Dec 21, 2009

அவதார் - மாபெரும் திரைக்காவியம் - விமர்சனம்




கிட்டத்தட்ட பதினாலு வருட நேர்த்தியான கருத்துருவாக்கம்!

ஒவ்வொரு பிரேமிலும் கற்பனைக்கெட்டாத உலகத்திற்கே நம்மை இழுத்துச் செல்லும் மாயாஜால உலகம்!

மனதை வசியவைத்த திரைக்கதை அமைப்பு மற்றும் கண்களை கொள்ளை கொள்ளும் கிராபிக்ஸ் சித்து விளையாட்டு.

ஏறக்குறைய ஐயாயிரம் கோடிகளை அசுரத்தனமாக விழுங்கிய தொழில்நுட்பம்!

அதுதான் அவதார்!

டெர்மினேட்டர் (Terminator), ஏபிஸ் (Abyss), ஏலியன்ஸ் (Aliens), டைட்டானிக் (Titanic) போன்ற வரலாறு படைத்த படங்களை கொடுத்துவிட்டு டாக்குமெண்டரி படங்களின் பக்கம் ஜேம்ஸ் கேமரூன் கவனத்தை செலுத்தியிருந்தாலும், இவரின் மனதில் பதினைந்து வருடங்களாக கருவாகி வந்த அவதார் எனும் திரைக்கதை, கேமரூனை மீண்டும் திரைப்படத் துறைக்கே கொண்டு வந்துள்ளது.

இனி கதை.
விண்வெளியில் தொலைதூர கிரகநிலவான பாண்டோரா-வில் இருக்கும் அரியவகை உலோகத்தை அடைவதற்கு நம் பூமியில் இருக்கும் ஒரு நிறுவனம் கி.பி. 2154-ல் முயற்சிக்கிறது. இதற்கு இடைஞ்சலாக இருப்பது அங்கே வசித்து வரும் நீலமான உடல் படைத்த, மனிதனை விட தொன்மையான, ஒன்பது அடி உயிரினம் நாவி( Na'vi). மனிதர்களை எதிரிகளாகப் பாவிக்கும் நாவி இனத்தை மசிய வைப்பதற்கு நம் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தந்திரம் உபயோகிக்கிறார்கள். அதுதான் நாவி இனத்தின் டி.என்.ஏ (DNA-மரபணு) வையும் நம் டி.என்.ஏ வையும் இணைத்து நாவி உடலமைப்பு போன்ற ஒரு கலவையான உயிரை அங்கே உருவாக்குவது - அதன் பெயர்தான் அவதார்.




அவதார் மூலம் நாவி உடலமைப்பில் மனித ஆத்மாவை நம்மூர் கூடு விட்டு கூடு பாயும் விதமாக உயிர் கொடுத்து நாவி இனத்தினூடே பழகி அவர்களது நம்பிக்கையை பெற முயற்சிக்கிறார்கள். (இயக்குனர் ஒரு பேட்டியில் இதனை இந்திய இதிகாசத்திலிருந்து தழுவி எடுத்ததாக தெரிவித்துள்ளார்!).
இம்முயற்சியில் தனது இரட்டைச்சகோதரன் இறந்ததை ஈடு கட்டும் விதமாக வரும் உடல் ஊனமுற்ற ஒரு ராணுவ வீரன் ஜேக், தானும் ஒரு அவதாரமாக உருவெடுக்கிறார். அவருக்கு இட்ட பணி, 'நாவி'யினத்தின் நம்பிக்கையைப் பெற்றபின் அவர்களின் பூர்வீக இடத்தை விட்டு வேறு பக்கம் நகரச் செய்வது. பிறகு அந்த இடத்தின் அடியிலிருக்கும் அரிய உலோகத்தை (unobtainium) பெறுவது.

ஜேக்கின் அவதார் அங்கிருக்கும் நேத்ரி (Neytiri) எனும் நாவி இளவரசியை சந்தர்ப்பவசமாக சந்தித்து அவள் மூலமாக அவ்வினத்தில் கலக்கிறது. அவதாருக்கும் நேத்ரிக்கும் காதல் மலர்கிறது.










அவதார் நாவிக்களை அவ்விடத்திலிருந்து அப்புறபடுத்துவது தோல்வியில் முடிய, மனிதர்கள் போரின் மூலமாக நாவிக்களை அகற்ற முயற்சிக்கிறார்கள். அதில்
விருப்பம் இல்லாத அவதார் மனிதர்களை எதிர்த்து நாவிக்களிக்கே உதவி செய்கிறார். வெல்வது யார் ? மனிதர்களா ? அல்லது மனிதனிலிருந்து அவதாரத்தின் துணையுடன் போரிடும் நாவிக்களா ? மீதி வெண்திரையில்.

கேமரூனின் அசாத்திய உழைப்பு ஒவ்வொரு நொடியிலும் மிகப்பிரமாண்டமாக தெரிகிறது. படம் பார்க்கும் முன்னரே "ஐமாக்ஸ்-3D"-ல் தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து சென்றது மிக நல்லதாகப் போனது. அவதாரின் பிரமாண்டத்தை அதன் உள்ளே நாமும் ஒரு அங்கமாகப் பார்ப்பது ஒரு சிறப்பு அனுபவம். கேமரூனின் தனித்துவமே லாஜிக்கை அழகாக மீறுவது. நம்மூர் காதல் கதைபோல பார்த்த உடன் இந்தப்படத்திலும் பற்றிக்கொண்டாலும், படம் பார்ப்பவர்கள் மனமும் அதனுடன் இயைந்து விடுகிறது. அது போல மனிதர்கள் நாவிக்களை எதிர்க்கும் கட்டத்திலும் நம் மனம் மனிதர்கள் வெல்லவேண்டும் என்று நினைப்பதை விட நாவிக்கள் வெல்வதையே விரும்புவதிலே தெரிந்து விடுகிறது கேமரூனின் திரைக்கதை நம் மனதை வென்று விட்டதை.






கேமரூன் பலவருட இடைவேளைக்குப் பின்னே இதை வெளிவிட்டாலும் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மீண்டும் நிரூபித்துள்ளார்.மேலும், பலவருடங்களுக்கு முன்னரே வரவேண்டிய திரைக்கதை, தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாய் இப்போதுதான் சாத்தியமாகி உள்ளது. காதலையும், மனித உணர்ச்சிகளையும் தொழில்நுட்பத்தின் தாக்கங்களையும் அழகாக ரசவாதக்கலவையாக ஒன்றுடன் ஒன்று இணைப்பதில் அவருக்கு நிகர் அவரே. அவருடைய முந்தைய பட டைட்டானிக்கிலும் (Titanic) காதலை அருமையாக செதுக்கி நம்மை உருக வைத்திருப்பார். இந்தப்படத்தில் ஒரு சிரமம், இதில் வருவது நாவி எனும் வேற்று கிரக உயிரினம். அதை ஒரு மனித ஆத்மா காதலிப்பது போல பார்வையாளர்களை வசியப்பத்துவது கொஞ்சம் சிக்கலான வேலை. ஆனால் அதில் வெற்றி பெற்றுள்ளார்.

படத்தில் சில குறைகளும் உள்ளன. சில நேரங்களில் காட்சியமைப்பு நம் கண்களை லேசாக பதம் பார்க்கிறது. படத்தில் சில இடங்களில் லாஜிக்குகள் மீறல் லேசாக உறுத்துகிறது. ஆனால் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் விதமாக பிரமிப்பான காட்சிகள் சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது.

கேமரூன் தனிக்காட்டு இராஜாவானாலும் மற்றவர்கள் துணை இல்லாமல் பிரமாண்டமான படத்தை அளிக்க முடியாதல்லவா. நாமும் அவதாரில் மற்ற முக்கியமான ஆட்களின் பங்களிப்பை பார்க்கலாம்.
இசை ஜேம்ஸ் ஹோர்னர் -- அபோகலிப்டா (Apocalypto) மற்றும் அபோல்லா (Apollo-13) போன்ற படங்களுக்கு இசையமைத்தவர். இதிலும் அருமையாக அசத்தியுள்ளார்.

எடிட்டிங்கிலும் ஸ்டீவென் மற்றும் ஜானுடன் இணைந்து கேமரூனின் கைவண்ணம் நேர்த்தியாகத் தெரிகிறது.

ஜூராசிக் பார்க் (Jurassic Park) மற்றும் லார்ட் ஆப தி ரிங்ஸ் (Lord of the Rings) படங்களில் பணி புரிந்த ஜோ லேட்டேரி, ஒளித்தந்திர நிபுணத்துவத்தில் -ல் (Visual Effects) இதுலும் ஒரு கலக்கி கலக்கி உள்ளார். மூன்று முறை ஏற்கனவே ஆஸ்கர் வென்ற ஒரு நிபுணர்.

அவதார்- திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல். அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு மாபெரும் திரைக்காவியம்.

அவதாரின் பிரத்யோக வலைத்தளம் இங்கே சொடுக்க

* செந்தில் *



Dec 20, 2009

கிட்டத்தட்ட பதினாலு வருட நேர்த்தியான கருத்துருவாக்கம்!

