கல்லில் கிடந்ததை கருத்தினில் ஏற்றினாய்
உள்ளில் கிடந்ததை மறுத்தே தூற்றினாய்
காயத்தினுள் சூத்திரமிருக்க, மாயத்தினுள் தரித்திரம் கொண்டாய்
பாற்கடல் பருகக்கிடக்க, சேற்றுக்கடல் அருந்திடத்துடித்தாய்
மேகமது பொழிந்திருக்க, தாகத்துடன் தனித்திருந்தாய்
சூரியனே உதித்திருக்க விளக்கதனை தேடியலைந்தாய்
மெய்ஞானம் உணராமல் பொய்ஞானம் ஏற்றித்தொழுதாய்
உன்னுள் தொலைத்தபின் விண்ணில் எப்படி தேடிப்பிடிப்பாய் ?!