Sep 27, 2009

நீ சாஞ்சு போன சேதி

அப்பாவி சனமே நீங்க அழிஞ்சி போன சேதி
என்நெஞ் சத்துல அரஞ்சதென்ன
உடம்பிலிருந்து உசுர
கொஞ்சங்கொஞ்சமா உறிஞ்சி விட்டதென்ன

ஆறாத புண்ணுல
ஆயிரம்தேளுக - அங்குலஅங் குலமா
கொத்திவிட்டதென்ன
எண்ணக்கொப் பறையில - எரிஞ்சுஎரியாம
எங்கதேகம் கொதிச்சதென்ன ?
கண்ணுக்குள்ள - இரும்புக்குழம்ப
காச்சிஊத்தி விட்டதென்ன

நெஞ்சுக்குள்ள அமிலத்த
நஞ்சுநஞ்சா ஊத்திவிட்டதென்ன
நாளும்பொழுதுமா எங்கண்ணுல
இரத்தம்க சிஞ்சதென்ன
இராத்திரிப கலென்ன... ரணகளமானதென்ன ...

வீச்சருவா வீசி வீசி
ஏம்மூச்ச, பேச்ச - முழுசா
பறிச்சதென்ன
மொட்டக்கத்தி வச்சு வச்சு
பாதியும் மீதியுமா - எம்மனச
அறுத்ததென்ன

மிஞ்சிக்கிடக்கிற கொஞ்ச சனமே
சாஞ்சிக்கிடக்கிற உன்பொழப்பப் பாத்து
கொஞ்சகொஞ்சமா - மீதி உசுரு
புரையோடிப் போனதென்ன ?

அப்பாவித்தமிழ்சனங்க
ஆவி அடங்கினதென்ன - அதக்கண்டு
எந்நெஞ்சுக்குலை
நித்தம் சுருங்கினதென்ன

சிங்களப்பேய்களெல்லாம் - எங்க ரத்தம்
குடிச்சுக்குடிச்சு
கூத்தாடிக்கும்மி யடிச்சதென்ன
ஒப்பாரிவக்க வழியில்லாம
நாதியத்துப் போனதென்ன?

வீடுவிட்டு நாடுவிட்டு
ஊருவிட்டு உறவுவிட்டு
பந்தம்விட்டு சொந்தம்விட்டு
ஓடிஒளிஞ்சு தொலஞ்ச இந்தக்குலத்த
கடைசி வரை - தலைவிதி
வன்மம் வச்சு வன்மம் வச்சு
சென்மசென்மமா விரட்டுவதென்ன

சரித்திரமே நீ - என்னைக்கும்
தரித்திரமா மாறியதென்ன
எங்க பொழப்பு ஏழு சென்மமும்
நாறிப் போனதென்ன




பிரளயம் ஒய்ந்திடுமோ ?

இத்தமிழ்த் தளிர்கள்
விதையென
முளைத்தெழா - விறகென
வீதிகளில் வெற்றுயிர்
கருகிச்சரிய !

முழு இனமே
மந்தை மந்தைகளாய்- எட்டுத்திக்கிலும்
சுட்டுத் தெறிக்க
வாசல் வாசலாய் - சனங்கள்
ஈசல் ஈசலாய் சிதறிக்கிடக்க

என்நெஞ்சுத்தசை
அணுஅணுவாய் பிளந்து
கிழிந்தழிந்ததே
உள்ளினும், வெளியினும் ஊனுயிர் தொலைந்ததே !!

இதுகாறும் இச்சமூகம் இவ்விடத்தே
பூத்துக்குலுங்கிய இத்தேசமே
நீ பிணங்களின் விளைநிலமா ?
கொள்ளிவாய்ப் பேய்களினினும் - கொடூர
மனம்கொள் சிங்களர்களின்
கொலைக்களமா?

சூத்திரர்களின் சூழ்ச்சிக்கரங்களில்
சுதந்திரத்தை சுட்டெரிக்கச்
செய்திட்ட சுடுகாடா ?
விதியெல்லாம் விளையாடி - ஒளிந்தோடி
வீழ்ச்சியடைந்த வெருங்காடா?

ஹிட்லரும் முசோலினியும்
சேர்ந்து உருவான ராசபக்சேயின்
சதிராட்டம் தொலைந்தொழியுமோ?
இப்பிணம்தின்னிப் பேய்களின்
குருதித்தாகம் எம் வேகம் தடுத்திடுமோ?

நாட்டாமை நாடுகள் அனைத்தும்
நல்வழி உணர்ந்திடுமோ?
சூதுகொண்ட ஊழிக்காலம்
உருத்தெரியாமல் அழிந்திடுமோ?

நாளொரு பொழுதும் நரகமாகிப்போன
வன்கொடுமையும் கழிந்திடுமோ?
இருள்சூழ் - எம் உலகில்
ஒளிச்சூரியன் ஓரளவேனும்
உதித்திடுமோ?

ஊனுயிர் உருக்குலைத்த இப்பிரளயம்
எப்பிறவியில் ஓய்ந்திடுமோ ?
உண்மை உயிர்த்தெழுமா?
இக்குலம் தழைத்திடுமோ?

Feb 6, 2009

pongal 2009

சிந்து சமவெளி நாகரீகத்தில் ஜல்லிக்கட்ட

ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

தமிழர் இலக்கியத்தில் ‘கொல்லேறு தழுவல
்’என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது.

இன்றளவும் இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறு தழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும், அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீர சோதனைதான். 



 

இந்த மண்ணுல நம்ம மனுசனோட வளர்ச்சியை நினைச்சு பார்த்தீங்கன்னா தெரியும் அவன் விலங்கிலிருந்து மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து இன்னைக்கு உலகத்தில் அங்கிங்கெனாதபடி ஈரேழு திசைகளையும் தன் கட்டுக்குள் வசப்படுத்தியிருகிறான்னு. அதற்கான மூலகாரணமே கற்காலத்து மனிதன் ஆற்றுவெளி சமுதாயத்தை உருவாக்கியதிலிருந்து வந்த வாழ்க்கைமுறைதான். ஆற்றுவெளியின் அவன் ஆரம்பிச்ச உழவுத்தொழில் நாகரீக வளர்ச்சியின் வித்து, அது விருட்சமாகி, பல்கிப்பெருகி விண்ணையே வசப்படுத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கு.

 

நம்ம பண்டைய தமிழர்கள் இந்த உழவுத்தொழிலின் முக்கியத்துவம் தெரிஞ்சு வந்ததனாலேயே, அதன் ஆதாரமான இயற்கையை வணங்கி அதோடு ஒன்றினைந்து வாழ்ந்திருக்காங்கன்னு தெரியுது. அறிவியலே வளர்ச்சியடையா அக்காலத்தில் தங்களோட அறிவின் வளர்ச்சியினாலே வானிலை மற்றும் பருவகால மாற்றங்களை தெளிவாக தெரிஞ்சு காலங்களை இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர், முன்பனி, பின்பனி எனப்பகுத்து அதுப்படி உழவுத்தொழிலை செம்மைப்படுத்தி வந்திருக்காங்க. அதுல இளவேனிற் காலம் அவங்களுக்கு முக்கியமான காலம். ஏன்னு பார்த்தீங்கன்னா அப்பதான் அந்த உழவின் பயனை தம் வாழ்வின் வசந்தங்களை மகிழ்ச்சியாக தொடங்குகிற காலம் – அதனால தான் இளவேனிற் காலத்தை அவங்க புத்தாண்டின் தொடக்கமாக தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு தெரியுது.

தமக்கு உணவுதந்த அந்த ஆதார சக்தியான ஆதவனை வழிபட்டு, இயற்கைக்கு உணவை பொங்கி வரும் பொங்கலாக படையலிட்டு ஒரு விழாவாக அதை நம்ம தமிழ் சமுதாயத்தின் அடையாளமா கொண்டாட ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு நம்ம தமிழர்கள் உலகின் எந்தக்கோடியிலிருந்தாலும் அந்த பொங்கல் திருநாளை கொண்டாடுறது நம்ம பண்பாட்டின் ஒரு அடையாளம்.

 

அது சரி, பூலோகத்தின் இன்னொரு கோடியில், ஆசுலே மற்றும் கூப்பர் ஆத்துவெளியில, அன்றைய தமிழர்களின் இன்றைய சந்த்திகளான வாழ்ந்து கொண்டிருக்கும் சார்லச்டன் தமிழ்ச் சமுதாயம் தைப்பொங்கல் திருநாளை அன்னிய மண்ணில் எப்படி கொண்டாடி மகிழ்கிறாங்கன்னு வாங்க போயி பார்க்கலாமா ?