ஒவ்வொரு பிரேமிலும் கற்பனைக்கெட்டாத உலகத்திற்கே நம்மை இழுத்துச் செல்லும் மாயாஜால உலகம்!

மனதை வசியவைத்த திரைக்கதை அமைப்பு. கண்களை கொள்ளைகொள்ளும் கிராபிக்ஸ் சித்து விளையாட்டு.

ஏறக்குறைய ஐயாயிரம் கோடிகளை அசுரத்தனமாக விழுங்கிய தொழில்நுட்பம்!

அதுதான் அவதார்!

டெர்மினேட்டர், ஏபிஸ், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற வரலாறு படைத்த படங்களை கொடுத்து விட்டு டாக்குமெண்டரி படங்களின் பக்கம் ஜேம்ஸ் கேமரூன் கவனத்தை செலுத்தியிருந்தாலும், இவரின் மனதில் பதினைந்து வருடங்களாக கருவாகி வந்த அவதார் எனும் திரைக்கதை, கேமரூனை மீண்டும் திரைப்படத் துறைக்கே கொண்டு வந்துள்ளது.

இனி கதை.
விண்வெளியில் தொலைதூர கிரகநிலவான பாண்டோரா-வில் இருக்கும் அரியவகை உலோகத்தை அடைவதற்கு நம் பூமியில் இருக்கும் ஒரு நிறுவனம் முயற்சிக்கிறது. இதற்கு இடைஞ்சலாக இருப்பது அங்கே வசித்து வரும் நீலமான உடல் படைத்த, மனிதனை விட தொன்மையான, ஒன்பது அடி உயிரினம் நாவி. மனிதர்களை எதிரிகளாகப் பாவிக்கும் நாவி இனத்தை மசிய வைப்பதற்கு நம் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தந்திரம் உபயோகிக்கிறார்கள். அதுதான் நாவி இனத்தின் டி.என்.,ஏ வையும் நம் டி.என்.,ஏ வையும் இணைத்து நாவி உடலமைப்பு போன்ற ஒரு கலவையான உயிரை அங்கே உருவாக்குவது - அதன் பெயர்தான் அவதார்.

அவதார் மூலம் நாவி உடலமைப்பில் மனித ஆத்மாவை நம்மூர் கூடு விட்டு கூடு பாயும் விதமாக உயிர் கொடுத்து நாவி இனத்தினூடே பழகி அவர்களது நம்பிக்கையை பெற முயற்சிக்கிறார்கள். (இயக்குனை ஒரு பேட்டியில் இதனை இந்திய இதிகாசத்திலிருந்து தழுவி எடுத்ததாக தெரிவித்துள்ளார்!). இம்முயற்சியிலிருந்து தனது இரட்டைச்சகோதரன் இறந்ததை ஈடு கட்டும் விதமாக வரும் உடல் ஊனமுற்ற ஒரு ராணுவ வீரன் ஜேக் ஒரு அவதாரமாக உருவெடுக்கிறார். அவருக்கு இட்ட பணி, நாவியினத்தின் நம்பிக்கையைப் பெற்றபின் அவர்களின் பூர்வீக இடத்தை விட்டு வேறு பக்கம் நகரச் செய்வது. பிறகு அந்த இடத்தின் அடியிலிருக்கும் அரிய உலோகத்தை பெறுவது.

ஜேக்கின் அவதார் அங்கிருக்கும் நேத்ரி எனும் நாவி இளவரசியை சந்தர்ப்பவசமாக சந்தித்து அவள் மூலமாக அவ்வினத்தில் கலக்கிறது. அவதாருக்கும் நேத்ரிக்கும் காதல் மலர்கிறது. அவதார் நாவிக்களை அவ்விடத்திலிருந்து அப்புறபடுத்துவது தோல்வியில் முடிய, மனிதர்கள் போரின் மூலமாக நாவிக்களை அகற்ற முயற்ச்சிக்கிறார்கள். அதில் சற்றும் சம்மதம் இல்லாத அவதார் மனிதர்களை எதிர்த்து நாவிக்களிக்கே உதவி செய்கிறார். வெல்வது யார் ? மனிதர்களா ? அல்லது மனிதனிலிருந்து அவதாரத்தின் துணையுடன் நாவிக்களா ? மீதி வெண்திரையில்.

கேமரூனின் அசாத்திய உழைப்பு ஒவ்வொரு நொடியிலும் மிகப்பிரமாண்டமாக தெரிகிறது. படம் பார்க்கும் முன்னரே ஐமாக்ஸ் இல் தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து சென்றது மிக நல்லதாகப் போனது. அவதாரின் பிரமாண்டத்தை அதன் உள்ளே நாமும் ஒரு அங்கமாகப் பார்ப்பது ஒரு சிறப்பு அனுபவம். கேமரூனின் தனித்துவமே லாஜிக்கை அழகாக மீறுவது. நம்மூர் காதல் கதைபோல பார்த்த உடன் இந்தப்படத்திலும் பற்றிக்கொண்டாலும், படம் பார்ப்பவர்கள் மனமும் அதனுடன் இயைந்து விடுகிறது. அது போல மனிதர்கள் நாவிக்களை எதிர்க்கும் கட்டத்திலும் நம் மனம் மனிதர்கள் வெல்லவேண்டும் என்று நினைப்பதை விட நாவிக்கள் வெல்வதையே விரும்புவதிலே தெரிந்து விடுகிறது கேமரூனின் திரைக்கதை நம் மனதை வென்று விட்டதை.

பலவருடங்களுக்கு முன்னரே வரவேண்டிய திரைக்கதை, தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாய் இப்போதுதான் சாத்தியமாகி உள்ளது. கிட்டத்தட்ட பதினாலு வருட நேர்த்தியான கருத்துருவாக்கம்!
ஏறக்குறைய ஐயாயிரம் கோடிகளை அசுரத்தனமாக விழுங்கிய தொழில்நுட்பம்!
ஒவ்வொரு பிரேமிலும் கற்பனைக்கெட்டாத உலகத்திற்கே நம்மை இழுத்துச் செல்லும் மாயாஜால உலகம்!
மனதை வசியவைத்த திரைக்கதை அமைப்பு. கண்களை கொள்ளைகொள்ளும் கிராபிக்ஸ் சித்து விளையாட்டு.

அதுதான் அவதார்!

தேர்மினடர், ஏபிஸ், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற வரலாறு படைத்த படங்களை கொடுத்து விட்டு டாக்குமெண்டரி படங்களின் பக்கம் ஜேம்ஸ் கேமரூன் கவனத்தை செலுத்தியிருந்தாலும், இவரின் மனதில் பதினைந்து வருடங்களாக கருவாகி வந்த அவதார் எனும் திரைக்கதை, கேமரூனை மீண்டும் திரைப்படத் துறைக்கே கொண்டு வந்துள்ளது.

இனி கதை.
விண்வெளியில் தொலைதூர கிரகமான பாண்டோரா-வில் இருக்கும் அரியவகை உலோகத்தை அடைவதற்கு நம் பூமியில் இருக்கும் ஒரு நிறுவனம் முயற்சிக்கிறது. இதற்கு இடைஞ்சலாக இருப்பது அங்கே வசித்து வரும் நீலமான உடல் படைத்த, மனிதனை விட தொன்மையான ஒன்பது அடி உயர உயிரினம் நாவி. மனிதர்களை எதிரிகளாகப் பாவிக்கும் நாவி இனத்தை மசிய வைப்பதற்கு நம் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தந்திரம் உபயோகிக்கிறார்கள். அதுதான் நாவி இனத்தின் டி.என்.,ஏ வையும் நம் டி.என்.,ஏ வையும் இணைத்து நாவி உடலமைப்பு போன்ற ஒரு கலவையான உயிரை அங்கே உருவாக்குவது - அதன் பெயர் அவதார். அவதார் மூலம் நாவி உடலமைப்பில் மனித ஆத்மாவை நம்மூர் கூடு விட்டு கூடு பாயும் விதமாக உயிர் கொடுத்து நாவி இனத்தினூடே பழகி அவர்களது நம்பிக்கையை பெற முயற்சிக்கிறார்கள். (இயக்குனை ஒரு பேட்டியில் இதனை இந்திய இதிகாசத்திலிருந்து தழுவி எடுத்ததாக தெரிவித்துள்ளார்!).

இம்முயற்சியிலிருந்து தனது இரட்டைச்சகோதரன் இறந்ததை ஈடு கட்டும் விதமாக வரும் உடல் ஊனமுற்ற ஒரு ராணுவ வீரன் ஜேக் ஒரு அவதாரமாக உருவெடுக்கிறார். அவருக்கு இட்ட பணி, நாவியினத்தின் நம்பிக்கையைப் பெற்றபின் அவர்களின் பூர்வீக இடத்தை விட்டு வேறு பக்கம் நகரச் செய்வது. பிறகு அந்த இடத்தின் அடியிலிருக்கும் அரிய உலோகத்தை பெறுவது.

