வணண்மயமான தென்று
எச்சூரியனையும்
சுட்டெரிக்குமென்று
வண்ணத்துப்பூச்சியானதென் மனம்

வண்ணத்துப்பூச்சியின்
வண்ணத்தினுள்ளே
உறைந்துதொ லைந்திருந்த என் மனம்
அன்றொரு நாள்
என் விழிகள்தனை
மற்றுமொருமுறை
தானமாக கேட்டது
அய்யகோ
நான் இம்முறைஎன் செய்குவேன்
விழிகள் தான்
எப்பொழுதோ ஒருமுறை
வண்ணத்தினுள்ளே
தொலைந்து விட்டதே
இம்முறை
என்மனப்பிரபஞ்சத்தில் மொளனவீச்சாய்
விரவியிருந்த
மதியென்னும் மாயவலைகளை
ஒன்றிணத்து
விழிகளுக்கு -
அதன் மொழிகளுக்கு
பதிலீடு செய்திருந்தேன்
இப்போதெல்லாம்
தினமும்
கனவுச்சோலைதனில்
வண்ணத்துப்பூச்சிகளை காண்கிறேன்
ஆனால்
அதன்
வண்ணங்களை
காண முடிவதில்லை
என் மன
எண்ணங்களை
காண முடிவதில்லை
Sep 9, 2006
மழலைக்காதல்

தோள் தொட்டுத்தூக்கி
உச்சி முகர்ந்து
உன் குறும்புக்கண்களை
கொஞ்சுகொஞ் சென்று
கொஞ்சநேரம்கா தலித்து
உன்னதரப்புன்ன கையை
அப்படிஅப்பிடியே இரசிக்க
அய்யகோ
எனை நானிழந்தேன்
.
என் கேசம் கலைத்து
காது மடல் வருடி
கன்னம் குழைத்து
முத்தத்தால் மூழ்கியெடுத்து
உன் பிஞ்சுப்பாதங்கள் என் நெஞ்சினை தாக்க
கொஞ்சி மகிழுமுனக்கு
என் நெஞ்சம் உன் மஞசமடா...கண்ணே...
.
கொஞ்சு மொழிகள் உணர்வாய்
கெஞ்சித் தவழும்
அருட்பார்வை அளிப்பாய்
விரல் பிடித்து வீதிதனில்
நடை பயில
இறைவனையே துணைக்கழைப்பாய்
.
என் மனக்கள்ளனே
என்னையே திருடியவனே
உன் மழலை சிரிப்புக்கு
இந்தப்பரபஞ்சத்தையே
தானமளிக்கிறேன்
.
கிள்ளை மொழி மிழற்றி
கொஞ்சு நடைபயின்று
எனை அள்ளிக்கொண்டு
போனதுன் உள்ளம் - மனக்கள்ளம்
.
இத்தனை காலங்களிலும்
எததனை தூரங்களிலும் -
என் மனத்தோடு ஒட்டிய
தொலைதூரச் சுவடுகளிலும்
இப்பொழுதும்
உன்னைத்தவிர
வேறு எவருமில்லை
.
இறை
இப்பி ரபஞ்சத்தில்
அங்கிங்கெ னாதபடி விரவி ஒவ்வொரு
அணுவிலும் அணுவாகி
ஆகாச வெளியினுள் வியாபித்து
கோடானுகோடி சூரியன்களை
அத்துணை கோள்களை
அண்ட வெளியிள்
அகண்ட பிரபஞ்சத்தில்
பரப்பி
நம் அத்துணை
ஜீவனிலும் ஜீவனாகி - ஜீனாகி
நம் ஒவ்வொரு பிரேத
செல்லிலும் செயலாகி
உன்றன் -
உயிரணுவினுள்ளும் உயிர்த்தெழுந்து
உன் ஊனுக்குமுயிர் தந்து
உன்னையே உருவகித்து
ஆதர்சனமான சக்தியாகிய
இறை
இப்புவிதனில்
மானிடமாக மட்டும்
உருவு கொண்டதென்ற மாயை
நம் மன வெளிதனில் படர
மானிடனே - நீயே
காரணம்
இப்பிரபஞசத்தில்
எங்கெங்கினும் - இறை
உன்னிலும், என்னிலும்
சக மனிதனும் இறை
சமத்துவமே இறை
அன்பே இறை
.
அவ்விறை மறந்து
மானிடன் கற்பனைவடித்த
இதுகாறும் கதைத்த
இம்மாயையே கிருஷ்ணனனையே
கிருத்துவையே
முஹம்மதுவையே
இறையென்று
உணரும் உன்மனம்
விநோதம் - இப்பிரபஞ்ச உண்மைக்கு
விரோ தம்
முப்பத்துமுக்கோடி தேவர்களும்
எம்மதத்து கடவுளரும்
மானுடவடி வில்
உயிர்த்தெழுவ
இறையென்ற இறவா
வரம் பெற்றனரோ
யாரிடமோ எங்கிருந்தோ
யாமறியோம் பராபரமே
அவர்களையும் படைத்தவன்
ஒருவன் இருப்பனெனில் அவன்
எவனோ
அவன் தான் எப்பிடிப்
பிறந்தானோ
.
இதுகாறும்
நீ கண்ணாறக் கண்டிட
எத்தேவனும்
கிஞ்சித்தும்
இசைந்ததில்லை
அய்யகோ
அத்துணை தேவர்களும்
எப்பழியில்லா பிஞ்சுக்குழந்தைக்கும்
அருட் பாலிக்காத
நெஞ்சு படைத்தவரோ
.
நீ வடித்த இவ்விறை... இதுகாறும்
உன்னிடத்து வந்தது ண்டா.....
நீயுன்
கண்ணால் கண்டதுதா னுண்டா
படைப்பு நோக்கா
படைப்பாளியென்றுன்
இறையிருப்பின்
படைப்பாளி அடையா முக்தி யிலா
தென்று நீ உனையே
தொலைப்பதென்பது
இப்பிரபஞத்தின் விநோத மாயை
இம்மாயை மானிடர்
எழுச்சிக்கு இடர்
அது
என்று தீருமோ, சிந்தை சிறக்குமோ
உன் கைக்காசு
உண்டியலில் - போட்டு
உலகத்தினை கட்டியாளும்
இறையிடத்தில் இறைஞ்சி
கோடானு கோரிக்கைகள்
நித்தம்..
இது உன் இறையை
உன்னிடத்து கிஞ்சித்தும்
கொண்டு சேரா தென்று
அறியாதது
உன் பித்தம்
.
இறையை
உன்னுள் தொலைத்து
இறைவனை, எங்கெங்கோ
தேடித் தொலைக்கிறாய்
உன்னையே, உண்மையையே
இழக்கிறாய்
இதை
உணர்ந்தும் உணரா
இந்நிலை, தன்னிலை கெட்ட
மானுடர்தம் மனம் கண்டு
நெஞ்சு பொருக்குதில்லையே எம்
நெஞ்சு பொறுக்குதில்லையே
.
இம்மாயையே இறையென்று
பொய்யதனை பாரினில் பரப்பி
மதம் என்ற பெயரில்
செப்புவரே
அம்மறை
கழன்ற மானிடர்
கூற்றிய குறைகொண்ட
கூற்றிலக்கியங்கள்
மனமெனும் பாலில்
நம்மனப்பாலில்
விரவியிருக்கும் விஷமென்பேன்
இந்நஞ்சு கண்டு எந்நெஞ்சு
பொருக்குதில்லையே
எந்நெஞ்சு பொருக்கு தில்லையே
.