 

 

 

பொங்கல் விழா அன்னைக்கு வர்ற பார்வையாளர்களுக்கு அந்த ஒரு நாள்-திருநாள், ஆனா அன்றைய விழாக்கலைஞர்களுக்கு அன்னைக்கு மட்டுமில்ல கடந்த பல வாரங்களாகவே கொண்டாட்டமான நாட்கள். எப்பிடின்னு கேட்டீங்கன்னா, விழாவிற்காக ஆறேழு வாரங்களுக்கு முன்னாலே பயிற்சி மற்றும் ஒத்திகைக்காக கூடி, மத்தவங்க ஒத்திகையில பண்ற தப்ப பார்த்து சிரிச்சு, தாமே பண்ற தப்பை சமாளிச்சு, எல்லாரும் சமைச்சு கொண்டு வர்ற அத்தனை சாப்பாட்டு வகைகளையும் ஒரு கட்டு கட்டிட்டு, சுகமா கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சு, மத்தவங்கள கேலி பண்ணி், அதகளம் பண்ணி- மொத்தத்தில பல வாரக்கடைசி நாட்கள் கலாட்டா கச்சேரியாத்தான் இருந்துச்சு.

 

 சங்கத்தலைவர் சுந்தர்தான் அயராத வேலைப்பளுவிற்கு மத்தியில் பல நாட்களாக அத்தனை ஆட்களையும் இழுத்துப் பிடிச்சு பல கலை நிகழ்ச்சிகள் உருவாகக் காரணமா இருந்தார்.

 

இந்த தடவை டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம்…மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான் வசதி, ஒலி, ஒளி  அமைப்பு, உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம்ன்னு நீங்க பார்த்தாலே தெரியும். வாங்க உள்ளே போகலாம்.

 

ஆகா….இதென்ன தப்பித்தவறி தமிழ் நாட்டுக்குள்ளேயே வந்திட்டோமா ?....எங்க பார்த்தாலும் கண்ணைப்பறிக்கிற மாதிரி பட்டுப்புடவை, வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்டையில நம்ம மக்கள் – ஒரு கலக்கு கலக்கிட்டாங்க போங்க. விழா ஏற்பாடுகளை அரக்க பரக்க ஏற்பாடு பண்ற மக்கள் சில பேர், ஒத்திகைகளை மனசில பார்த்துகிட்டே வெளியே பரபரப்பு தெரியாம நண்பர்கள் கிட்ட பேசிகிட்டு இருக்கிற சில பேர், சுத்தி சுத்தி ஓடியாடி உற்சாகமா அரங்கத்தையே அதிர வைக்கிற சுட்டிப்பசங்க சில பேர், பல நாட்கள் கழிச்சு பார்க்கிற சில நண்பர்களோட அரட்டை அடிக்கிற மக்கள் சில பேர், உள்ள வர்ற நம்ம மக்களை வரவேற்கிற மாதிரி…அவங்க கொண்டு வர்ற உணவு பதார்த்தங்கள அப்பிடியே மோப்பம் பார்க்கிற இளவட்டங்கள் சில பேர், - இப்படி பல வித நண்பர்களை பார்க்கிறதே கண்கொள்ளா காட்சியா இருக்கு, இல்லையா.

 

சிறுமி இனியாவின் நடனம் பார்வையாளர்களுக்கு அருமையான விருந்து – பார்த்துகிட்டிருந்த சின்னப்பசங்களும் ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க.

 

அடுத்தது – ஏலோலோ நாட்டிய நாடகம். மீனவர்களின் வாழ்க்கையில் படும் அவதிகளை, அவ்வாழ்வின் அல்லல்களை அப்பிடியே படம் பிடிச்சுகாட்டுற மாதிரி நடிச்சிருந்தாங்க. சுந்தர், யுவராசு, கொளசிக் மற்றும் செந்தில் மீனவர்களின் ஒவ்வொரு காலகட்டங்களை நடிச்சு நடனமாடி காட்டிகிட்டிருக்காங்க. படகோட்டி துடுப்பு போடுகிற மீனவ மக்களா நடிக்கிறது சந்தோசு, உதய், விக்னேசு, சிவா. மீனவர்களின் கடின வாழ்க்கையை நாடக நடினமாக பார்க்கிற பார்வையாளர்களின் மனச கலங்கடிச்சிட்டாங்க.

இப்ப நீங்க பாக்கிறது, கீதா, சானகி, லட்சுமி, சந்தியா, வானதி, மற்றும் வினு குழுவின் கும்மி நடனம். பட்டுப்புடவையில பகட்டா வந்திருந்து ஆடிறாங்க பாருங்க ஆட்டம் -  நம்ம ஊரு கிராமப்பொண்ணுகளே வந்து ஆடி பட்டைய கிளப்பின மாதிரி இருந்த்து. ஒரு தப்பில்ல, தாளம் பிசகல்ல, அத்தனை நேர்த்தி, அத்தனை அசத்தல்.

 

ஆகா, இது யாரு சரோஜா தேவியா அது, அட இந்தப்பக்கம் யாரு எம்.ஜி.ஆரு – என்னா பண்றாங்க இங்க வந்து – “அன்று வந்ததும் அதே நிலா – இன்று வந்த்தும் அதே நிலா”.  பாட்டுக்கு ஆடிறாங்க. உத்துப்பார்த்தாதான் தெரியுது - இது நம்ம லட்சுமி-கவுசிக்தான்னு. அவங்க போனபிறகு குங்குமப்பூவா கொஞ்சுப்புறாவா கொஞ்சி கொஞ்சி செந்தில் – வினு ஜோடி ஒரு கலக்கல் நடனம், அதுக்குப்பிறகு வந்தது அமிர்தா அவங்கப்பா சந்தோசோட வந்து அவரோட காதல்கதையை கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. பிறகு வர்றது வா வாத்தியாரே ஊட்டாண்டன்னு சென்னைத்தமிழ் வச்சு மனோரமா – சோ ஆடுன ஆட்டம் கலகலப்பா இருக்கு. ஒரு பெண்ணைப்பார்த்து நிலவை பார்த்தேன் – செந்தில் – வினு ஜோடி இந்தப்பாட்டுக்கு ஆட ஒரே அசத்தல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். மொத்தத்தில இந்த அக்கால நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் கைத்தட்டல், தூதுகலம், உற்சாகம், பார்க்கிறவங்க எல்லாம் அந்தக்காலத்துக்கே போயிட்டாங்க.

 

இப்போ வந்திருக்கிறது யுவராசு, செந்தில், குமரன், சந்தோசு நண்பர்கள் சமய நல்லிணக்கத்தை ஒரு இசை நாடகமா அருமையா நடத்தியிருக்காங்க. மனுசங்க மதங்களால பிரிஞ்சு அடிச்சுகிட்டு மனிதத்தையே தன் புனிதத்தையே தொலைச்சுடறான் அப்பிடிங்கிறத அற்புதமாக நடிச்சு காட்டுனாங்க. மனம் நிறைய வைத்த ஒரு நெகிழ்வான நிகழ்வா இருந்தது. 


Dec 25, 2008

pongal 2009 skit

பொல்லாதவனும் நொந்தகுமாரனும்


கதாபாத்திரங்கள் : பிரம்மா, நாரதர் மற்றும் தேவேந்திரன்


பிரம்மா லோகத்தில் 



 
பிரம்மர் -- "வா தேவேந்திரா.வாருங்கள் நாரதரே.இருவருக்கும் வணக்கம்.வந்து இங்கே அமருங்கள்."


பிரம்மர் - நாரதரே என்ன ஒரே களைப்பு உம்ம முகத்தில் ....

நாரதர் - எல்லாம் நேரம் தான்..என்ன பண்ணுவது ...நான் விஷ்ணுவின் அன்புக்கு பாதிரப்பட்ட என்னையே இங்கே தேவலோகத்தின் அத்தனை          அமைச்சர்கள் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விடுகிறார்கள்.

ஒரு வேலை உருப்படியாக முடிப்பதர்ற்குள் என் விழி பிதுங்கி போய் விடுகிரதைய்யயா...

தேவேந்திரன் - என்ன நாரதர் உம்மாலே நமது தேவலோகத்தில் ஒரு வேலை உருப்படியாக முடிக்க முடிவதில்லையா...என்ன கொடுமை இது...

நாரதர் - இதைத்தான் சந்திரமுகி என்னும் படத்தில் ரஜினி உபயோகப்படுத்தி இருக்கிறாரே ....நீர் அதையே இங்கே எடுத்து விடுகிறீர்...

நாரதர் - அந்தக்காலத்திலே நான் விஷ்ணுவை பார்க்க வேண்டும் என்று நினைத்த அடுத்த கணத்திலே எனக்கு பாற்கடல் ஆபிஸ்-ல் அனுமதி கிடைக்கும்...இப்போது என்னவென்றால் இன்று விஷ்ணு பிஸி என்று எனக்கே கதை விடுகிறார்கள். பூலோகத்திற்கு செல்ல ஒரு ரதம் வேண்டும் என்று கேட்டு ஒரு வாரமாகியும் தேவலோக மெக்கானிக் இன்னும் கொண்டு வந்து சேர்க்கவில்லை...