ஜேக்கின் அவதார் அங்கிருக்கும் நேத்ரி எனும் நாவி இளவரசியை சந்தர்ப்பவசமாக சந்தித்து அவள் மூலமாக அவ்வினத்தில் கலக்கிறார். அவதாருக்கும் நேத்ரிக்கும் காதல் மலர்கிறது. அவதார் நாவிக்களை அவ்விடத்திலிருந்து அப்புறபடுத்துவது தோல்வியில் முடிய, மனிதர்கள் போரின் மூலமாக நாவிக்களை அகற்ற முயற்ச்சிக்கிறார்கள். அதில் சற்றும் சம்மதம் இல்லாத அவதார் மனிதர்களை எதிர்த்து நாவிக்களிக்கே உதவி செய்கிறார். வெல்வது யார் ? மனிதர்களா ? அல்லது மனிதனிலிருந்து அவதாரத்தின் துணையுடன் நாவிக்களா ? மீதி வெண்திரையில்.

கேமரூனின் அசாத்திய உழைப்பு ஒவ்வொரு நொடியிலும் மிகப்பிரமாண்டமாக தெரிகிறது. படம் பார்க்கும் முன்னரே ஐமாக்ஸ் இல் தான் பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்து சென்றது மிக நல்லதாகப் போனது. அவதாரின் பிரமாண்டத்தை அதன் உள்ளே நாமும் ஒரு அங்கமாகப் பார்ப்பது ஒரு சிறப்பு அனுபவம். கேமரூனின் தனித்துவமே லாஜிக்கை அழகாக மீறுவது. நம்மூர் காதல் கதைபோல பார்த்த உடன் இந்தப்படத்திலும் பற்றிக்கொண்டாலும், படம் பார்ப்பவர்கள் மனமும் அதனுடன் இயைந்து விடுகிறது. அது போல மனிதர்கள் நாவிக்களை எதிர்க்கும் கட்டத்திலும் நம் மனம் மனிதர்கள் வெல்லவேண்டும் என்று நினைப்பதை விட நாவிக்கள் வெல்வதையே விரும்புவதிலே தெரிந்து விடுகிறது கேமரூனின் திரைக்கதை நம் மனதை வென்று விட்டதை.

கேமரூன் பலவருட இடைவேளைக்குப் பின்னே இதை வெளிவிட்டாலும் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மீண்டும் நிரூபித்துள்ளார்.மேலும், பலவருடங்களுக்கு முன்னரே வரவேண்டிய திரைக்கதை, தொழில்நுட்பப் பற்றாக்குறை காரணமாய் இப்போதுதான் சாத்தியமாகி உள்ளது. காதலையும், மனித உணர்ச்சிகளையும் தொழில்நுட்பத்தின் தாக்கங்களையும் அழகாக ரசவாதக்கலவையாக ஒன்றுடன் ஒன்று இணைப்பதில் அவருக்கு நிகர் அவரே. அவருடைய முந்தைய பட டைட்டானிக்கிலும் காதலை அருமையாக செதுக்கி நம்மை உருக வைத்திருப்பார். இந்தப்படத்தில் ஒரு சிரமம், இதில் வருவது நாவி எனும் வேற்று கிரக உயிரினம். அதை ஒரு மனித ஆத்மா காதலிப்பது போல பார்வையாளர்களை வசியப்பத்துவது கொஞ்சம் சிக்கலான வேலை. ஆனால் அதில் வெற்றி பெற்றுள்ளார்.

கேமரூன் தனிக்காட்டு இராஜாவானாலும் மற்றவர்கள் துணை இல்லாமல் பிரமாண்டமான படத்தை அளிக்க முடியாதல்லவா. நாமும் அவதாரில் மற்ற முக்கியமான ஆட்களின் பங்களிப்பை பார்க்கலாம்.
இசை ஜேம்ஸ் ஹோர்னர் -- அபோகலிப்டா மற்றும் அபோல்லா போண்டா படங்களுக்கு இசையமைத்தவர்தான். இதிலும் அருமையாக அசத்தியுள்ளார்.

எடிட்டிங்கிலும் ஸ்டீவென் மற்றும் ஜானுடன் இணைந்து கேமரூனின் கைவண்ணம் நேர்த்தியாகத் தெரிகிறது.

ஜோராச்சிக் பார்க் மற்றும் லார்ட் ஆப தி ரிங் படங்களில் பணி புரிந்த ஜோ லேட்டேரி, விசுவல் எபிபிச்ட்-ல் இதுலும் ஒரு கலக்கி கலக்கி உள்ளார். மூன்று முறை ஏற்கனவே ஆஸ்கர் வென்ற ஒரு நிபுணர்.







Sep 27, 2009

நீ சாஞ்சு போன சேதி

அப்பாவி சனமே நீங்க அழிஞ்சி போன சேதி
என்நெஞ் சத்துல அரஞ்சதென்ன
உடம்பிலிருந்து உசுர
கொஞ்சங்கொஞ்சமா உறிஞ்சி விட்டதென்ன

ஆறாத புண்ணுல
ஆயிரம்தேளுக - அங்குலஅங் குலமா
கொத்திவிட்டதென்ன
எண்ணக்கொப் பறையில - எரிஞ்சுஎரியாம
எங்கதேகம் கொதிச்சதென்ன ?
கண்ணுக்குள்ள - இரும்புக்குழம்ப
காச்சிஊத்தி விட்டதென்ன

நெஞ்சுக்குள்ள அமிலத்த
நஞ்சுநஞ்சா ஊத்திவிட்டதென்ன
நாளும்பொழுதுமா எங்கண்ணுல
இரத்தம்க சிஞ்சதென்ன
இராத்திரிப கலென்ன... ரணகளமானதென்ன ...

வீச்சருவா வீசி வீசி
ஏம்மூச்ச, பேச்ச - முழுசா
பறிச்சதென்ன
மொட்டக்கத்தி வச்சு வச்சு
பாதியும் மீதியுமா - எம்மனச
அறுத்ததென்ன

மிஞ்சிக்கிடக்கிற கொஞ்ச சனமே
சாஞ்சிக்கிடக்கிற உன்பொழப்பப் பாத்து
கொஞ்சகொஞ்சமா - மீதி உசுரு
புரையோடிப் போனதென்ன ?

அப்பாவித்தமிழ்சனங்க
ஆவி அடங்கினதென்ன - அதக்கண்டு
எந்நெஞ்சுக்குலை
நித்தம் சுருங்கினதென்ன

சிங்களப்பேய்களெல்லாம் - எங்க ரத்தம்
குடிச்சுக்குடிச்சு
கூத்தாடிக்கும்மி யடிச்சதென்ன
ஒப்பாரிவக்க வழியில்லாம
நாதியத்துப் போனதென்ன?

வீடுவிட்டு நாடுவிட்டு
ஊருவிட்டு உறவுவிட்டு
பந்தம்விட்டு சொந்தம்விட்டு
ஓடிஒளிஞ்சு தொலஞ்ச இந்தக்குலத்த
கடைசி வரை - தலைவிதி
வன்மம் வச்சு வன்மம் வச்சு
சென்மசென்மமா விரட்டுவதென்ன

சரித்திரமே நீ - என்னைக்கும்
தரித்திரமா மாறியதென்ன
எங்க பொழப்பு ஏழு சென்மமும்
நாறிப் போனதென்ன




பிரளயம் ஒய்ந்திடுமோ ?

இத்தமிழ்த் தளிர்கள்
விதையென
முளைத்தெழா - விறகென
வீதிகளில் வெற்றுயிர்
கருகிச்சரிய !

முழு இனமே
மந்தை மந்தைகளாய்- எட்டுத்திக்கிலும்
சுட்டுத் தெறிக்க
வாசல் வாசலாய் - சனங்கள்
ஈசல் ஈசலாய் சிதறிக்கிடக்க

என்நெஞ்சுத்தசை
அணுஅணுவாய் பிளந்து
கிழிந்தழிந்ததே
உள்ளினும், வெளியினும் ஊனுயிர் தொலைந்ததே !!

இதுகாறும் இச்சமூகம் இவ்விடத்தே
பூத்துக்குலுங்கிய இத்தேசமே
நீ பிணங்களின் விளைநிலமா ?
கொள்ளிவாய்ப் பேய்களினினும் - கொடூர
மனம்கொள் சிங்களர்களின்
கொலைக்களமா?

சூத்திரர்களின் சூழ்ச்சிக்கரங்களில்
சுதந்திரத்தை சுட்டெரிக்கச்
செய்திட்ட சுடுகாடா ?
விதியெல்லாம் விளையாடி - ஒளிந்தோடி
வீழ்ச்சியடைந்த வெருங்காடா?

ஹிட்லரும் முசோலினியும்
சேர்ந்து உருவான ராசபக்சேயின்
சதிராட்டம் தொலைந்தொழியுமோ?
இப்பிணம்தின்னிப் பேய்களின்
குருதித்தாகம் எம் வேகம் தடுத்திடுமோ?

நாட்டாமை நாடுகள் அனைத்தும்
நல்வழி உணர்ந்திடுமோ?
சூதுகொண்ட ஊழிக்காலம்
உருத்தெரியாமல் அழிந்திடுமோ?

நாளொரு பொழுதும் நரகமாகிப்போன
வன்கொடுமையும் கழிந்திடுமோ?
இருள்சூழ் - எம் உலகில்
ஒளிச்சூரியன் ஓரளவேனும்
உதித்திடுமோ?