தேவேந்திரன் - அட நீர் வேற...இங்கும் அதே கதைதான் நடக்கிறது....தேவேலோகத்தில் சாம பானம் சப்ளை காலியாகி பல நாட்கள் ஆகி விட்டன....கேட்டால் எல்லாம் தமிழ் நாட்டு டாச்மார்க்கிற்கே போதவில்லை என்று
சோமபான சோம்பேறி அதிகாரி என்னிடமே நக்கலடிக்கிறான். இதை எங்கே போய் செப்புவது...

நாரதர் - இங்கேயே இந்தக் கதியென்றால் பூலோகத்தில் என்னாவதோ ....மனிதர்கள் இந்த அதிகார வர்கங்களிடம் அல்லல் படுவது இங்கு நடப்பதை விட்ட கொடுமையாக இருக்கும்...

பிரம்மன் - நாரதா, தேவேந்திரா...உங்களுடைய கவலை எமக்கு புரிகிறது ... எம்மை போன்றவர்களுக்கே கைலாயத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் சிவனைப பார்க்க முடிவதில்லை ....எங்கே பார்த்தாலும் சிவனடியார்களின் ஆதிக்கம்...

நாரதர் - உமக்கே இந்த கதியா....நாராயணா நாராயணா ....இதற்கு ஒரு முடிவு கட்ட முடியாதா உம்மால்

பிரம்மா - நம்மைபோன்ற தேவர்களும் ....காலச்சக்கரத்தின் சுழற்சிக்கு அப்பாற்பட்டு எதுவும் செய்ய முடியாது...வேண்டுமென்றால் .....ஒரு சித்து விளையாட்டு நடத்திப் பார்க்கலாம்..

நாரதர் - என்ன விளையாட்டு

பிரம்மா - இப்பூலோகத்தில் இதே போன்று வெறுத்துப் போயிர்க்கும் சில மனிதர்களை எதிர்காலத்திற்கு கொண்டு சென்று இப்போதைய நிலைமையை அப்பிடியே தலைகீழாக மாற்றினால் என்ன

நாரதர் - இது நடக்கக் கூடிய விஷயமா ...அவர்களே ...விரக்தியுன் உச்ச்யில் ...நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கிறார்கள் ...அப்பிடியே தூங்கினாலும் கனவு கூட வந்து தொலைப்பதில்லை...


பிரம்மா - அதே தான் ....அவர்களை அப்பிடியே எதிர்காலத்திற்கு கொண்டு செல்லவில்லை....அவர்களின் கனவில் அவர்களை எதிர்காலத்திற்குள் தள்ளி விடுகிறோம்...அப்புறம் பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..

நாரதர் - நானே ஒரு மிகப்பெரிய குழப்பவாதி -- நீர் எம்மை விட ஒரு பெரிய குழப்பவாதியப்பா ...எதோ ஒன்று இன்று எம்முடைய வேலையை நீரே செய்கிறீர் ,,,,நடத்தும் உம்முடைய நாடகத்தை...


பூலோகத்தில்

கதாபாத்திரங்கள் : நொந்தகுமாரன், லொள்ளு பாண்டி, வெட்டி விஜயன், ஜங்கு ஜனா.

வருடத்தின் அத்தனை நாட்களைப் போலவே இந்த நாளிலும், ஒரு நாளின் அத்தனை நிமிடங்களைப் போல இந்த நிமிடத்திலும்...கொஞ்ச நஞ்சம் மிச்சம் மீதியில்லாதவாறு எப்போதும் வேலை வெட்டியில்லாத நொந்த குமாரன் அன்றைய நாளின் அயர்ச்சியின் அத்தனை அழுத்தங்களை தாங்கமுடியாமல் வீடு திரும்பியிருந்தான்... வழக்கம் போல இன்றைக்கும் ஏதாவது சாதித்து வந்தான் என்றால் அது கொஞ்சமும் கலப்படமில்லாத தோல்விதான். நொந்தகுமாரன் - புலம்பியவாறே...
என்ன கொடுமை சரவணன் இது...சே எங்க போனாலும் நம்மள கடிக்கிறானுங்க...ஊருல குப்பை கொட்டுறவன் கூட நம்மள மதிக்க மாட்றான்...ஒரு நாயை விட கேவலமா போயிட்டோமா நம்ம... இந்த ஆர் டி ஒ என்ன பிரம்மலோகத்திலிருந்து நேரடியா குதிச்சு வந்தவனா என்ன...நம்மள ஒரு மனுசனா வே கண்டுக்கற மாட்டிங்கிரானே.... இவனுங்கள எல்லாம் நிக்க வச்சு சுடனும் .....இந்த நிலைமை என்னிக்கு மாறுமோ.... கடவுளே...இதைக்கேட்க நாதியில்லையா.... வெறுப்புடன் நொந்தகுமாரன் தூங்குகிறான்... கனவில்.....


நிம்மதியாக உறங்கிகொண்டிருக்கிறான் நொந்தகுமாரன் .... காலிங்க்பெல் சத்தம் அவனை எழுப்புகிறது டிங் டிங் யாரப்பா இது இந்நேரத்தில... கதவு திறந்து... என்ன வேணுங்க... தாசில்தார் - அய்யா நான் தானுங்க ...என்ன தெரியல்லையா... நொ. கு. - யோவ் ..ஏன்யா காலங்காத்தால வந்து உசுர வாங்குறீங்க...யாருயா நீ.. தாசில்தார் - அய்யா...ரெண்டு வாரமா அலையா அலைஞ்சு உங்கள எப்பிடியாவது பாதுப்போடலாமுன்னு காதுக்கிட்டிருகேம்ம்ன்யா...போன வாரம் வந்து பாத்தப்ப நீங்க தான்யா இந்தவாரம் வந்து மறுபடியும் பாக்க சொன்னீங்க... நொ கு - இந்த வாரம் வேற வேலை வந்திருச்சு...அடுத்த வாரம் வந்து பாரு... தாசில்தார் - அய்யா...கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கொஞ்சம் பாருங்கையா... நொ கு - யோவ் உங்களோட ஒரே ரோதனையா போச்சு...உங்கள மாதிரி கவேர்மன்ட் ஆளுக ...வரிசையா வந்து அது பண்ணியாச்சு ... இது பண்ணியாச்சு...அதுல சாட்சி கையெழுத்து போடுங்க...இதுல போடுங்கன்னு ஒரே தொல்லை... எல்லாம் நல்ல ஓடிகிட்டு இருந்தாலும் ...ஏதாவது பிரச்சனைன்னா சொல்லுங்க..உடனே முடிச்சு குடுதுடரோம்னு ஒரே வம்பு...இன்னிக்கு உனக்கு என்னைய்யா...

தாசில்தார் - ஒன்னுமில்லங்கைய்யா...அன்னிக்கு இந்த பாத்திரம் சம்பந்தமா ஒரு பிரச்சனைன்னு கேள்விப்பட்டு...அத முடிச்சி கொடுதிடலாமுன்னு ஒடி வந்தேங்க... நோ கு - யோவ்...அந்த பத்திர விஷயமா.... தாசில்தார் - ஆமாங்கய்யா..ஆமா.. நோ கு - அதான்யா...அந்த கலெக்டர் பாவம் ஒரு மாசமா எதாவது முடிச்சு கொடுக்கிற வேலை இருந்தா சொல்லுங்கன்னு ஒரே நச்சரிப்பு...அவருக்கு கொடுக்கலாமுன்னு இருக்கேன்.. தாசில்தார் - அய்யா..இந்த ஒரு தடவ நம்மள கண்டுகிட்டீங்கன்னா ரெம்ப புண்ணியமா போகுங்க... நோ கு - என்னப்பா உன் தொந்தரவு பெரும் தொந்தரவாப் போச்சு...சரி என்ன பண்ணனும்னு சொல்லு... தாசில்தார் - அய்யா..இந்த பாரம்ல நானே எல்லாத்தையும் தயாரா எழுதி வச்சிருக்கேன்யா....நீங்க ஒரு கையெழுத்து மட்டும் போட்டுடீங்கன்ன...நான் மத்தத பாத்துவந்து வேலைய முடிச்சு கொடுதிடுவேங்கைய்யா நோ கு - கையெழுத்தா...அத அங்க வச்சிட்டு போ....அடுத்த வாரம் வந்து பாரு...உனக்காக இந்தத தடவ கலெக்டர் கிட்ட இந்த வேலைய கொடுக்கல்ல.. தாசில்தார் - நெம்ப தேங்க்ச்குங்கோ...அப்புறம் நான் போயிட்டு வர்றேங்கோ...