ஊனுயிர் உருக்குலைத்த இப்பிரளயம்
எப்பிறவியில் ஓய்ந்திடுமோ ?
உண்மை உயிர்த்தெழுமா?
இக்குலம் தழைத்திடுமோ?

Feb 6, 2009

pongal 2009

சிந்து சமவெளி நாகரீகத்தில் ஜல்லிக்கட்ட

ஆனால் சிந்து சமவெளி நாகரீகத்திலேயே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்துள்ளது. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்முத்திரையில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

தமிழர் இலக்கியத்தில் ‘கொல்லேறு தழுவல
்’என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது.

இன்றளவும் இப்படிப்பட்ட முறையில்தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கொல்லேறு தழுவல் நிகழ்த்தப்படுகிறது. ஜல்லிக்கட்டில் இறக்கப்படும் காளைகளை அதற்கென்றே வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் காளையர்க்களுக்கும், அவர்களை தூக்கியெறிய முற்படும் காளைக்கும் இடையிலான சம வாய்ப்புடைய வீர சோதனைதான். 



 

இந்த மண்ணுல நம்ம மனுசனோட வளர்ச்சியை நினைச்சு பார்த்தீங்கன்னா தெரியும் அவன் விலங்கிலிருந்து மிகப்பிரம்மாண்டமாக வளர்ந்து இன்னைக்கு உலகத்தில் அங்கிங்கெனாதபடி ஈரேழு திசைகளையும் தன் கட்டுக்குள் வசப்படுத்தியிருகிறான்னு. அதற்கான மூலகாரணமே கற்காலத்து மனிதன் ஆற்றுவெளி சமுதாயத்தை உருவாக்கியதிலிருந்து வந்த வாழ்க்கைமுறைதான். ஆற்றுவெளியின் அவன் ஆரம்பிச்ச உழவுத்தொழில் நாகரீக வளர்ச்சியின் வித்து, அது விருட்சமாகி, பல்கிப்பெருகி விண்ணையே வசப்படுத்தும் அளவிற்கு வளர்ந்திருக்கு.

 

நம்ம பண்டைய தமிழர்கள் இந்த உழவுத்தொழிலின் முக்கியத்துவம் தெரிஞ்சு வந்ததனாலேயே, அதன் ஆதாரமான இயற்கையை வணங்கி அதோடு ஒன்றினைந்து வாழ்ந்திருக்காங்கன்னு தெரியுது. அறிவியலே வளர்ச்சியடையா அக்காலத்தில் தங்களோட அறிவின் வளர்ச்சியினாலே வானிலை மற்றும் பருவகால மாற்றங்களை தெளிவாக தெரிஞ்சு காலங்களை இளவேனில், முதுவேனில், கார்காலம், கூதிர், முன்பனி, பின்பனி எனப்பகுத்து அதுப்படி உழவுத்தொழிலை செம்மைப்படுத்தி வந்திருக்காங்க. அதுல இளவேனிற் காலம் அவங்களுக்கு முக்கியமான காலம். ஏன்னு பார்த்தீங்கன்னா அப்பதான் அந்த உழவின் பயனை தம் வாழ்வின் வசந்தங்களை மகிழ்ச்சியாக தொடங்குகிற காலம் – அதனால தான் இளவேனிற் காலத்தை அவங்க புத்தாண்டின் தொடக்கமாக தேர்ந்தெடுத்திருக்காங்கன்னு தெரியுது.

தமக்கு உணவுதந்த அந்த ஆதார சக்தியான ஆதவனை வழிபட்டு, இயற்கைக்கு உணவை பொங்கி வரும் பொங்கலாக படையலிட்டு ஒரு விழாவாக அதை நம்ம தமிழ் சமுதாயத்தின் அடையாளமா கொண்டாட ஆரம்பிச்சாங்க. இன்னைக்கு நம்ம தமிழர்கள் உலகின் எந்தக்கோடியிலிருந்தாலும் அந்த பொங்கல் திருநாளை கொண்டாடுறது நம்ம பண்பாட்டின் ஒரு அடையாளம்.

 

அது சரி, பூலோகத்தின் இன்னொரு கோடியில், ஆசுலே மற்றும் கூப்பர் ஆத்துவெளியில, அன்றைய தமிழர்களின் இன்றைய சந்த்திகளான வாழ்ந்து கொண்டிருக்கும் சார்லச்டன் தமிழ்ச் சமுதாயம் தைப்பொங்கல் திருநாளை அன்னிய மண்ணில் எப்படி கொண்டாடி மகிழ்கிறாங்கன்னு வாங்க போயி பார்க்கலாமா ?

 

 

 

பொங்கல் விழா அன்னைக்கு வர்ற பார்வையாளர்களுக்கு அந்த ஒரு நாள்-திருநாள், ஆனா அன்றைய விழாக்கலைஞர்களுக்கு அன்னைக்கு மட்டுமில்ல கடந்த பல வாரங்களாகவே கொண்டாட்டமான நாட்கள். எப்பிடின்னு கேட்டீங்கன்னா, விழாவிற்காக ஆறேழு வாரங்களுக்கு முன்னாலே பயிற்சி மற்றும் ஒத்திகைக்காக கூடி, மத்தவங்க ஒத்திகையில பண்ற தப்ப பார்த்து சிரிச்சு, தாமே பண்ற தப்பை சமாளிச்சு, எல்லாரும் சமைச்சு கொண்டு வர்ற அத்தனை சாப்பாட்டு வகைகளையும் ஒரு கட்டு கட்டிட்டு, சுகமா கொஞ்ச நேரம் அரட்டை அடிச்சு, மத்தவங்கள கேலி பண்ணி், அதகளம் பண்ணி- மொத்தத்தில பல வாரக்கடைசி நாட்கள் கலாட்டா கச்சேரியாத்தான் இருந்துச்சு.

 

 சங்கத்தலைவர் சுந்தர்தான் அயராத வேலைப்பளுவிற்கு மத்தியில் பல நாட்களாக அத்தனை ஆட்களையும் இழுத்துப் பிடிச்சு பல கலை நிகழ்ச்சிகள் உருவாகக் காரணமா இருந்தார்.

 

இந்த தடவை டேனியல் தீவுப் பள்ளி அரங்கையே தேர்ந்தெடுத்தி்ருந்தோம், அருமையான இடம்…மேடை அமைப்பு, பார்வையாளர்களுக்கான் வசதி, ஒலி, ஒளி  அமைப்பு, உணவரங்க வசதிகள் அத்தனைகளும் அருமையா அமைந்த இடம்ன்னு நீங்க பார்த்தாலே தெரியும். வாங்க உள்ளே போகலாம்.

 

ஆகா….இதென்ன தப்பித்தவறி தமிழ் நாட்டுக்குள்ளேயே வந்திட்டோமா ?....எங்க பார்த்தாலும் கண்ணைப்பறிக்கிற மாதிரி பட்டுப்புடவை, வெள்ளையும் சொள்ளையுமா வேட்டி சட்டையில நம்ம மக்கள் – ஒரு கலக்கு கலக்கிட்டாங்க போங்க. விழா ஏற்பாடுகளை அரக்க பரக்க ஏற்பாடு பண்ற மக்கள் சில பேர், ஒத்திகைகளை மனசில பார்த்துகிட்டே வெளியே பரபரப்பு தெரியாம நண்பர்கள் கிட்ட பேசிகிட்டு இருக்கிற சில பேர், சுத்தி சுத்தி ஓடியாடி உற்சாகமா அரங்கத்தையே அதிர வைக்கிற சுட்டிப்பசங்க சில பேர், பல நாட்கள் கழிச்சு பார்க்கிற சில நண்பர்களோட அரட்டை அடிக்கிற மக்கள் சில பேர், உள்ள வர்ற நம்ம மக்களை வரவேற்கிற மாதிரி…அவங்க கொண்டு வர்ற உணவு பதார்த்தங்கள அப்பிடியே மோப்பம் பார்க்கிற இளவட்டங்கள் சில பேர், - இப்படி பல வித நண்பர்களை பார்க்கிறதே கண்கொள்ளா காட்சியா இருக்கு, இல்லையா.

 

சிறுமி இனியாவின் நடனம் பார்வையாளர்களுக்கு அருமையான விருந்து – பார்த்துகிட்டிருந்த சின்னப்பசங்களும் ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டாங்க.

 

அடுத்தது – ஏலோலோ நாட்டிய நாடகம். மீனவர்களின் வாழ்க்கையில் படும் அவதிகளை, அவ்வாழ்வின் அல்லல்களை அப்பிடியே படம் பிடிச்சுகாட்டுற மாதிரி நடிச்சிருந்தாங்க. சுந்தர், யுவராசு, கொளசிக் மற்றும் செந்தில் மீனவர்களின் ஒவ்வொரு காலகட்டங்களை நடிச்சு நடனமாடி காட்டிகிட்டிருக்காங்க. படகோட்டி துடுப்பு போடுகிற மீனவ மக்களா நடிக்கிறது சந்தோசு, உதய், விக்னேசு, சிவா. மீனவர்களின் கடின வாழ்க்கையை நாடக நடினமாக பார்க்கிற பார்வையாளர்களின் மனச கலங்கடிச்சிட்டாங்க.