அடுத்த தடவ இந்ந்த மாதிரி சொல்லிகிராம வந்து இந்த மாதிரி தொல்லை பண்ணுன அப்புறம் நடக்கிறதே வேற.. தாசில்தார் - மவராசா அந்த மாதிரி ஏதும் பண்ண மாட்டேன், --------------------------------------------- கொடுமை கந்தசாமி - அப்பனே முருகா ,.,,,என்னை மட்டும் ஏம்பா இந்த மாதி சோதிக்கிறே ....நான் என்ன பாவம் பண்ணுனேன். இன்னிக்கு சரியா போய்க்கிட்டிருந்த என்ன அந்த சாவு கிராக்கி டிராபிக் போலீஸ் பிடிச்சு ...௫00 rupaa குடுத்தா தான் விடிவேன்னு ஒரே வம்பு....மருத்துவ செலவுக்கு வச்சிருந்த அத்தனையையும் அழுத்தும் விடல்ல ....இவனுங்களுக்கு ஒரு கேடு வராத ...என்னைக்கு வருமோ நிம்மதியான சுதந்திரம் ... ---------------------------------------------- டிராபிக் கான்ஸ்டபிள் - ஸார் இருக்காங்களா ...உள்ள வரலாங்கள கோசா --...அதான் உள்ளேயே வந்திட்டீங்களே கூச்சப்படாம வீட்டுக்குள்ளரே .... டிராபிக் கான்ஸ்டபிள் - - சொன்னா தப்பா நினச்சிறாதீங்க.. கோசா -- சொல்லியாச்சு ...பேச்சர்றதும் தப்பு தப்பா தான் இருக்கு ....பெறகென்ன இந்த வார்த்தைகளுக்கொன்னும் குறைச்சல் இல்ல... டிராபிக் கான்ஸ்டபிள் --- அது ஒன்னும் இல்ல.. kosaa - ஒன்னும் இல்லையா ..அப்ப நீங்க போயிட்டு இன்னொரு நாளைக்கு வந்து எண்ணப் பாருங்க... டிராபிக் கான்ஸ்டபிள் - - ஸார் நான் வந்த விஷயம் வந்து...போன வாரம் டிராபிக் சிக்னல்ல ரெட் இருக்கும் போதே தப்ப கொஞ்சம் போய்ட்டீங்க ...அதான்... கோசா -- அதுக்கென்ன இப்போ... டிராபிக் கான்ஸ்டபிள் - ஸார் நீங்க சும்மா வந்து ஒரு தடவ சாலை பாதுகாப்பு பத்தி ஒரு வகுப்புக்கு வந்து இர்ந்தீங்கன்ன அது போதுங்க....நாங்க இந்த மாதிரி சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் பத்தி விளக்கமா வகுப்புல உங்களுக்கு புரிய வச்சு ....இது மாதிரி இனிமே நீங்க பண்ணாம இருக்க உங்களுக்கு ஒரு ஹெல்ப் தான்....அதில நல்ல மார்க் எடுத்தா ஒரு கார் வேற இலவசமா தருவோம்.. கோசா- கேக்க நல்லாத்தான் இருக்கு.,.என்னக்கு நேரமில்லையே.... டிராபிக் கான்ஸ்டபிள் - தயவு செஞ்சு வந்திட்டு போனா ரெம்ப நல்லா இருக்கும்... கோசா - ஒரு தடவ சொன்ன நோக்கு புரியாதேன்னோ...பேசாம அது பத்தி எதாவது டிவிடி ஏதாவது இருந்தா அங்க வச்சிட்டு போப்பா.. டிராபிக் கான்ஸ்டபிள் - ஸார்....நீங்க ரெம்ப பிசி ....அதனால் இப்போ உங்கள தொந்தரவு பண்ண விரும்பல... இந்த டிவிடி வேணும்னா வச்சிட்டு போய்டுறேன்....இதக் கண்டிப்பா பாருங்க ஸார் ...மறந்திராதீங்க... கோசா -- ஆளு பாத்தா ரெம்ப டிசென்ட் ஆ இருக்கீங்க....இனிமேல இந்த மாதிரி வந்து தொந்தரவு பண்ணாம இருந்தாலே நல்லது....புரியிதா...

Oct 16, 2008

சார்லஸ்டன் போ.வி.த

--என்னடா பழசெல்லாம் எடுத்து தூசி தட்டி இங்க பதிப்பிச்சு இருக்கேனேன்னு பார்கிறீங்களா.... நம்மளோட ஞாபக மறதி நம்மளையே அப்பப்ப கவுத்து விட்டுரும்....போன வாரம் எங்க இருந்தேன்றதில இருந்து நேத்து என்ன சாபிட்டோம் வரைக்கும் நம்ம ஞாபகத்துக்கு சிக்காம கண்ணா மூசி விளையாடுறது தினசரி விளையாட்டா போச்சு... ம்ம்ம்.... அதான் ....ரெம்ப நாளா நினச்ச விசயத்த...மத்த இடங்கள்ல ஏற்கனவே எழுதி வச்ச நம்மளோட பொக்கிஷ பதிப்புகளை இங்க போட்டிருக்கேன்...-- 

(இது SATURDAY, AUGUST 18, ௨008 அன்னிக்கு பனைநிலம் வலை தளத்தில எழுதுனது....)  

சார்லஸ்டன் போர் விமானப்படை தளம். அதுதான் சார்லஸ்டன் போ.வி.த.

எல்லோரும் பூங்கா, அருங்காட்சி, விழா, அது இதுன்னு என்னன்னமோ எழுதுறாங்க.....ம்ம்ம்ம், நம்ம எதையாவது எழுதி வைக்கலாம்னுதான். ஹிஹி.. கொஞ்சம் வித்தியாசமான இடத்துக்கு போய் பார்ப்போமா. அப்பிடியே நம்ம வண்டியில ஏறுங்க! இப்போ நம்ம 26 ஹைவே வழியா போய்க்கிட்டிருக்கோம். அப்பிடியே போனா நார்த் சார்லஸ்டன் கொஞ்சம் கடந்தா விமான நிலையமே வந்துரும்...ஆனா இப்போ 642 ரூட் பாதையிலே டாச்செஸ்டர் பாதையிலே போய்க்கிட்டிருக்கோம்.....ரெண்டே நிமிசம்தான. இதோ வந்திட்டோம், எல்லாம் இறங்குங்க.

நம்ம ஊரு பஸ்டாண்ட் மாதிரி.....

விமானங்கள் எலிகள் மாதிரி ஊர்ந்து செல்லும் காட்சி....


என்ன எல்லாரும் அப்படி பார்க்கிறீங்க....இப்போ நீங்க பார்கிறதுதான் சார்லஸ்டன் போர் விமானப்படை தளம். அதுதான் சார்லஸ்டன் போ.வி.த. அமெரிக்காவிலே பழைய விமான தளங்களில் இதுவும் ஒண்ணு..கிழக்கு அமெரிக்காவிலே முதல் மூணு பெரிய விமான தளத்திலே இதுவும் ஒண்ணு......ஊரிலிருந்து 10 மைல் தள்ளியிருக்கு....கொஞ்ச நஞ்சமில்ல கிட்டத்தட்ட 3700 ஏக்கர் நிலம் இதுக்கு....6000 பேர் வேலை பார்க்கிற இடம் வேற....  


அப்பாடி எம்மாம் பெருசு......C17 முன்னே ராணுவ வீரர் வாக்கிங் போறாரோ ?



1931 லே இதுக்கான இடம் வாங்கியிருந்தாலும்.....இரண்டாம் உலகப்போரில தான் 1941 லே சார்லஸ்டனோட புவிதள மதிப்பு தெரிஞ்சு போர்விமான தளத்தை நிர்மாணிச்சாங்க......1951 லதான் இதுக்கு சார்லஸ்டன் ஏர் பேஸ் பேர் வச்சாங்க. இன்னொரு விசயம் என்னான்னா, நம்ம இப்ப பயன்படுத்துகிற பொது விமான ஓடுபாதை ராணுவத்துக்கு சொந்தமாகத்தான் இருந்தது.... 1952 லிருந்து பொதுஜன விமானசேவைக்கும் பகிர்ந்தளிக்க சம்மதிச்சாங்க. இதோட 2007 பட்ஜெட் தெரியுமா..அதிகமில்லை ஜென்டில்மேன், 3.3 பில்லியன் டாலர்...அதாவது 3,300,000,000 டாலர்கள்.....யாரும் உணர்ச்சிவசப்பட்டு போய் உடனே வாங்கிட வேணாம்....அமெரிக்கா கொஞ்சம் பிழைச்சிட்டு போகட்டும்.... 


சார்லஸ்டன் தொங்குபாலத்தின் மேலே


இங்கே இயங்குகிற முதன்மையான விமானம்னு சொன்னா...C 17 தான்....இந்த ரக போர் விமானம் 585,000 பவுண்ட் எடையோட 500 மைல் வேகத்தில 6000 மைல் தூரத்துக்கு மேல ஒரே மூச்சுல பறக்கும்... இது நவீனமான அதிவிரைவு வீரர்கள் மற்றும் சரக்குகளை போர்ததளத்திறகு கொண்டு சேர்க்கும் விமானமாகவும் பயன்படுத்தலாம். விகிமேபியாவின் ஏரியல் வ்யூ http://wikimapia.org/#lat=32.899768&lon=-80.057373&z=15&l=0&m=s&v=௨ 


ராணுவ வீரர்கள் ஈராக் பயணம்....நரகத்தை நோக்கி......

நீங்க இப்ப நிற்கிற இடம்....சார்லஸ்டன் விமானநிலையத்திலிருந்து....நம்ம ஊரு பாஷையில சொல்லனும்னா...நடக்கிற தூரந்தான. அப்பிடியே வடமேற்கு வழியா வந்தா C4 இயங்குதளம் இருக்கும், அதுக்கு வடக்கில நீங்க இப்ப பார்க்கிறீங்களே அதுதான் KC10 எக்ஸ்டெண்டர் பேஸ். அதுக்கும் வடக்கில நம்ம ஊரு பஸ்டாண்ட் மாதிரி வரிசையா C17 ஐ நிறுத்தி வச்சிருக்காங்க. அப்பப்ப பொழுது போகலன்னா இங்க இருக்கிற விமானிகள் பயிற்சி பண்றென்னு சொல்லிக்கிட்டு போர் விமானத்தில மின்னல் வேகத்தில ஊர சுத்திப்பாக்க போய்க்கிட்டு இருப்பாங்க..நம்ம காதுக்குதான் பிடிச்சது கேடு! 

சர்லச்டன் மேலே சுற்றும் இராணுவ வல்லூறு


போருக்குத் கிளம்பும் வீரர்கள்....மரணப் பய(ண)ம் ?!!





வலிமையை பறை சாற்றும் ராணுவ விமானங்கள்.....விமான அணி வகுப்பில்

கொசுறு தகவல்:

163 நாடுகள்ள அமெரிக்க ராணுவத்தோட 470,000 ராணுவ வீரர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை பாத்துக்கிட்டிருக்காங்க. உள்நாட்டையும் சேர்த்து மொத்தம் 1.3 மில்லியன் பேர்.

இன்னிக்கு நிலவரப்படி கிட்டத்தட்ட ௩௯ நாடுகளில் இருக்கிற ௮௨0 இராணுவ தளங்களில் இருந்து தன்னுடைய நேரடி மற்றும் மறைமுகமான ஆதிக்கத்தை உலகமெங்கும் செலுத்தி வருகிறது... அமெரிக்கா ராணுவத்தோட மொத்த செலவு $431.7 பில்லியன் டாலர்கள் ஒவ்வொரு வருசத்துக்கும்....(இந்திய ரூபாய்க்கு மாத்தி பாத்து வயித்தெரிச்சல கூட்டிக்க வேண்டாம். )
-----------------------------------------------------------------------
அமெரிக்கா ராணுவ விமானங்கள் பற்றிய சில வீடியோ படங்கள்










Oct 15, 2006

STEM CELLன்னா என்னாங்க

நம்மூர் பொதுசனங்கள், தொன்று தொட்டு அந்தக்கால நாடகங்களாகட்டும்...இடைக்கால மற்றும் இந்தக்கால சினிமாவாகட்டும்... அத்தனையையும் வரையரையில்லாமல் ரசிக்க தெரிந்து கொண்டிருக்கும் அளவிற்கு, அறிவியலை சிறிதேனும் ரசிக்க முயன்றதில்லை...எல்லாவையும் தெரிந்து கொண்டிருக்காவிடினும்...மிகச்சிறந்த....நம் வாழ்வை அன்றாடம் பாதிக்கக்கூடிய அறிவியலை தெரிந்துகொண்டிருப்பதில் எந்த தவறும் இல்லை.
மேலும் அதற்கேற்றார் போல தமிழில் அறிவியல் கட்டுரைகளும் அதன் சமூகத்தாக்கங்களும் மிகக்குறைவு என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்பகுதியில் அறிவியலின் சில சுவராசியமான விஷயங்களை தமிழ்ப்படுத்த, எளிமைப்படுத்த முயன்றுள்ளேன். முதல் பகுதியில் ஸ்டெம் செல்லைப்பற்றி சிறிது பார்ப்போமா



...........................

ஸ்டெம் செல் (stem cell)

முன்னுரை

மருத்துவ உலகில் கிட்டத்தட்ட எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தாலும், தண்டுவட மற்றும் மூளை, சில விநோத இதய, கல்லீரல் வியாதிகள் மருத்துவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மாபெருரும் சவாலாக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. இந்த உடல் உறுப்புகள் சேதாரமடைந்தால் அதை எப்பாடுபட்டாலும் சரிப்படுத்தி உயிர்காக்க முடியாமல் போனது.

இந்நிலையில் 1998 நவம்பர் மாதம் ஒரு அற்புத வரப்பிரசாதமாக ஜேம்ஸ் தாம்ஸன், விஸ்காஸ்டின் யுனிவெர்சிடி (Wisconsin university) மற்றும் ஜான் கீர்கார்ட், ஜான் ஹாப்கின்ஸ் மெடிசின் ஸ்கூல் (John Hopkins School of Medicine)ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம்செல் மகத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு முன்பே (Ernest A. McCulloch and James E. Till - 1960) அது பற்றிய ஆராய்ச்சிகள் வந்திருந்தாலும் மனித கருமுட்டையிலிருந்து ஸ்டெம் செல்லை உருவாக்கும் அற்புதத்தை முதலில் கண்டுபிடித்தது அவர்கள் தான்.

ஸ்டெம் செல் - விளக்கம்

இப்போது ஸ்டெம் செல் தனித்தன்மையை, அது எவ்வாறு மற்ற செல்களிடமிருந்து மாறுபடுகிறது என்பதை பார்த்து விடலாமா..

நம்மூர் மாயாஜாலக்கதைகளில் படித்திருப்பீர்கள் மந்திரக்குள்ளனின் சுண்டு விரல் துண்டுபட்ட மறு நிமிடமே அது மாயமாக வளர்ந்து மற்றொரு குள்ளனாக உருவெடுப்பதாக. அது போன்று நம் உடம்பில் செல்களுக்கு மந்திரத்தன்மை கிடையாது. நம் உடம்பு மிகச்சிக்கலான, உயிர் மூலக்க்கூறுகளினால் உருவாக்கப்பட்ட உயிரினமானதினால் இது போன்ற வளர்ச்சியடையும் சிறப்புத்தன்மைகள் அதற்கு கிடையாது.

ஆனால் இந்த ஆராய்ச்சியாளர்கள் விடாத முயறசியாக நம் உடம்பில் உள்ள சில வகை செல்களை இந்த வகையான தன்மை கொண்டதாக தூண்ட முடியும் என்று கண்டறிந்தார்கள். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் ஒரு மகத்தான மைல்கல். இவ்வகை செல்கள் பல்வேறு கூறுகளாய் பிளவடைந்து அதே போன்ற செல்களை உருவாக்கும் தன்மையையும் (Proliferation), தூண்டல்களுக்கு ஏற்றவாறு சிலவகை சிறப்பு செல்களாகவும் (differentiation) உருவாக்க முடியும் என்றும் கண்டறிந்தார்கள். இவ்வித சிறப்பு செல்கள் பல்கி பெருகி பல்வேறு உறுப்பாக உருவெடுக்கச் செய்யலாம். அங்கனம் இச்செல்கள் எந்த மனித உடம்பின் எந்த பாகமாகவும் உருவாக்கம் செய்து விட சாத்தியமுண்டு. கரு வகை ஸ்டெம் செல்கள் (Embryonic Stem Cells) கரு உருவாகி ஒரளவு வளர்ச்சியடந்த நிலையில் உள்ள செல்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஸ்டெம் செல்களாகும்.




இம்முறையில் உருவான உறுப்புகள் காலகாலமாக தீராத நோய்களுக்கு அருமருந்தாகவும், விபத்துக்களில் பாதிக்கப்பட்ட மற்றும் செயலிலந்த மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்து விடுகிறது. இம்மருத்துவத்தின் மகத்துவம் அளவிடமுடியாத மற்றும் ஆச்சரியப்படத்தக்க ஒன்றாகும்.

ஸ்டெம் செல் உருவாக்கம் படத்தில்

1) கரு 2) 5-7 நாட்களான கரு 3) ப்ளாஸ்டோசிஸ்ட் நிலை கரு 4) இளநிலை ஸ்டெம் செல்கள் 5) இரத்த, நரம்பு மற்றும் இதய செல்கள்

இது க்ளோனிங் (cloning) எனப்படும் நகல்தன்மையிடமிடந்து மாறுபட்ட ஒன்றாகும். க்ளோனிங்கின் மூலம் உங்கள் உடல் செல்லின் மரபுத்தன்மையை மட்டும் எடுத்து, மரபுத்தன்மை நீக்கப்பட்ட கருவினுள் செலுத்தி அக்கருவை முழு உயிரினமாக வளரச்செய்தால் அது அச்சு அசலாக உங்களைப் போன்ற ஒருவரை உருவாக்கி விடலாம். இம்முறையில் பல நகல் மனிதர்களை உறுவாக்குவது சுவராசியத்தினை விட சமூகக்குழப்பங்களையும் மனக்குழப்பங்களையும் உண்டாக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

ஆனால் ஸ்டெம் செல் உடம்பிலிருந்தே உள்ள செல்களைக்கொண்டு உடல் பாகங்களை உருவாக்கி உயிர்காத்து மற்றும் நோய் தீர்ப்பதால் அதை ஒப்பிலா மருத்துவம் என்றே கூறவேண்டும்.