இப்ப நீங்க பாக்கிறது, கீதா, சானகி, லட்சுமி, சந்தியா, வானதி, மற்றும் வினு குழுவின் கும்மி நடனம். பட்டுப்புடவையில பகட்டா வந்திருந்து ஆடிறாங்க பாருங்க ஆட்டம் -  நம்ம ஊரு கிராமப்பொண்ணுகளே வந்து ஆடி பட்டைய கிளப்பின மாதிரி இருந்த்து. ஒரு தப்பில்ல, தாளம் பிசகல்ல, அத்தனை நேர்த்தி, அத்தனை அசத்தல்.

 

ஆகா, இது யாரு சரோஜா தேவியா அது, அட இந்தப்பக்கம் யாரு எம்.ஜி.ஆரு – என்னா பண்றாங்க இங்க வந்து – “அன்று வந்ததும் அதே நிலா – இன்று வந்த்தும் அதே நிலா”.  பாட்டுக்கு ஆடிறாங்க. உத்துப்பார்த்தாதான் தெரியுது - இது நம்ம லட்சுமி-கவுசிக்தான்னு. அவங்க போனபிறகு குங்குமப்பூவா கொஞ்சுப்புறாவா கொஞ்சி கொஞ்சி செந்தில் – வினு ஜோடி ஒரு கலக்கல் நடனம், அதுக்குப்பிறகு வந்தது அமிர்தா அவங்கப்பா சந்தோசோட வந்து அவரோட காதல்கதையை கேட்டு தெரிஞ்சுகிட்டாங்க. பிறகு வர்றது வா வாத்தியாரே ஊட்டாண்டன்னு சென்னைத்தமிழ் வச்சு மனோரமா – சோ ஆடுன ஆட்டம் கலகலப்பா இருக்கு. ஒரு பெண்ணைப்பார்த்து நிலவை பார்த்தேன் – செந்தில் – வினு ஜோடி இந்தப்பாட்டுக்கு ஆட ஒரே அசத்தல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். மொத்தத்தில இந்த அக்கால நடன நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் கைத்தட்டல், தூதுகலம், உற்சாகம், பார்க்கிறவங்க எல்லாம் அந்தக்காலத்துக்கே போயிட்டாங்க.

 

இப்போ வந்திருக்கிறது யுவராசு, செந்தில், குமரன், சந்தோசு நண்பர்கள் சமய நல்லிணக்கத்தை ஒரு இசை நாடகமா அருமையா நடத்தியிருக்காங்க. மனுசங்க மதங்களால பிரிஞ்சு அடிச்சுகிட்டு மனிதத்தையே தன் புனிதத்தையே தொலைச்சுடறான் அப்பிடிங்கிறத அற்புதமாக நடிச்சு காட்டுனாங்க. மனம் நிறைய வைத்த ஒரு நெகிழ்வான நிகழ்வா இருந்தது. 


Dec 25, 2008

pongal 2009 skit

பொல்லாதவனும் நொந்தகுமாரனும்


கதாபாத்திரங்கள் : பிரம்மா, நாரதர் மற்றும் தேவேந்திரன்


பிரம்மா லோகத்தில் 



 
பிரம்மர் -- "வா தேவேந்திரா.வாருங்கள் நாரதரே.இருவருக்கும் வணக்கம்.வந்து இங்கே அமருங்கள்."


பிரம்மர் - நாரதரே என்ன ஒரே களைப்பு உம்ம முகத்தில் ....

நாரதர் - எல்லாம் நேரம் தான்..என்ன பண்ணுவது ...நான் விஷ்ணுவின் அன்புக்கு பாதிரப்பட்ட என்னையே இங்கே தேவலோகத்தின் அத்தனை          அமைச்சர்கள் என்னை உண்டு இல்லை என்று பண்ணி விடுகிறார்கள்.

ஒரு வேலை உருப்படியாக முடிப்பதர்ற்குள் என் விழி பிதுங்கி போய் விடுகிரதைய்யயா...

தேவேந்திரன் - என்ன நாரதர் உம்மாலே நமது தேவலோகத்தில் ஒரு வேலை உருப்படியாக முடிக்க முடிவதில்லையா...என்ன கொடுமை இது...

நாரதர் - இதைத்தான் சந்திரமுகி என்னும் படத்தில் ரஜினி உபயோகப்படுத்தி இருக்கிறாரே ....நீர் அதையே இங்கே எடுத்து விடுகிறீர்...

நாரதர் - அந்தக்காலத்திலே நான் விஷ்ணுவை பார்க்க வேண்டும் என்று நினைத்த அடுத்த கணத்திலே எனக்கு பாற்கடல் ஆபிஸ்-ல் அனுமதி கிடைக்கும்...இப்போது என்னவென்றால் இன்று விஷ்ணு பிஸி என்று எனக்கே கதை விடுகிறார்கள். பூலோகத்திற்கு செல்ல ஒரு ரதம் வேண்டும் என்று கேட்டு ஒரு வாரமாகியும் தேவலோக மெக்கானிக் இன்னும் கொண்டு வந்து சேர்க்கவில்லை...

தேவேந்திரன் - அட நீர் வேற...இங்கும் அதே கதைதான் நடக்கிறது....தேவேலோகத்தில் சாம பானம் சப்ளை காலியாகி பல நாட்கள் ஆகி விட்டன....கேட்டால் எல்லாம் தமிழ் நாட்டு டாச்மார்க்கிற்கே போதவில்லை என்று
சோமபான சோம்பேறி அதிகாரி என்னிடமே நக்கலடிக்கிறான். இதை எங்கே போய் செப்புவது...

நாரதர் - இங்கேயே இந்தக் கதியென்றால் பூலோகத்தில் என்னாவதோ ....மனிதர்கள் இந்த அதிகார வர்கங்களிடம் அல்லல் படுவது இங்கு நடப்பதை விட்ட கொடுமையாக இருக்கும்...

பிரம்மன் - நாரதா, தேவேந்திரா...உங்களுடைய கவலை எமக்கு புரிகிறது ... எம்மை போன்றவர்களுக்கே கைலாயத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் சிவனைப பார்க்க முடிவதில்லை ....எங்கே பார்த்தாலும் சிவனடியார்களின் ஆதிக்கம்...

நாரதர் - உமக்கே இந்த கதியா....நாராயணா நாராயணா ....இதற்கு ஒரு முடிவு கட்ட முடியாதா உம்மால்

பிரம்மா - நம்மைபோன்ற தேவர்களும் ....காலச்சக்கரத்தின் சுழற்சிக்கு அப்பாற்பட்டு எதுவும் செய்ய முடியாது...வேண்டுமென்றால் .....ஒரு சித்து விளையாட்டு நடத்திப் பார்க்கலாம்..

நாரதர் - என்ன விளையாட்டு

பிரம்மா - இப்பூலோகத்தில் இதே போன்று வெறுத்துப் போயிர்க்கும் சில மனிதர்களை எதிர்காலத்திற்கு கொண்டு சென்று இப்போதைய நிலைமையை அப்பிடியே தலைகீழாக மாற்றினால் என்ன

நாரதர் - இது நடக்கக் கூடிய விஷயமா ...அவர்களே ...விரக்தியுன் உச்ச்யில் ...நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கிறார்கள் ...அப்பிடியே தூங்கினாலும் கனவு கூட வந்து தொலைப்பதில்லை...


பிரம்மா - அதே தான் ....அவர்களை அப்பிடியே எதிர்காலத்திற்கு கொண்டு செல்லவில்லை....அவர்களின் கனவில் அவர்களை எதிர்காலத்திற்குள் தள்ளி விடுகிறோம்...அப்புறம் பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..

நாரதர் - நானே ஒரு மிகப்பெரிய குழப்பவாதி -- நீர் எம்மை விட ஒரு பெரிய குழப்பவாதியப்பா ...எதோ ஒன்று இன்று எம்முடைய வேலையை நீரே செய்கிறீர் ,,,,நடத்தும் உம்முடைய நாடகத்தை...


பூலோகத்தில்

கதாபாத்திரங்கள் : நொந்தகுமாரன், லொள்ளு பாண்டி, வெட்டி விஜயன், ஜங்கு ஜனா.

வருடத்தின் அத்தனை நாட்களைப் போலவே இந்த நாளிலும், ஒரு நாளின் அத்தனை நிமிடங்களைப் போல இந்த நிமிடத்திலும்...கொஞ்ச நஞ்சம் மிச்சம் மீதியில்லாதவாறு எப்போதும் வேலை வெட்டியில்லாத நொந்த குமாரன் அன்றைய நாளின் அயர்ச்சியின் அத்தனை அழுத்தங்களை தாங்கமுடியாமல் வீடு திரும்பியிருந்தான்... வழக்கம் போல இன்றைக்கும் ஏதாவது சாதித்து வந்தான் என்றால் அது கொஞ்சமும் கலப்படமில்லாத தோல்விதான். நொந்தகுமாரன் - புலம்பியவாறே...
என்ன கொடுமை சரவணன் இது...சே எங்க போனாலும் நம்மள கடிக்கிறானுங்க...ஊருல குப்பை கொட்டுறவன் கூட நம்மள மதிக்க மாட்றான்...ஒரு நாயை விட கேவலமா போயிட்டோமா நம்ம... இந்த ஆர் டி ஒ என்ன பிரம்மலோகத்திலிருந்து நேரடியா குதிச்சு வந்தவனா என்ன...நம்மள ஒரு மனுசனா வே கண்டுக்கற மாட்டிங்கிரானே.... இவனுங்கள எல்லாம் நிக்க வச்சு சுடனும் .....இந்த நிலைமை என்னிக்கு மாறுமோ.... கடவுளே...இதைக்கேட்க நாதியில்லையா.... வெறுப்புடன் நொந்தகுமாரன் தூங்குகிறான்... கனவில்.....