ஸ்டெம் செல்லிருந்து பல்வேறு உடல் பாகங்கள் உருவாவதை விளக்கும் படம்
இவற்றையும் மீறி விபரம் தெரியாத சில அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் இவ்வித ஆராய்ச்சிகளை முடக்கிவிட முயற்சிக்கிறார்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் அமெரிக்க சனாதிபதி ஜார்ஜ் புஷ், ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கான பண ஒதுக்கீட்டை முடக்கிவைத்து ஆணையிட்டது. இது இத்துறையில் உள்ள அமெரிக்க ஆராய்ச்சியாளர்க்கு ஒரு பேரிடியாக அமைந்தது (செய்தி இங்கே http://news.bbc.co.uk/2/hi/science/nature/5197926.stm).


ஸ்டெம் செல் பற்றிய ஜார்ஜ் புஷ் மீதான கேலிச்சித்திரம



ஆனால் அறிவியலின் வளர்ச்சியை இது போன்ற சிந்தனையில்லா முயற்சிகளால் தடுக்க முடிந்ததாக சரித்திரம் இல்லை.

ஸ்டெம் செல் வளரும்....அறிவியலும் வளரும்.....

மேல் விபரங்கள்.

http://www.dnalc.org/stemcells.html

http://www.cnn.com/interactive/health/0107/stem.cell/frameset.exclude.html

http://www.stemcellresearchfoundation.org/WhatsNew/EmbryonicStemCells.htm

http://stemcells.nih.gov/info/basics

http://ec.europa.eu/research/quality-of-life/stemcells.html

http://www.newscientist.com/channel/sex/stem-cells

செந்தில்குமார்

Sep 30, 2006

கடவுள் உண்டா ? The God Delusion ~ Richard Dawkins *

(புத்தக விமர்சனம்)


இதை விட அழகாக கடவுள் தன்மையை பகுத்து ஆராய்ந்து, அதன் வேரினுள் ஊடுருவி அதன் ஆதாரங்களின் அத்தனை அங்கங்களையும் உலுக்கியெடுக்கும் வண்ணம் கேள்வி கேட்கமுடியுமா என்று வியக்க தோன்றுகிறது.

மனநம்பிக்கை, ஒருவகையில் மனிதனுக்கு ஆதாரமாக இருப்பதாக எடுத்துக்கொண்டால், மறுவகையில், அது மனிதனின் சிந்தனையை ஆழமாக முடமாக்குவதை மிக நேர்த்தியுடன் இப்புத்தகத்தில் ஆராய்ந்துள்ளார் - ரிச்சர்ட் டாவ்கின்ஸ்

அறிவியலும் நம்பிக்கையும் எவ்வாறு முரண் படுகிறது என்பதை
(ஆங்கிலத்தில்) Science, based on scepticism, investigation and evidence, must continuously test it own concepts and claims. Faith, by definition, defies evidence: it is untested and unshakeable, and is therefore in direct contradiction with science என்றும்

அது போல நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த மதங்களின் மறுபக்கத்தினை...
though religions preach morality, peace and hope, in fact, they bring intolerance, violence and destruction. என்றும் கூறுகிறார்

சமீபத்திய சர்ச்சைக்குள்ளான "intelligent design" தத்துவபோராட்டஙகள் , அறிவியலை கட்டுப்படுத்தும் மூடத்தனமான முயற்சி என வலியுருத்துகிறார் ( பார்க்க வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ்).


[அனைவரும் - மதநம்பிக்கையுடையோரும் - படித்து சிந்திக்க வேண்டிய அருமையான புத்தகம்]

ரிச்சர்ட் டாவ்கின்ஸ் -- இன்றைய தலைமுறையின் தலை சிறந்த அராய்ச்சியாளர் சிந்தனைவாதிகளில் ஒருவர்.

click below for more

ரிச்சர்ட் டாவ்கின்ஸ்
பற்றி

ரிச்சர்ட் டாவ்கின்ஸ் - வலைத்தளம்

வீடியோ

மேலும் விபரங்கள் (விகிபீடியா)

பிபிசி

Sep 26, 2006

தீயிலிட்ட மனது




யாராவது என் மனதிற்கு

தீ வைத்து விடுங்களேன்




என் மனது

பல்லாண்டு பல்லாண்டு

பல கோடி நூற்றாண்டு - என்னைக்

கொன்று கொண்டே இருக்கிறது - பசியாய்

தின்று கொண்டே இருக்கிறது -

.

என்னில் உருவகித்து - என்னையே
முடமாக்கியது

எனக்காக உயிர்த்து
என்னையே நீர்த்தது
.


அதற்கு நீரூற்றி வளர்த்தவன் நான்
விஷ வித்துக்களையே அளித்தது அது !


தீபமேற்றி வளர்த்தவன் நான்
என் கைகளை கருக்கி விட்டது அது

காறறு் வீசியவன் நான் - என்
சுவாசத்தையே சுருக்கியது அது

அதனைக் கண்டறிந்தவன் நான்
என்னையே தொலைத்து விட்டது அது

பறக்கக் கற்றுத்தந்தவன் நான்
என் சிறகுகளையே வெட்டிவிட்டதே!


விழி தந்தவன் நான் - என் வாழ்வதனின்
ஒளியணைத்து விட்டது அது !


.

எனவே

என்

அடையாளங்களின் மிச்சங்களை

எந்தன் வாழ்வின் எச்சங்களை

அதன் உச்சங்களை - எவ்வித

அச்சங்களின்றி

நிரட

யாராவது என் மனதிற்கு

தீ வைத்து விடுங்களேன்

Sep 23, 2006

மரணிக்கத்தெரிந்தவன்




நீர் அருந்தும

நீர் இருந்தும் - நீந்தமுடியா

மீன் அவனே


.

தேன் எனவிருந்தும்

தேனிருந்தும்

தேற்றவியலா

வண்ணத்துபூச்சியானவன் அவனே

.

சிறகு இருந்தும்

சிறகென உருவமிருந்தும்

பறக்கவியலா சிறு

பறவை அவனே

.

வெளிதனில் தவழ்ந்தும்

ஒளியினையுண்டும்

காணவியலாக் காட்சி்

அவன்

.

காற்றில் பிறந்தும்

காற்றிருந்தும்

சுவாசம் தொலைத்த

அபலை அவனே

.

நினைவாய் இருந்தும்

நினவினைச்சுகித்தும்

நிந்திக்கத்தெரியாதவன்

அவன்

.



உணர விருந்தும்

உணர்விருந்தும்

உண்மை தொலைத்த

பேதையவனே

.

இறையே

நீ அவனுக்கு

ஒளி யளித்தாய்

அவனோ

அதை இருள் -

வெளியினில் தொலைத்தான்

அவனும்

இருளெனத் தொலைந்தான்

.

நீ

அவனுக்குத்தாய் -

உயிரெனச் சுகித்தாய்

அவனோ

மரணத்தை

துணைக்கழைத்திருந்தான்

அதனையே

மணந்திருந்தான்

அதனுள்ளே

என்றென்றும் உறைந்தான்

.

செந்தில்குமாரன்

Sep 19, 2006

மன அழகு

நிரந்தரமாவதில்லை

பனித்துளி

புல்லின் மீதுறங்கும்

அதிகாலைப்பனித்துளி


மலர்வதில்லை

தடாகத்தாமரை

இரவு நெடுகிலும்

மொட்டவிழாதா மரை



வீசுவதில்லை

சுள்ளென்ற சூரிய ஒளி

முகில்களினூடே முக்காடிட்ட ஆதவன்

Sep 18, 2006

உள்ளூரத்தேடிய உணர்வுகள்





இப்போதெல்லாம்

உள்ளிருக்கும் உயிர்வரை

உற்று -

இயல்பு சிறிதும் பிறழாமலே

உற்று உற்று

நோக்கிடினும்

உண்மைகள்

புரிவதில்லை



என் மனவெளியின்

ஒற்றையடிப்பாதையில்

ஓராயிரம்

ஆண்டுகளாய் பயணித்தும் - மன

வெளிச்சம் காண இயலவில்லை



அருந்துகிற நீர்

நிச்சலனத்தினூடேயும

நித்தமும்

நித்திரைத் தருணங்களிலூடேயினும்

என்னுடம்பில் - ஒட்டுவதில்லை



என் சுவாசக்காற்று

என்னுள் - சுதந்திரமாக

சுற்றுத்திரிந்திடினும்

உயிரை உண்மையோடு

உரசுவதில்லை



கண்ணிமை கூட

அதன் உள்ளூரத் -

தூங்காதென் கண்களை

தொட்டுத்தழுவுவதில்லை



ஆன்மாவின் ஆதிக்கமற்ற

அந்தரங்கங்களை

என் சிந்தையெங்கிலும்

சேதாரத்தோடு சிந்திய -

மிச்சங்களாகக்கூட

சேமிக்க முடியவில்லை



எனக்குள்ளே - எங்கெங்கு

நோக்கினும்

எட்டுத்திசை எழுகடலென்று

உள்ளூரத்தொலைந்து

உன்மத்தம் பிறழ்ந்து

திரிந்திடினும்

நான் யாரென்ற

நமத்துப்போன நிந்தனைகள்

எனக்கே புரிவதில்லை

தொலைந்த இயல்புகள்




ஓ வண்ணத்துப்பூச்சிகளே

உங்கள் உற்சாகத்தை

என்றென்றும்

இழந்து விடாதீர்கள்



ஓ மலர்களே

உங்கள் நிறங்க்ளை

தொலைத்து விட

எப்பொழுதும்

சம்மதித்து விடாதீர்கள்



ஓ தென்றலே

உங்களிக்குள்ளிருக்கும்

உன்னதத்தினை

எவ விடத்துமிழக்க

சம்மதித்து விடாதீர்


ஓ சிட்டுக்குருவிகளே

உங்கள் சிறகு

சுதந்திரங்களை

எந்நிலையிலும்

பலவீனமாக்கி விடாதீர்கள்


ஓ இனிய பறவைகளே..

உங்களின்பத்தினை

எங்கும்

இழந்து விடத் துணியாதீர்


ஓ அணில் குஞ்சுகளே

உங்கள் தூதுகலத்தினை

என்றென்றும்

துச்சமாக எண்ணி

விட வேண்டாம்



ஓ இயற்கையன்னையே

உன் ஏழிலழகை

ஊமையாக்கி விடாதே



ஏனெனில்

மனிதன்

................

................

................

................

................

Sep 10, 2006

குருட்டுப்பார்வை




என் கண்கள்

எதையும் கண்டதில்லை

எத்திசையும்

காண்பதேயில்லை

வண்ணங்களில்

சிறைப்பட்டுக்கொண்டதில்லை

வடிவங்களால்

வரையரை யானதில்லை

ஒளியினில்

மயங்கியதில்லை



எவையெல்லாம்

எப்பிடியெப்பிடியெல்லாம்

இருக்குமோ

என்றெண்ணியதில்லை

ஒளி பிரிந்த, தொலைந்த -

அதன்

உருக்குலைந்த ஓசை

நான்

நித்தம்

கேட்பதினால் - நிழல்

படரபயணம் செய்ததில்லை



கடல், இருட்கடல் முழுகி

முத்துக்குளிப்பினும்

கிடைப்பதென்னவோ

கருமுத்து

சிறிதும்

ஒளியில்லா முத்து



என் மனப்பிரபஞ்சத்தில்

ஒளிச்சூரியன்

தினமும்

இறந்தே பிறந்தான் - மறுபடியும்

பிறந்தாலும் இறந்தான்

இருட்சூரியனோ

இறந்தாலும் பிறந்தான் - பின்

இறப்பையே தொலைத்தான்

அதனால்தான்

நான் இருளை

இருளில்

சுவாசிப்பவன் -




என் மனப்பச்சையம் ஒளியில்லா சுவாசத்தில்

அச் சுகமில்லா வாசத்தில் -

உயிரில்லா ஜீவிதம்

அஜ்ஜீவிதததின் கண்களிலோ

வண்ணாமில்லா வாழ்க்கை

வறண்டுபோன வயற்காடு

வெளிச்சமில்லா இடுகாடு




இருப்பினும் செப்பிடுவேன்

ஊன் உறுதியோடு

உள சுருதியோடு

என் மனது

வணண்மயமான தென்று

எச்சூரியனையும்

சுட்டெரிக்குமென்று

வண்ணத்துப்பூச்சியானதென் மனம்





வண்ணத்துப்பூச்சியின்

வண்ணத்தினுள்ளே

உறைந்துதொ லைந்திருந்த என் மனம்

அன்றொரு நாள்

என் விழிகள்தனை

மற்றுமொருமுறை

தானமாக கேட்டது

அய்யகோ

நான் இம்முறைஎன் செய்குவேன்

விழிகள் தான்

எப்பொழுதோ ஒருமுறை

வண்ணத்தினுள்ளே

தொலைந்து விட்டதே



இம்முறை

என்மனப்பிரபஞ்சத்தில் மொளனவீச்சாய்

விரவியிருந்த

மதியென்னும் மாயவலைகளை

ஒன்றிணத்து

விழிகளுக்கு -

அதன் மொழிகளுக்கு

பதிலீடு செய்திருந்தேன்



இப்போதெல்லாம்

தினமும்

கனவுச்சோலைதனில்

வண்ணத்துப்பூச்சிகளை காண்கிறேன்


ஆனால்

அதன்

வண்ணங்களை

காண முடிவதில்லை


என் மன

எண்ணங்களை

காண முடிவதில்லை

Sep 9, 2006

மழலைக்காதல்




தோள் தொட்டுத்தூக்கி

உச்சி முகர்ந்து

உன் குறும்புக்கண்களை

கொஞ்சுகொஞ் சென்று

கொஞ்சநேரம்கா தலித்து

உன்னதரப்புன்ன கையை

அப்படிஅப்பிடியே இரசிக்க

அய்யகோ

எனை நானிழந்தேன்

.

என் கேசம் கலைத்து

காது மடல் வருடி

கன்னம் குழைத்து

முத்தத்தால் மூழ்கியெடுத்து

உன் பிஞ்சுப்பாதங்கள் என் நெஞ்சினை தாக்க

கொஞ்சி மகிழுமுனக்கு

என் நெஞ்சம் உன் மஞசமடா...கண்ணே...

.

கொஞ்சு மொழிகள் உணர்வாய்

கெஞ்சித் தவழும்

அருட்பார்வை அளிப்பாய்

விரல் பிடித்து வீதிதனில்

நடை பயில

இறைவனையே துணைக்கழைப்பாய்


.
என் மனக்கள்ளனே

என்னையே திருடியவனே

உன் மழலை சிரிப்புக்கு

இந்தப்பரபஞ்சத்தையே

தானமளிக்கிறேன்

.


கிள்ளை மொழி மிழற்றி

கொஞ்சு நடைபயின்று

எனை அள்ளிக்கொண்டு

போனதுன் உள்ளம் - மனக்கள்ளம்

.


இத்தனை காலங்களிலும்

எததனை தூரங்களிலும் -

என் மனத்தோடு ஒட்டிய

தொலைதூரச் சுவடுகளிலும்

இப்பொழுதும்

உன்னைத்தவிர

வேறு எவருமில்லை

.

இறை

.

இப்பி ரபஞ்சத்தில்

அங்கிங்கெ னாதபடி விரவி ஒவ்வொரு

அணுவிலும் அணுவாகி

ஆகாச வெளியினுள் வியாபித்து

கோடானுகோடி சூரியன்களை

அத்துணை கோள்களை

அண்ட வெளியிள்

அகண்ட பிரபஞ்சத்தில்

பரப்பி

நம் அத்துணை

ஜீவனிலும் ஜீவனாகி - ஜீனாகி

நம் ஒவ்வொரு பிரேத

செல்லிலும் செயலாகி

உன்றன் -

உயிரணுவினுள்ளும் உயிர்த்தெழுந்து

உன் ஊனுக்குமுயிர் தந்து

உன்னையே உருவகித்து

ஆதர்சனமான சக்தியாகிய

இறை

இப்புவிதனில்

மானிடமாக மட்டும்

உருவு கொண்டதென்ற மாயை

நம் மன வெளிதனில் படர

மானிடனே - நீயே

காரணம்



இப்பிரபஞசத்தில்

எங்கெங்கினும் - இறை

உன்னிலும், என்னிலும்

சக மனிதனும் இறை

சமத்துவமே இறை

அன்பே இறை

.

அவ்விறை மறந்து

மானிடன் கற்பனைவடித்த

இதுகாறும் கதைத்த

இம்மாயையே கிருஷ்ணனனையே

கிருத்துவையே

முஹம்மதுவையே

இறையென்று

உணரும் உன்மனம்

விநோதம் - இப்பிரபஞ்ச உண்மைக்கு

விரோ தம்


முப்பத்துமுக்கோடி தேவர்களும்

எம்மதத்து கடவுளரும்

மானுடவடி வில்

உயிர்த்தெழுவ

இறையென்ற இறவா

வரம் பெற்றனரோ

யாரிடமோ எங்கிருந்தோ

யாமறியோம் பராபரமே



அவர்களையும் படைத்தவன்

ஒருவன் இருப்பனெனில் அவன்

எவனோ

அவன் தான் எப்பிடிப்

பிறந்தானோ


.