நிம்மதியாக உறங்கிகொண்டிருக்கிறான் நொந்தகுமாரன் .... காலிங்க்பெல் சத்தம் அவனை எழுப்புகிறது டிங் டிங் யாரப்பா இது இந்நேரத்தில... கதவு திறந்து... என்ன வேணுங்க... தாசில்தார் - அய்யா நான் தானுங்க ...என்ன தெரியல்லையா... நொ. கு. - யோவ் ..ஏன்யா காலங்காத்தால வந்து உசுர வாங்குறீங்க...யாருயா நீ.. தாசில்தார் - அய்யா...ரெண்டு வாரமா அலையா அலைஞ்சு உங்கள எப்பிடியாவது பாதுப்போடலாமுன்னு காதுக்கிட்டிருகேம்ம்ன்யா...போன வாரம் வந்து பாத்தப்ப நீங்க தான்யா இந்தவாரம் வந்து மறுபடியும் பாக்க சொன்னீங்க... நொ கு - இந்த வாரம் வேற வேலை வந்திருச்சு...அடுத்த வாரம் வந்து பாரு... தாசில்தார் - அய்யா...கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கொஞ்சம் பாருங்கையா... நொ கு - யோவ் உங்களோட ஒரே ரோதனையா போச்சு...உங்கள மாதிரி கவேர்மன்ட் ஆளுக ...வரிசையா வந்து அது பண்ணியாச்சு ... இது பண்ணியாச்சு...அதுல சாட்சி கையெழுத்து போடுங்க...இதுல போடுங்கன்னு ஒரே தொல்லை... எல்லாம் நல்ல ஓடிகிட்டு இருந்தாலும் ...ஏதாவது பிரச்சனைன்னா சொல்லுங்க..உடனே முடிச்சு குடுதுடரோம்னு ஒரே வம்பு...இன்னிக்கு உனக்கு என்னைய்யா...

தாசில்தார் - ஒன்னுமில்லங்கைய்யா...அன்னிக்கு இந்த பாத்திரம் சம்பந்தமா ஒரு பிரச்சனைன்னு கேள்விப்பட்டு...அத முடிச்சி கொடுதிடலாமுன்னு ஒடி வந்தேங்க... நோ கு - யோவ்...அந்த பத்திர விஷயமா.... தாசில்தார் - ஆமாங்கய்யா..ஆமா.. நோ கு - அதான்யா...அந்த கலெக்டர் பாவம் ஒரு மாசமா எதாவது முடிச்சு கொடுக்கிற வேலை இருந்தா சொல்லுங்கன்னு ஒரே நச்சரிப்பு...அவருக்கு கொடுக்கலாமுன்னு இருக்கேன்.. தாசில்தார் - அய்யா..இந்த ஒரு தடவ நம்மள கண்டுகிட்டீங்கன்னா ரெம்ப புண்ணியமா போகுங்க... நோ கு - என்னப்பா உன் தொந்தரவு பெரும் தொந்தரவாப் போச்சு...சரி என்ன பண்ணனும்னு சொல்லு... தாசில்தார் - அய்யா..இந்த பாரம்ல நானே எல்லாத்தையும் தயாரா எழுதி வச்சிருக்கேன்யா....நீங்க ஒரு கையெழுத்து மட்டும் போட்டுடீங்கன்ன...நான் மத்தத பாத்துவந்து வேலைய முடிச்சு கொடுதிடுவேங்கைய்யா நோ கு - கையெழுத்தா...அத அங்க வச்சிட்டு போ....அடுத்த வாரம் வந்து பாரு...உனக்காக இந்தத தடவ கலெக்டர் கிட்ட இந்த வேலைய கொடுக்கல்ல.. தாசில்தார் - நெம்ப தேங்க்ச்குங்கோ...அப்புறம் நான் போயிட்டு வர்றேங்கோ...

அடுத்த தடவ இந்ந்த மாதிரி சொல்லிகிராம வந்து இந்த மாதிரி தொல்லை பண்ணுன அப்புறம் நடக்கிறதே வேற.. தாசில்தார் - மவராசா அந்த மாதிரி ஏதும் பண்ண மாட்டேன், --------------------------------------------- கொடுமை கந்தசாமி - அப்பனே முருகா ,.,,,என்னை மட்டும் ஏம்பா இந்த மாதி சோதிக்கிறே ....நான் என்ன பாவம் பண்ணுனேன். இன்னிக்கு சரியா போய்க்கிட்டிருந்த என்ன அந்த சாவு கிராக்கி டிராபிக் போலீஸ் பிடிச்சு ...௫00 rupaa குடுத்தா தான் விடிவேன்னு ஒரே வம்பு....மருத்துவ செலவுக்கு வச்சிருந்த அத்தனையையும் அழுத்தும் விடல்ல ....இவனுங்களுக்கு ஒரு கேடு வராத ...என்னைக்கு வருமோ நிம்மதியான சுதந்திரம் ... ---------------------------------------------- டிராபிக் கான்ஸ்டபிள் - ஸார் இருக்காங்களா ...உள்ள வரலாங்கள கோசா --...அதான் உள்ளேயே வந்திட்டீங்களே கூச்சப்படாம வீட்டுக்குள்ளரே .... டிராபிக் கான்ஸ்டபிள் - - சொன்னா தப்பா நினச்சிறாதீங்க.. கோசா -- சொல்லியாச்சு ...பேச்சர்றதும் தப்பு தப்பா தான் இருக்கு ....பெறகென்ன இந்த வார்த்தைகளுக்கொன்னும் குறைச்சல் இல்ல... டிராபிக் கான்ஸ்டபிள் --- அது ஒன்னும் இல்ல.. kosaa - ஒன்னும் இல்லையா ..அப்ப நீங்க போயிட்டு இன்னொரு நாளைக்கு வந்து எண்ணப் பாருங்க... டிராபிக் கான்ஸ்டபிள் - - ஸார் நான் வந்த விஷயம் வந்து...போன வாரம் டிராபிக் சிக்னல்ல ரெட் இருக்கும் போதே தப்ப கொஞ்சம் போய்ட்டீங்க ...அதான்... கோசா -- அதுக்கென்ன இப்போ... டிராபிக் கான்ஸ்டபிள் - ஸார் நீங்க சும்மா வந்து ஒரு தடவ சாலை பாதுகாப்பு பத்தி ஒரு வகுப்புக்கு வந்து இர்ந்தீங்கன்ன அது போதுங்க....நாங்க இந்த மாதிரி சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் பத்தி விளக்கமா வகுப்புல உங்களுக்கு புரிய வச்சு ....இது மாதிரி இனிமே நீங்க பண்ணாம இருக்க உங்களுக்கு ஒரு ஹெல்ப் தான்....அதில நல்ல மார்க் எடுத்தா ஒரு கார் வேற இலவசமா தருவோம்.. கோசா- கேக்க நல்லாத்தான் இருக்கு.,.என்னக்கு நேரமில்லையே.... டிராபிக் கான்ஸ்டபிள் - தயவு செஞ்சு வந்திட்டு போனா ரெம்ப நல்லா இருக்கும்... கோசா - ஒரு தடவ சொன்ன நோக்கு புரியாதேன்னோ...பேசாம அது பத்தி எதாவது டிவிடி ஏதாவது இருந்தா அங்க வச்சிட்டு போப்பா.. டிராபிக் கான்ஸ்டபிள் - ஸார்....நீங்க ரெம்ப பிசி ....அதனால் இப்போ உங்கள தொந்தரவு பண்ண விரும்பல... இந்த டிவிடி வேணும்னா வச்சிட்டு போய்டுறேன்....இதக் கண்டிப்பா பாருங்க ஸார் ...மறந்திராதீங்க... கோசா -- ஆளு பாத்தா ரெம்ப டிசென்ட் ஆ இருக்கீங்க....இனிமேல இந்த மாதிரி வந்து தொந்தரவு பண்ணாம இருந்தாலே நல்லது....புரியிதா...