இதுகாறும்

நீ கண்ணாறக் கண்டிட

எத்தேவனும்

கிஞ்சித்தும்

இசைந்ததில்லை


அய்யகோ

அத்துணை தேவர்களும்

எப்பழியில்லா பிஞ்சுக்குழந்தைக்கும்

அருட் பாலிக்காத

நெஞ்சு படைத்தவரோ

.

நீ வடித்த இவ்விறை... இதுகாறும்

உன்னிடத்து வந்தது ண்டா.....

நீயுன்

கண்ணால் கண்டதுதா னுண்டா

படைப்பு நோக்கா

படைப்பாளியென்றுன்

இறையிருப்பின்

படைப்பாளி அடையா முக்தி யிலா

தென்று நீ உனையே

தொலைப்பதென்பது

இப்பிரபஞத்தின் விநோத மாயை

இம்மாயை மானிடர்

எழுச்சிக்கு இடர்

அது

என்று தீருமோ, சிந்தை சிறக்குமோ


உன் கைக்காசு

உண்டியலில் - போட்டு

உலகத்தினை கட்டியாளும்

இறையிடத்தில் இறைஞ்சி

கோடானு கோரிக்கைகள்

நித்தம்..

இது உன் இறையை

உன்னிடத்து கிஞ்சித்தும்

கொண்டு சேரா தென்று

அறியாதது

உன் பித்தம்


.


இறையை

உன்னுள் தொலைத்து

இறைவனை, எங்கெங்கோ

தேடித் தொலைக்கிறாய்

உன்னையே, உண்மையையே

இழக்கிறாய்




இதை

உணர்ந்தும் உணரா

இந்நிலை, தன்னிலை கெட்ட

மானுடர்தம் மனம் கண்டு

நெஞ்சு பொருக்குதில்லையே எம்

நெஞ்சு பொறுக்குதில்லையே

.


இம்மாயையே இறையென்று

பொய்யதனை பாரினில் பரப்பி

மதம் என்ற பெயரில்

செப்புவரே

அம்மறை

கழன்ற மானிடர்

கூற்றிய குறைகொண்ட

கூற்றிலக்கியங்கள்


மனமெனும் பாலில்

நம்மனப்பாலில்

விரவியிருக்கும் விஷமென்பேன்

இந்நஞ்சு கண்டு எந்நெஞ்சு

பொருக்குதில்லையே

எந்நெஞ்சு பொருக்கு தில்லையே

.

Sep 6, 2006

நிஜமான நிஜம்




நேற்றிரவு ஓர் கனா கண்டேன்

நிஜமாகவே நிஜமில்லாத ஒரு கனா...

உருவமில்லா ஒரு உருவம் –

தெளிவான ஆன்மாவோடு

உரையாடிது....

நான் அதனிடத்தில் வினா எழுப்பினேன்

பதில்கள் பக்குவமாக...பாங்காக...அங்கிருந்து

நீ யார் ? , என்று வினவினேன்

நான் நானில்லை! என்றது..அது

எங்கிருந்து வருகிறாய்.??? ..நான்

உண்மையிலிருந்து!...என்று இயம்பியது...

நான் ஏன் பிறந்தேன் ? என்று மதிக்குழப்பத்தினிடையே - என் கேள்வி..

இறப்பதற்காக !!!

பிறப்பது இறப்பதற்கெனில் - இறப்பது பிறப்பதெற்கெனில் - இடையில் வாழ்வதெற்கு...

வாழ்வது வாழ்விழப்பதெற்கு ! - என்றது மொளனமாக

கடவுள் எங்கே ? _ நான்


உனக்குள்! _ அது

நீ அழிந்து விடுவாயா ! - வினையமுடன் வினவினேன்...

உருவால்தானே அழிவதெற்கு !

நான் என்பது எதுவரை ?

இறையை அடையும் வரை !!

உயிர் எங்கே ??? உயிர்த்துடிப்புடன் என் கேள்வி..

உனக்குள் எங்கும் உயிர்...ஒவ்வோர் அங்கத்திலும் ...உயிர் வீச்சாய் பதில் அங்கிருந்து

பிரபஞத்துடன் கலப்பதெப்போது? இது நான்

நான் என்பதை ஒழித்து...! அதன் பதில்

ஞானம் பெருவது எபபடி ??? ஞானக்குழப்பத்தினிடையே நான்

பதில் செப்பாது என்னிடத்தில் எதிர் கேள்வி வீசியது...

நீ யார்...???

யுக யுகமாய் சிந்தித்து பார்த்தேன்...

நான் யார்,,,,. நான் யார்

பதில் வரவில்லை எனக்குள்

கேள்வியை கேள்விப்பட்டதே யில்லையோ... ??

ஒரு வேளை பதிலோ இல்லையோ... ????

அதனிடத்திலே தஞ்சமடைந்தேன்...

நீ யார் என்று அறியாத வரை_ ஞானம் பெற வழியில்லை...


இறை என்பது என்ன ? என் கேள்வி

இறை என்பது இருளானது...ஒளியானது...இரண்டும் கலந்தது...இரண்டும் இல்லாதது...எதுவுமானது.....எதுவுமில்லாதது...எல்லாமுமானது...முடிவில்லாதது.....என்றது ஆன்மா

அயர்ச்சியுடன்...முடித்து விடலாமா ? என்றேன்...

ஆரம்பித்தால்தானே முடிப்பதற்கு!!! என்றது மெதுவாக...

அந்த திடுக்கிடலுடன் என் கனவு கலைந்தது....

கனவு என்பது நிஜமில்லாத நிஜம்

ஆனால் நான் கண்ட கனா

நிஜமான நிஜம்...


செந்தில் குமாரன்

Nov 20, 2005

மானுடம்.....




மனங்களை மானுடர்கள்

எங்கெங்கோ எதற்காகவோ

தொலைந் தெறித்து விட்டார்கள - பாவம்

மானுடத் தன்மையும், மானுடத் துண்மையும்

மனித சீவராசிகளால் -

யுக யுகங்களாக உருக் குலைந்து உரு தொலைந்து விட்டதே......!!!

அற்றொழிந்த மானுடர்களே - தாங்கள்

ஆற்று நீரில் அடித்து செல்லப்படுவதை

அவ்வப்போது கூட உணர்வதில்லையா....

அய்யகோ...

எங்கே, எதற்கு, ஏன்

கொண்டு செல்லப்படுகிறோம்- என்று அறியாப பிண்டங்கள்

ஓட்டைச் சடலம், உப்பில்லா பாண்டம்

என்றெவனோ- பாடித்

தொலைத்ததை

உண்மையாக்கும் ஈனப்பிறவிகள்...

என் மானுட மன்னர்களே... கனவான்களே! - நீங்கள்

காரல் மார்க்ஸினை அறிந்ததுண்டா

டால்ச்டாயின் தத்துவ நெறியை மேய்ந்த துண்டா.... ?

நிகொலாச்கோயின் இடர்பாடுகளை உணர்ந்ததுண்டா - லெனினின்

சமத்துவ புரட்சிகளுடன் புரட்சி செய்ததுண்டா....

தாகோரின் கவிதாஞ்சலியில் முத்தெடுத்தது உண்டா...

பாரதியை உரசியதுண்டா....நீட்சேயினை நிந்தித்ததுண்டா...

ஷெல்லியின் வரிகளை சுவாசித்ததுண்டா......ஷேக்ஷ்பியரினுள் சென்றது உண்டா...

வேர்ட்ஸ்வெர்த்திடம் விளையாடி யதுண்டா....

புத்தனை புரிந்ததுண்டா....புதுமைப்- புத்தனை புரட்டியதுண்டா.....

ஜெயகாந்தனை...ஜெகத்தினை... அளாவளாவியது உண்டா....

ஒஷோவின் உயர்த்த சிந்தனைகளை உண்ர்ந்ததுண்டா...

ஜென் துற வறங்களை ஒரளவு உரசியதுண்டா....

ஆரோக்கியமான சிந்தனைகளிலாவது வலம் வந்ததுண்டா.....

நீங்கள் பிறக்கிறீர்கள் . என்ன வென்று உணராமலே....

நீங்கள் வளர்கிறீர்கள்.....எப்படி யென்று தெரியாமலே....

பின்

இறந்து விடுகிறீர்கள்....எதற் கென்று புரியாமலே....

மானிட்ர்களே வாழ்வை, அதன் பிரபஞ்ச உண்மையை,

அறிந்து புரிந்து உணர்ந்து கொள்ளுங்கள்....

இயற்கையின் இறையை - இரசிக்கக்

கற்றுக்கொள்ளுங்கள்....

அன்பே இறையென்றுணருங்கள்


இதெல்லாம் முடியா விடில் ......

இன்றைக்கே......

இறந்து விடுங்கள்....

- செந்தில் குமாரன்