Oct 16, 2008

சார்லஸ்டன் போ.வி.த

--என்னடா பழசெல்லாம் எடுத்து தூசி தட்டி இங்க பதிப்பிச்சு இருக்கேனேன்னு பார்கிறீங்களா.... நம்மளோட ஞாபக மறதி நம்மளையே அப்பப்ப கவுத்து விட்டுரும்....போன வாரம் எங்க இருந்தேன்றதில இருந்து நேத்து என்ன சாபிட்டோம் வரைக்கும் நம்ம ஞாபகத்துக்கு சிக்காம கண்ணா மூசி விளையாடுறது தினசரி விளையாட்டா போச்சு... ம்ம்ம்.... அதான் ....ரெம்ப நாளா நினச்ச விசயத்த...மத்த இடங்கள்ல ஏற்கனவே எழுதி வச்ச நம்மளோட பொக்கிஷ பதிப்புகளை இங்க போட்டிருக்கேன்...-- 

(இது SATURDAY, AUGUST 18, ௨008 அன்னிக்கு பனைநிலம் வலை தளத்தில எழுதுனது....)  

சார்லஸ்டன் போர் விமானப்படை தளம். அதுதான் சார்லஸ்டன் போ.வி.த.

எல்லோரும் பூங்கா, அருங்காட்சி, விழா, அது இதுன்னு என்னன்னமோ எழுதுறாங்க.....ம்ம்ம்ம், நம்ம எதையாவது எழுதி வைக்கலாம்னுதான். ஹிஹி.. கொஞ்சம் வித்தியாசமான இடத்துக்கு போய் பார்ப்போமா. அப்பிடியே நம்ம வண்டியில ஏறுங்க! இப்போ நம்ம 26 ஹைவே வழியா போய்க்கிட்டிருக்கோம். அப்பிடியே போனா நார்த் சார்லஸ்டன் கொஞ்சம் கடந்தா விமான நிலையமே வந்துரும்...ஆனா இப்போ 642 ரூட் பாதையிலே டாச்செஸ்டர் பாதையிலே போய்க்கிட்டிருக்கோம்.....ரெண்டே நிமிசம்தான. இதோ வந்திட்டோம், எல்லாம் இறங்குங்க.

நம்ம ஊரு பஸ்டாண்ட் மாதிரி.....

விமானங்கள் எலிகள் மாதிரி ஊர்ந்து செல்லும் காட்சி....


என்ன எல்லாரும் அப்படி பார்க்கிறீங்க....இப்போ நீங்க பார்கிறதுதான் சார்லஸ்டன் போர் விமானப்படை தளம். அதுதான் சார்லஸ்டன் போ.வி.த. அமெரிக்காவிலே பழைய விமான தளங்களில் இதுவும் ஒண்ணு..கிழக்கு அமெரிக்காவிலே முதல் மூணு பெரிய விமான தளத்திலே இதுவும் ஒண்ணு......ஊரிலிருந்து 10 மைல் தள்ளியிருக்கு....கொஞ்ச நஞ்சமில்ல கிட்டத்தட்ட 3700 ஏக்கர் நிலம் இதுக்கு....6000 பேர் வேலை பார்க்கிற இடம் வேற....  


அப்பாடி எம்மாம் பெருசு......C17 முன்னே ராணுவ வீரர் வாக்கிங் போறாரோ ?



1931 லே இதுக்கான இடம் வாங்கியிருந்தாலும்.....இரண்டாம் உலகப்போரில தான் 1941 லே சார்லஸ்டனோட புவிதள மதிப்பு தெரிஞ்சு போர்விமான தளத்தை நிர்மாணிச்சாங்க......1951 லதான் இதுக்கு சார்லஸ்டன் ஏர் பேஸ் பேர் வச்சாங்க. இன்னொரு விசயம் என்னான்னா, நம்ம இப்ப பயன்படுத்துகிற பொது விமான ஓடுபாதை ராணுவத்துக்கு சொந்தமாகத்தான் இருந்தது.... 1952 லிருந்து பொதுஜன விமானசேவைக்கும் பகிர்ந்தளிக்க சம்மதிச்சாங்க. இதோட 2007 பட்ஜெட் தெரியுமா..அதிகமில்லை ஜென்டில்மேன், 3.3 பில்லியன் டாலர்...அதாவது 3,300,000,000 டாலர்கள்.....யாரும் உணர்ச்சிவசப்பட்டு போய் உடனே வாங்கிட வேணாம்....அமெரிக்கா கொஞ்சம் பிழைச்சிட்டு போகட்டும்.... 


சார்லஸ்டன் தொங்குபாலத்தின் மேலே


இங்கே இயங்குகிற முதன்மையான விமானம்னு சொன்னா...C 17 தான்....இந்த ரக போர் விமானம் 585,000 பவுண்ட் எடையோட 500 மைல் வேகத்தில 6000 மைல் தூரத்துக்கு மேல ஒரே மூச்சுல பறக்கும்... இது நவீனமான அதிவிரைவு வீரர்கள் மற்றும் சரக்குகளை போர்ததளத்திறகு கொண்டு சேர்க்கும் விமானமாகவும் பயன்படுத்தலாம். விகிமேபியாவின் ஏரியல் வ்யூ http://wikimapia.org/#lat=32.899768&lon=-80.057373&z=15&l=0&m=s&v=௨ 


ராணுவ வீரர்கள் ஈராக் பயணம்....நரகத்தை நோக்கி......

நீங்க இப்ப நிற்கிற இடம்....சார்லஸ்டன் விமானநிலையத்திலிருந்து....நம்ம ஊரு பாஷையில சொல்லனும்னா...நடக்கிற தூரந்தான. அப்பிடியே வடமேற்கு வழியா வந்தா C4 இயங்குதளம் இருக்கும், அதுக்கு வடக்கில நீங்க இப்ப பார்க்கிறீங்களே அதுதான் KC10 எக்ஸ்டெண்டர் பேஸ். அதுக்கும் வடக்கில நம்ம ஊரு பஸ்டாண்ட் மாதிரி வரிசையா C17 ஐ நிறுத்தி வச்சிருக்காங்க. அப்பப்ப பொழுது போகலன்னா இங்க இருக்கிற விமானிகள் பயிற்சி பண்றென்னு சொல்லிக்கிட்டு போர் விமானத்தில மின்னல் வேகத்தில ஊர சுத்திப்பாக்க போய்க்கிட்டு இருப்பாங்க..நம்ம காதுக்குதான் பிடிச்சது கேடு! 

சர்லச்டன் மேலே சுற்றும் இராணுவ வல்லூறு


போருக்குத் கிளம்பும் வீரர்கள்....மரணப் பய(ண)ம் ?!!





வலிமையை பறை சாற்றும் ராணுவ விமானங்கள்.....விமான அணி வகுப்பில்

கொசுறு தகவல்:

163 நாடுகள்ள அமெரிக்க ராணுவத்தோட 470,000 ராணுவ வீரர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை பாத்துக்கிட்டிருக்காங்க. உள்நாட்டையும் சேர்த்து மொத்தம் 1.3 மில்லியன் பேர்.

இன்னிக்கு நிலவரப்படி கிட்டத்தட்ட ௩௯ நாடுகளில் இருக்கிற ௮௨0 இராணுவ தளங்களில் இருந்து தன்னுடைய நேரடி மற்றும் மறைமுகமான ஆதிக்கத்தை உலகமெங்கும் செலுத்தி வருகிறது... அமெரிக்கா ராணுவத்தோட மொத்த செலவு $431.7 பில்லியன் டாலர்கள் ஒவ்வொரு வருசத்துக்கும்....(இந்திய ரூபாய்க்கு மாத்தி பாத்து வயித்தெரிச்சல கூட்டிக்க வேண்டாம். )
-----------------------------------------------------------------------
அமெரிக்கா ராணுவ விமானங்கள் பற்றிய சில வீடியோ படங்கள்










Oct 15, 2006

STEM CELLன்னா என்னாங்க

நம்மூர் பொதுசனங்கள், தொன்று தொட்டு அந்தக்கால நாடகங்களாகட்டும்...இடைக்கால மற்றும் இந்தக்கால சினிமாவாகட்டும்... அத்தனையையும் வரையரையில்லாமல் ரசிக்க தெரிந்து கொண்டிருக்கும் அளவிற்கு, அறிவியலை சிறிதேனும் ரசிக்க முயன்றதில்லை...எல்லாவையும் தெரிந்து கொண்டிருக்காவிடினும்...மிகச்சிறந்த....நம் வாழ்வை அன்றாடம் பாதிக்கக்கூடிய அறிவியலை தெரிந்துகொண்டிருப்பதில் எந்த தவறும் இல்லை.
மேலும் அதற்கேற்றார் போல தமிழில் அறிவியல் கட்டுரைகளும் அதன் சமூகத்தாக்கங்களும் மிகக்குறைவு என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்பகுதியில் அறிவியலின் சில சுவராசியமான விஷயங்களை தமிழ்ப்படுத்த, எளிமைப்படுத்த முயன்றுள்ளேன். முதல் பகுதியில் ஸ்டெம் செல்லைப்பற்றி சிறிது பார்ப்போமா



...........................

ஸ்டெம் செல் (stem cell)

முன்னுரை

மருத்துவ உலகில் கிட்டத்தட்ட எல்லா வியாதிகளுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தாலும், தண்டுவட மற்றும் மூளை, சில விநோத இதய, கல்லீரல் வியாதிகள் மருத்துவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் மாபெருரும் சவாலாக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. இந்த உடல் உறுப்புகள் சேதாரமடைந்தால் அதை எப்பாடுபட்டாலும் சரிப்படுத்தி உயிர்காக்க முடியாமல் போனது.

இந்நிலையில் 1998 நவம்பர் மாதம் ஒரு அற்புத வரப்பிரசாதமாக ஜேம்ஸ் தாம்ஸன், விஸ்காஸ்டின் யுனிவெர்சிடி (Wisconsin university) மற்றும் ஜான் கீர்கார்ட், ஜான் ஹாப்கின்ஸ் மெடிசின் ஸ்கூல் (John Hopkins School of Medicine)ஆராய்ச்சியாளர்கள் ஸ்டெம்செல் மகத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். அதற்கு முன்பே (Ernest A. McCulloch and James E. Till - 1960) அது பற்றிய ஆராய்ச்சிகள் வந்திருந்தாலும் மனித கருமுட்டையிலிருந்து ஸ்டெம் செல்லை உருவாக்கும் அற்புதத்தை முதலில் கண்டுபிடித்தது அவர்கள் தான்.

ஸ்டெம் செல் - விளக்கம்

இப்போது ஸ்டெம் செல் தனித்தன்மையை, அது எவ்வாறு மற்ற செல்களிடமிருந்து மாறுபடுகிறது என்பதை பார்த்து விடலாமா..

நம்மூர் மாயாஜாலக்கதைகளில் படித்திருப்பீர்கள் மந்திரக்குள்ளனின் சுண்டு விரல் துண்டுபட்ட மறு நிமிடமே அது மாயமாக வளர்ந்து மற்றொரு குள்ளனாக உருவெடுப்பதாக. அது போன்று நம் உடம்பில் செல்களுக்கு மந்திரத்தன்மை கிடையாது. நம் உடம்பு மிகச்சிக்கலான, உயிர் மூலக்க்கூறுகளினால் உருவாக்கப்பட்ட உயிரினமானதினால் இது போன்ற வளர்ச்சியடையும் சிறப்புத்தன்மைகள் அதற்கு கிடையாது.

ஆனால் இந்த ஆராய்ச்சியாளர்கள் விடாத முயறசியாக நம் உடம்பில் உள்ள சில வகை செல்களை இந்த வகையான தன்மை கொண்டதாக தூண்ட முடியும் என்று கண்டறிந்தார்கள். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் ஒரு மகத்தான மைல்கல். இவ்வகை செல்கள் பல்வேறு கூறுகளாய் பிளவடைந்து அதே போன்ற செல்களை உருவாக்கும் தன்மையையும் (Proliferation), தூண்டல்களுக்கு ஏற்றவாறு சிலவகை சிறப்பு செல்களாகவும் (differentiation) உருவாக்க முடியும் என்றும் கண்டறிந்தார்கள். இவ்வித சிறப்பு செல்கள் பல்கி பெருகி பல்வேறு உறுப்பாக உருவெடுக்கச் செய்யலாம். அங்கனம் இச்செல்கள் எந்த மனித உடம்பின் எந்த பாகமாகவும் உருவாக்கம் செய்து விட சாத்தியமுண்டு. கரு வகை ஸ்டெம் செல்கள் (Embryonic Stem Cells) கரு உருவாகி ஒரளவு வளர்ச்சியடந்த நிலையில் உள்ள செல்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஸ்டெம் செல்களாகும்.




இம்முறையில் உருவான உறுப்புகள் காலகாலமாக தீராத நோய்களுக்கு அருமருந்தாகவும், விபத்துக்களில் பாதிக்கப்பட்ட மற்றும் செயலிலந்த மனிதனுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்து விடுகிறது. இம்மருத்துவத்தின் மகத்துவம் அளவிடமுடியாத மற்றும் ஆச்சரியப்படத்தக்க ஒன்றாகும்.

ஸ்டெம் செல் உருவாக்கம் படத்தில்

1) கரு 2) 5-7 நாட்களான கரு 3) ப்ளாஸ்டோசிஸ்ட் நிலை கரு 4) இளநிலை ஸ்டெம் செல்கள் 5) இரத்த, நரம்பு மற்றும் இதய செல்கள்

இது க்ளோனிங் (cloning) எனப்படும் நகல்தன்மையிடமிடந்து மாறுபட்ட ஒன்றாகும். க்ளோனிங்கின் மூலம் உங்கள் உடல் செல்லின் மரபுத்தன்மையை மட்டும் எடுத்து, மரபுத்தன்மை நீக்கப்பட்ட கருவினுள் செலுத்தி அக்கருவை முழு உயிரினமாக வளரச்செய்தால் அது அச்சு அசலாக உங்களைப் போன்ற ஒருவரை உருவாக்கி விடலாம். இம்முறையில் பல நகல் மனிதர்களை உறுவாக்குவது சுவராசியத்தினை விட சமூகக்குழப்பங்களையும் மனக்குழப்பங்களையும் உண்டாக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

ஆனால் ஸ்டெம் செல் உடம்பிலிருந்தே உள்ள செல்களைக்கொண்டு உடல் பாகங்களை உருவாக்கி உயிர்காத்து மற்றும் நோய் தீர்ப்பதால் அதை ஒப்பிலா மருத்துவம் என்றே கூறவேண்டும்.





ஸ்டெம் செல்லிருந்து பல்வேறு உடல் பாகங்கள் உருவாவதை விளக்கும் படம்
இவற்றையும் மீறி விபரம் தெரியாத சில அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் இவ்வித ஆராய்ச்சிகளை முடக்கிவிட முயற்சிக்கிறார்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் அமெரிக்க சனாதிபதி ஜார்ஜ் புஷ், ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கான பண ஒதுக்கீட்டை முடக்கிவைத்து ஆணையிட்டது. இது இத்துறையில் உள்ள அமெரிக்க ஆராய்ச்சியாளர்க்கு ஒரு பேரிடியாக அமைந்தது (செய்தி இங்கே http://news.bbc.co.uk/2/hi/science/nature/5197926.stm).


ஸ்டெம் செல் பற்றிய ஜார்ஜ் புஷ் மீதான கேலிச்சித்திரம



ஆனால் அறிவியலின் வளர்ச்சியை இது போன்ற சிந்தனையில்லா முயற்சிகளால் தடுக்க முடிந்ததாக சரித்திரம் இல்லை.

ஸ்டெம் செல் வளரும்....அறிவியலும் வளரும்.....

மேல் விபரங்கள்.

http://www.dnalc.org/stemcells.html

http://www.cnn.com/interactive/health/0107/stem.cell/frameset.exclude.html

http://www.stemcellresearchfoundation.org/WhatsNew/EmbryonicStemCells.htm

http://stemcells.nih.gov/info/basics

http://ec.europa.eu/research/quality-of-life/stemcells.html

http://www.newscientist.com/channel/sex/stem-cells

செந்தில்குமார்

Sep 30, 2006

கடவுள் உண்டா ? The God Delusion ~ Richard Dawkins *

(புத்தக விமர்சனம்)


இதை விட அழகாக கடவுள் தன்மையை பகுத்து ஆராய்ந்து, அதன் வேரினுள் ஊடுருவி அதன் ஆதாரங்களின் அத்தனை அங்கங்களையும் உலுக்கியெடுக்கும் வண்ணம் கேள்வி கேட்கமுடியுமா என்று வியக்க தோன்றுகிறது.

மனநம்பிக்கை, ஒருவகையில் மனிதனுக்கு ஆதாரமாக இருப்பதாக எடுத்துக்கொண்டால், மறுவகையில், அது மனிதனின் சிந்தனையை ஆழமாக முடமாக்குவதை மிக நேர்த்தியுடன் இப்புத்தகத்தில் ஆராய்ந்துள்ளார் - ரிச்சர்ட் டாவ்கின்ஸ்

அறிவியலும் நம்பிக்கையும் எவ்வாறு முரண் படுகிறது என்பதை
(ஆங்கிலத்தில்) Science, based on scepticism, investigation and evidence, must continuously test it own concepts and claims. Faith, by definition, defies evidence: it is untested and unshakeable, and is therefore in direct contradiction with science என்றும்

அது போல நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த மதங்களின் மறுபக்கத்தினை...
though religions preach morality, peace and hope, in fact, they bring intolerance, violence and destruction. என்றும் கூறுகிறார்

சமீபத்திய சர்ச்சைக்குள்ளான "intelligent design" தத்துவபோராட்டஙகள் , அறிவியலை கட்டுப்படுத்தும் மூடத்தனமான முயற்சி என வலியுருத்துகிறார் ( பார்க்க வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ்).


[அனைவரும் - மதநம்பிக்கையுடையோரும் - படித்து சிந்திக்க வேண்டிய அருமையான புத்தகம்]

ரிச்சர்ட் டாவ்கின்ஸ் -- இன்றைய தலைமுறையின் தலை சிறந்த அராய்ச்சியாளர் சிந்தனைவாதிகளில் ஒருவர்.

click below for more

ரிச்சர்ட் டாவ்கின்ஸ்
பற்றி

ரிச்சர்ட் டாவ்கின்ஸ் - வலைத்தளம்

வீடியோ

மேலும் விபரங்கள் (விகிபீடியா)

பிபிசி